இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Grok பரிதாபங்கள்!!

படம்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் விஜய் அவர்கள் அமர்ந்திருந்தாலும், X சமூக வலைதளத்தைப் பொறுத்தவரை இன்றளவும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்களே நீடிக்கிறார். CMOTAMILNADU பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்த பதிவு வெளியாகியுள்ள நிலையில், அதனை மொழிபெயர்ப்பு செய்த X நிறுவனத்தின் GROK ஆங்கிலத்தில் முதலமைச்சர் விஜய் என குறிப்பிடுவதற்கு பதிலாக ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்' என குறிப்பிட்டு வருகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது 17வது பட்டமளிப்பு விழா !!

படம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த மருங்கூர், கீழக்கொல்லையில் உள்ள  நேஷனல் கல்வியியல்  கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் & தாளாளர் அர்ஜுன் தலைமையேற்று வரவேற்றார். டிஎன்எஸ்சிஇஎம்ஏ செகரட்டரி நடராசன்,  துணை பதிவாளர் துரைராஜ், மெம்பர் ஆப் சின்டிகேட் சப் கமிட்டி நாராயணன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆஷா ரோஸ்லின் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார்.  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக துறை தலைவர்,  பதிவாளர் ராஜசேகரன்,   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.   இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும்  மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 2026 2027 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

பள்ளிக்கல்வித் துணை இயக்குநருக்கு பணி நிறைவு! பாராட்டு விழா!!

படம்
கடலூர் மாவட்டம், பேர்பெரியாங்குப்பம் எம் ஆர் ஆர் மஹாலில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்ககத்தின் தனியார் பள்ளிகள் துணை இயக்குனரும்  முன்னாள் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின், மாவட்ட கல்வி அலுவலருமான உயர்திரு அ.துரை பாண்டியன் அவர்களுக்கு   பல்வேறு முதுகலைஆசிரியர் சங்கங்கள் , பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள்,பொதுநல அமைப்புகள், சார்பில் பணி நிறைவு பாராட்டு நடைபெற்றது. இவ்விழாவில்  பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் கெளரவரத் தலைவர்.தமிழ்ச்செம்மல் முனைவர் இரா. சஞ்சீவிராயர் , செயல் தலைவர் நல்லாசிரியர் முனைவர் ராஜா ஆ, சங்கத்தின் பொருளாளர் சி. கோமேதகன், ம. கோபிநாத், ப.சாமிப்பிள்ளை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பாராட்டு விழாவில் பல்வேறு முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!!

படம்
கோவை மாவட்டம், உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.  இதில், சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.  உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, கோவையில் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மேற்கொண்டனர். ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவையில் சமூக ஆர்வலர்கள், சிறார்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியை துணை ஆட்சியர் ஹரிப்பிரியா, காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, சைக்கிள் பேரணியிலும் கலந்து கொண்டனர். இத...

குடியாத்தம் ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி. பயிற் சிமையம் WORLD.WONDERS.Of. RECRD இணைந்து நடத்தும் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கே எம் ஜி கலையரங்கம் கே எம் ஜி கலை &. அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாய் டெய்லரிங். ஆரி பயிற்சி மையம் விக்ரமன், தினேஷ் தலைமை தாங்கினார். CEO m. மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.க.சிந்து. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் பின்பு சாதனையாளர்களுக்கு விருதுகள் வாங்கி பாராட்டினார்.  இதில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் பி. எல். என். பாபு. மற்றும் குமார் அவர்களுக்கு விருதுகளை வழங்கினார். மற்றும் தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்றக் கழக சங்கம் நகர கௌரவ தலைவர். டி. எஸ். மணி மாநிலத் துணை தலைவர். தங்கமணி .நகர் தலைவர். எஸ். சங்கர்நகர பொருளாளர். ஏ. திருநாவுக்கரசு நகர செயலாளர். சுந்தர்ராஜன் . மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர். சவீதா நகர செயலாளர். இளங்கோ ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.  இதில் பரதநாட்டியம் தையல் கலை மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதில் ...

மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - இளைஞர் கைது!!

படம்
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குதிரை ஒட்டி போக்சோ சட்டத்தில் கைது. சவாரி செய்வதற்காக குதிரையில் ஏறிய சிறுமியிடம், குதிரை ஓட்டி நித்திஷ் (18) பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், அவரைப் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

படம்
🔹  ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவிச்சாயம் பூசப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இந்த விவகாரத்திலும் முதலமைச்சர் விஜய் பயந்து நடுங்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம். 🔹 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம். ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமாரும் இடமாற்றம். 🔹 திமுகவின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி. GenZ தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி. 🔹 நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி. தாயை இழந்த அஜித்குமாருக்கு கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர். 🔹 அபிஷேக் பானர்ஜி மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு. சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக மம்தா பரபரப்பு புகார். 🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல். கற்கள், முட்டைகளை வீசி கடுமையாக தாக்கியதால் பலத்த காயம். 🔹 தேர்தல் வெற்றிக்கு பிறகு சொந்த மாவட்டம் சென்ற எடப்பாடி பழன...

மதுரை: திருமங்கலத்தில் பொருட்காட்சிக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு கூட்டாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில், 4 சிறார்கள் கைது!!

படம்
கைதானவர்களில் மூவருக்கு 16 வயது எனவும் ஒருவருக்கு 13 வயது எனவும் போலீசார் தகவல். மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் 13 வயது சிறுமியை கூட்டாக பாலியல் துன்புறுத்தல் செய்த புகாரில், 4 சிறார்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கோயில் திருவிழாவை ஒட்டி நடக்கும் பொருட்காட்சிக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் தன்னை 4 பேரும் துன்புறுத்தியதாக சிறுமி, தாயாரிடம் கூறிய நிலையில் போலீசில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கோடை கால இலவச ஓவிய பயிற்சி நிறைவு விழா!!

படம்
வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவது பிறந்தநாள் மற்றும் மே--1,தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப்பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஒருமாதம் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பு 30-05-2026 அன்று நிறைவுபெற்றதையொட்டி மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவிய வண்ணம் தீட்டும் உபகரணங்கள் வழங்கும் நிறைவு விழா வேலூர் மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு   தலைமையில் குடியாத்தம் புவனேசுவரிப்பேட்டை பெரியார்  அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால்  அனைவரையும் வரவேற்று பேசினார். குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம்  இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேனாள்  மாவட்ட செயலாளர் தி.க. கு. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர திராவிடர் கழகத் தலைவர் சி.சாந்தகுமார்  இந்நிகழ்வில் புரட்சி பாடல்களை பாட...

நடிகை ராகுல் ப்ரித்தி சிங் கோவையில் புதிய உணவகம் ஆரம்பிக்கிறார்!!

படம்
கோவை மாநகரின் மையப்பகுதியில்ச் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் ஏற்கனவே பல பிரீமியம் உணவகங்களும், நவீனக் கஃபேக்களும் (Cafés) இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியின் போட்டியை அதிகரிக்க தென்னிந்திய சுவைகளை மையமாகக் கொண்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய உணவகம் இப்பகுதிக்கு வர உள்ளது. கோவை மாவட்டம்,கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் ஏற்கனவே பல பிரீமியம் உணவகங்களும், நவீனக் கஃபேக்களும் (Cafés) இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதியின் போட்டியை அதிகரிக்க தென்னிந்திய சுவைகளை மையமாகக் கொண்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய உணவகம் இப்பகுதிக்கு வர உள்ளது. கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

ராணிப்பேட்டை மாவட்ட பி எஸ்பி நிர்வாகம் விரைவில் அறிவிப்பு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட நிர்வாகம் கலைக்கபட்டடு புதிய நிர்வாகம் அறிவிக்க  மாநில தலைவர் முடிவு செய்து உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா.சுதாகர்  தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அரக்கோணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையில்  பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் சார்பில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலையும் தனித்து சந்தித்தது இந்த நிலையில் தமிழ் மாநில தலைவர் டாக்டர் ஆனந்தன் அவர்கள் உத்தாவின் பேரில்  ராணிப் பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி  நிர்வாகம்  கலைக்கப்படுவதாகவும் விரைவில் மாவட்ட தலைவர் பா.சுதாகர்  தலைமையில் புதிய நிர்வாகம் அறிவிக்கபடும் என்கிற தகவலை மாநில தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பா சுதாகர் செய்தியாளர்களிடம் கூறினார்.  அரக்கோணம் செய்தியாளர் ரவி.

திருமயம் அருகே வாணப்பட்டறையில் தீ விபத்து!முன்னாள் அமைச்சர். ரகுபதி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா பில்லமங்கலத்தைச்சேர்ந்தவர் கருப்பையா(52). இவர் அதே ஊரில் தனி இடத்தில் ஓட்டு கூடத்தில் வாணப்பட்டறை நடத்திவருகிறார்.அரசு லைசைன்ஸ் பெற்று தொழில் செய்து வந்தார்..விழா காலங்களில் பயன்படுத்தும் தோரண வெடி,வாண வெடி,  கலர்வெடி தயாரித்து விற்று வந்தார்.நேற்று திருவிழா ஆர்டருக்கு வெடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அவருக்கு உதவியாக அதே ஊரைச்சேர்ந்த  பிரம்மன்(54) வேலை பார்த்தார். வெடி மருந்துகளை கூட்டி அள்ளிய போது மருந்து தீப்பற்றி  எரிந்தது.  உள்ளே  கட்டியிருந்த  வெடிகளும் ஒரே நேரத்தில் பயங்கர சத்த த்துடன்  வெடித்தது. இதில் கருப்பையா உடல் சிதறி  அதே இடத்தில் பலியானார். பிரம்மன் படுகாயத்துடன் திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.,பொன்னமராவதி டிஎஸ்பி சரவணன், முன்னாள் அமைச்சர் மற்றும்திருமயம் எம்எல்ஏ ரகுபதி தீயணைப்புத்துறை துணை இயக்குநர் முரளி,மாவட.ட தீயணைப்பு அலுவலர் சத்திய கீர்த்தி ,கியூ பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர. முன்னாள் அமைச்சர் ர குபதி இறந்துபோன கருப்பையாவின் குடும்பத்தி...

திருமயம் அருகே வாணப்பட்டறையில் பயங்கர தீவிபத்து; ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!!அமைச்சர் ஆறுதல்!!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே வாணப்பட்டறையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகியும்.  மற்றொருவர் படுகாயம். அடைந்த சம்பவம் குறித்து அறிந்த தொழிலாளர் நலன்,திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்.வேஸ் நேற்றிரவு பில்லமங்கலத்திற்கு வந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் விசாரித்தார். அதனை தொடர்ந்து விபத்தில் பலியான கருப்பையாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

சென்னையில் இலங்கை தமிழ்ப் பெண் கொலை!!

படம்
சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை தமிழ்ப் பெண் கொலை: போலீசார் விசாரணை தனியார் மதுபான பாரில் நடனமாடுவதில் யான்சி (18) என்பவர் தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் யான்சி சென்ற இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றியுள்ளார். கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

17 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!!

படம்
        இடி மின்னலுடன் கனமழை: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

Permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.”-உதயநிதி ஸ்டாலின்!!

படம்
“தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட Permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது." ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம். 'புது உருட்டு' தமிழ்நாடு அரசு ஜனவரியில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடும்போது, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?” -ஆளுநர் நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

சென்னையில் டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு!!

படம்
சென்னை தண்டையார்பேட்டையில் உணவு டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு. டெலிவரி ஊழியரான சோமன் (27), 'தான் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறேன்; செல்போனை பார்க்காமல் விரைவாக உணவைக் கொடுத்து அனுப்புங்கள்' என கூறியதால் உணவக மேலாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!!

படம்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல். கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதாகப் புகார். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

திருமயம் அருகே கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.05.2026  ம் தேதி மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்  நடந்தது. அதில். பெரிய மாடுகள் பிரிவில் 6 வண்டிகளும்,சிறிய மாடுகள் பிரிவில் 7 வண்டிகளும் பங்கேற்றன.  போட்டியில் முதல. 4 இடங் களைப்பெற்ற  மாட்டு வண்டி உரிமையாளர்கள்,அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள்,கிரைண்டர்,மிக்சி போன்றவை வழங்கப்பட்டன.  போட்டி கடியாபட்டி அரிமளம் சாலையில் நடைபெற்றது.  அதனை திரளான மக்கள் பார்த்து ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

மாநில இளைஞரணி தலைவராக டாக்டர். சுரேஷ் தேர்வு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்  புதுப்பேட்டை பகுதியில்  புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன்  டாக்டர் சுரேஷ் இவர் ஒரு சிறந்த உடற்கல்வி வல்லுனராகவும் சிறந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சேவகராகவும் பணியாற்றி வருகிறார் இவரது சிறப்பான பணிகளை பாராட்டி வரும் வேளையில்  விஅன்னை தெரசா சமூக சேவை இளைஞர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் G.ராஜ்குமார் அரக்கோணம் இளைஞரை மாநில இளைஞர் அணி தலைவராக  நியமனம் செய்து உள்ளார். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

தமிழக அரசுக்கு டிடிவி. தினகரன் கண்டனம்!!

படம்
"நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது" திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மயக்கமடைந்ததாக செய்தி பரவிய நிலையில்,  -டிடிவி தினகரன் கண்டனம். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நடு ராத்திரியில் கோவை அரசு மருத்துவமனையில் ரெய்டு நடத்திய அமைச்சர்!!

படம்
கோவை மாவட்டம்,நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர். சம்பத்குமார். கோவை: தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. அமைச்சர்கள் அவரவர் சார்ந்த துறைகள், மாவட்டங்களில் சர்ப்ரைஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில்களில் மாறுவேடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆய்வு செய்தார். மருத்துவர்கள், பணியாளர்கள் சரியாக பணி செய்கிறார்களா, மருத்துவமனைக்கு வருகிறார்களா, சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை பல்வேறு பிரிவுகளுக்கு சென்று சுமார் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா ? என ஆய்வு செய்தார். நள்ளிரவு டிஷர்ட் அணிந்தபடி மருத்துவமனையில் சர்ப்ரைஸ் ரெய்டு மேற்கொண்டார்.  மக்கள் பணி தொடரும் . கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

சட்டம், ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும்! -பிரேமலதா விஜயகாந்த்!!

படம்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சென்னையில் சிறுவனுக்கு வன்கொடுமை, மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என செய்திகள்; குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது மிகுந்த வேதனை, பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!!

படம்
ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மை செயலராக மாற்றம் சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளினி நியமனம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமனம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா நியமனம்  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

மூடப்பட்ட டாஸ்மாக் கடை, உரிமையாளர் தவெகவில் இணைந்ததால் மீண்டும் திறக்கப்பட்டது!!

படம்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..!  விசாரணையில் பார் உரிமையாளர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்ததால் திறக்கப்பட்டது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நடிகர். அஜித்குமாரின் தாயார். மோகினி அவர்கள் மறைந்த செய்தியறிந்து, திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்!!

படம்
நடிகர். அஜித்குமாரின் தாயார். மோகினி  அவர்கள் மறைந்த செய்தியறிந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்!  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான இரங்கல் செய்தியில், "அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார். மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் உயிர்கொடுத்து, தன் மகன் திரையுலகில் மாபெரும் உயரங்கள் தொட்டதைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை" என்று உருகியுள்ளார்.  மேலும், அன்னையுடனான அழகிய நினைவுகளும் தருணங்களுமே இந்தத் தாள முடியாத துயரத்தில் இருந்து அவர் மீண்டு வரத் துணைநிற்க வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் இரங்கலையும் பகிர்ந்து கொண்டுள்ளார் தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

புவனகிரியில் கம்பி வளைப்போருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது!!

படம்
கடலூர் மாவட்டம், புவனகிரியில் கம்பி கட்டும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. புவனகிரியில் உள்ள ஓம் சக்தி டிரேடர்ஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த  விக்கி இன்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிடெட் இணைந்து பிரபல ஐ ஸ்டீல்  கட்டுமான கம்பி நிறுவனம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்ச்சி மூகாம்பிகை திருமண மண்டபத்தில் ஓம் சக்தி டிரேடர்ஸ் உரிமையாளர்கள்  சுந்தரேசன் மற்றும் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் புவனகிரியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர் இந்த நிகழ்வில் கம்பி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கம்பிகள் குறித்து அதன் பயன்பாடுகள் பயன்படுத்தும் விதம் அதன் தரம் மற்றும் உற்பத்தி குறித்தான கலந்தாய்வு கட்டிட தொழிலாளர்களுடன் நடைபெற்றது தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு  விக்கி நிறுவனம் சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விக்கி நிறுவனம் சந்தோஷ்  மேலாளர்  சந்தோஷ் முருகன் விற்பனை அதிகாரி  அழகு வேலன் மதன் தொழில்நுட்ப மேலாளர்  பிரகாஷ் சேல்ஸ் சப்போர்ட்  ஆகியோர் பங்கேற்று கலந்தாய்வு நடத்தினர். வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை சார்பாக, 19வது ஆண்டு ரோஜாக்கூட்டம் விழா 2029 எனும் தலைப்பில், ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது!!

படம்
கோவை மாவட்டம்,கோவை இராம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க மண்டப அரங்கில்,   நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட்  அமைப்பு, தனது 19வது ரோஜாக்கூட்டம் தினம் விழா 2026, எனும் தலைப்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை நடத்தியது. இந்த விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், கல்வி கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என  பலரும் கலந்துகொண்டனர். கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்த ரோஜாக்கூட்டம் எனும் திட்டம், நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் முதன்மை திட்டமாக விளங்கி வருகிறது. இந்த திட்டத்தின்  மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விப் உபகரணங்கள் உதவித்தொகை மற்றும் உயர்கல்விக்கான ஆதரவும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார், 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரடியாக பயனடைந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் முதலிடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு நலதிட்ட உதவிகள்  வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியினை,  நேட்டிவ் மெடிக்கேர் நிற...

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், புற்றுநோய் விழிப்புணர்வு “ஸ்பின் வீல்” க்யூ ஆர், குறியீட்டை அறிமுகப்படுத்திய மாநகர காவல் ஆணையர் கண்ணன்!!

படம்
கோவை மாவட்டம்,உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுமையான “புற்றுநோய் விழிப்புணர்வு ஸ்பின் வீல்” க்யூ ஆர், குறியீட்டை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன்  தலைமை தாங்கினார்,  ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், கூறியதாவது.. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை எளிதில் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அ...

கோவை உப்பிலிபாளையத்தில் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக பெருவிழா கோலாகலம்!!

படம்
கோவை மாவட்டம்,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா  பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.மகா கும்பாபிஷேக பெருவிழா  அறக்கட்டளை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையிலும், செயலாளர் வழக்குரைஞர் ஜெயசந்திரன், பொருளாளர் வனவாசன், துணைத்தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது. பழமை மிக்க இந்த ஆலயத்தில் பல கட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ராஜகோபுரம், கருவறை, கல் மண்டபம், வசந்த மண்டபம், ராஜராஜேஸ்வரி சிலை உள்ளிட்ட பல்வேறு புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும்  காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை சுவாதி நட்சத்திர நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பேரூராதீனம் மற்றும் சிரவை ஆதீன அடிகளார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் இருந்து கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 27ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப...

முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கம் மட்டும் பக்தர்களின் கூட்ட நெரிசலால் பெண்கள் சிறுமிகள் மயக்கம்-கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு!!

படம்
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு குவிந்து வருகின்றனர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையிலும் ஆங்காங்கே சிறுமிகள் பெண்கள் மயக்கமடைந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக சன்னதி தெரு, கீழரத மேல ரத வீதிகளில் முறையாக தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என பக்தர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  16ஆம் கால் மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதை தடுப்பு கம்பிகள் வைத்து இருபுறமாக அடைத்து வைத்து மக்கள் அனுமதிக்கப்பட்ட வருவதால் நெரிசல் அதிகமாக காணப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி ஆங்காங்கே ஏற்பாடு செய்யாததாலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆங்காங்கே மயக்கம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சாமி தரிசனத்திற்காக ...

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில்.கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதனை அடுத்து .கெங்கையம்மனுக்கு. காப்பு கட்டுதல். நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.  நேற்று முன்தினம் இரவு ஆஞ்சநேயர் சுவாமி உற்சவம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று காலை அம்மன் கோவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிறிசு மிதந்து வந்தது நேர்த்திக்கடனக்காக சேவல்களையும் பலி கொடுத்து நேர்த்திக்கடனை செய்தனர் ‌ மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஆடுகளை. பலி கொடுத் நேர்த்திக்கடனை செய்தார்கள் தொடர்ந்து அம்மன் சிறுசு கோயிலுக்கு கொண்டு  செல்லப்பட்டது. பின்னர் கண் திருப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது நிகழ்ச்சியில் குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர் விழாக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் தட்ட பாறை சின்னாளப்பள்ளி கிராம பொதுமக்கள் ஊர் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். க...

தேனியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை!மாவட்ட காவல்துறை கைது செய்து நடவடிக்கை!!

படம்
தேனி மாவட்டம்,தேனி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை வைத்து வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்த நபர் மீது தேனி மாவட்ட காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் குற்ற எண் 332/2026-ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். மேலும், மதுபான விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்படடது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அடையாளச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!!

படம்
மதுரையில் இந்திய வைத்தியர்கள் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக அடையாளச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆனையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கம் சார்பில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது .  இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில்  V.லெட்சுமி, C.பொன்னுச்சாமி மற்றும் காஜா மைதீன் ஆகியோருக்கு அடையாள சான்றிதழ் வழங்கப்பட்டது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நெமிலி அருகே கடம்பநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே கடம்பநல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் திருக்கோயில் நிர்வாகிகளான சீ.அசோக்குமார், மணி, சம்பத் ஆகியோரின் முன்னிலையில், நெமிலி ஒன்றிய கவுன்சிலர். அ.வரலட்சுமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு மற்றும் சயனபுரம் ஊராட்சிமன்றத் தலைவர். பவனி வடிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர். மஹா கும்பாபிஷேக விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறைவனின் அருளைப் பெற்றனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஸ்ரீ கற்பக விநாயகரின் அருளால் கிராம மக்கள் அனைவரும் வளமும் நலனும் பெற்று வாழ வேண்டுமென பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவில் கடம்பநல்லூர், திருமாதலம்பாக்கம், மாங்காட்டுச்சேரி, முருங்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள...

புதிய தலைமுறை சேனலை அரசு முடக்கியதாக பரவும் தகவல் தவறு.நடந்தது என்ன?

படம்
புதிய தலைமுறை சேனலை அரசு முடக்கியதாக பரவும் தகவல் தவறு. நடந்தது என்ன? நியாயத்தின் பக்கம் என்றுமே தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிற்கும்.      சிந்தியுங்கள். இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் உண்மைச் செய்திகளை திரித்து பரபரப்புக்காக பொய்ச் செய்திகளையே ஒளி ஒலி பரப்புகிறது. ஒரு அரசு அமைந்த 18 நாட்களுக்குள் பல கோடி கனிம உளழல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்றுக் கூட திருச்செந்தூர் கோவில் காவலர்கள், தீட்சிதர்கள் லஞ்சம் வாங்கியதாக அந்த 4 பேரையும் அறநிலையத் துறை அமைச்சகம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. இந்த உண்மைகளை திரித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களில் புதிய தலைமுறையும் ஒன்று. பரபரப்புக்காக முந்திக் கொண்டு அவதூறு செய்திகளை வெளியிடும் எந்த ஒரு ஊடகங்களையும் தயவு தாட்சயமின்றி முடக்குவதை அரசு தயக்கம் காட்ட வேண்டாம். பத்திரிகை, ஊடகங்கங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு தேவை. அது தமிழகத்துக்கு உடனே தேவை. உண்மையில் தவறு செய்யும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்க கூடாது. பத்திரிகை, ஊடக தர்மம் காப்பாற்றப்பட வேண்டும். - மு...

குமரி. கனிம வள லாரிகளின் அனுமதி சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்த மூன்று போலீசார் பணியிடை நீக்கம்!-மாவட்ட எஸ்.பி.டாக்டர். ஸ்டாலின் அதிரடி!!

படம்
நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிம வள கடத்தல் நடந்து வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்துகளும் நடந்து வந்தது. மேலும் போலி அனுமதி சீட்டு மூலம் கனிம வளங்கள் கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.  ஆனால் அதை எல்லாம் மீறி புது புது வழிகளில் கனிமவள கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. மேலும் கனிமவள கடத்தல் கும்பல்கள் சோதனை சாவடியில் போலி அனுமதி சீட்டுகளை உண்மை என கூறி போலீசாரை ஏமாற்றி கனிமவள கடத்தல்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது.  இந்நிலையில் நான்கு வழி சாலையில் உள்ள குமாரபுரம் அருகே காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கனிமவள லாரிகளின் அனுமதிச்சீட்டை முறையாக சோதனை செய்யாமல் அனுமதித்ததாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட எ...

2 வாரத்தில் வெள்ளை அறிக்கை!!

படம்
பதவியேற்பின்போது வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் கூறியிருந்த நிலையில், இன்னும் 2 வாரங்களில் அது வெளியாகும் என தகவல் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாராகி வருவதாகவும் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் மரிய வில்சன் உறுதி. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

அரிமளம் அருகே நெடுங்குடியில் நடைபெற்ற தேர்திருவிழா!!

படம்
அரிமளம் ஒன்றியம் நெடுங்குடியில் தென் கயிலாயம் என அழைக்கப்படும்  கைலாசநாதர்_ பெரியநாயகி அம்மன் திருக்கோயில் பெரிய குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு வைகாசி விசாகத்திருவிழா21 ம்தேதி காப்புக்கட்டும் வைபவத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா ஆகியவை நடந்தன. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று கோலாகலமாக  நடந்தது.   கைலாசநாதர் ஒரு தேரிலும் அம்மன் மற்றொரு தேரிலும் எழுத்தருளினர். பிறகு தேர்காலிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்பு  நெடுங்குடி,அதனைச்சுற்றியுள்ள கிராம முக்கியஸ்தர்கள்,புதுக்கோட்டை தேவஸ்தான பணியாளர்கள் சேர்ந்துவடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் கோயிலைச்சுற்றி 4 வீதிகளிலும் வந்து மாலை நிலைக்கு வந்த து. தலைமை சிவாச்சாரியார் கணேசன் தலைமையில் 11 சிவாச்சாரியார்கள்  அபிஷேக, ஆராதனைகளை செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

படம்
🔹 சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. 🔹 தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததால், சிரமம் அடைந்த மக்கள். அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. 🔹 சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், வெயில் காலங்களில் வேதனையில் உழலும் டெலிவரி ஊழியர்கள். மழைக் காலத்தைப் போல, கடும் வெயிலிலும் சிறப்புத் தொகை வழங்க ஆன்லைன் செயலி நிறுவனங்களுக்கு கோரிக்கை. 🔹 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரவில் மின் வெட்டு தொடருவதால், மக்கள் போராட்டம். புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போதே மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு. 🔹 டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை 2028 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை. 🔹 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்த...

மகள் கண் முன்பே தந்தை கொலை!!

படம்
திருவாரூர்: சேங்காளிபுரம் பகுதியில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை. மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி தந்தையின் கொலையை பார்க்க வைத்த கொடூரம். மது போதையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகனை வீட்டிற்குள் புகுந்து வெட்டிக்கொன்ற 6 பேர். திருமுருகனின் மனைவி மற்றும் மகனும் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.