இடுகைகள்

ஏப்ரல், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விழுப்புரம் அருகே 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் சென்று ஆய்வு!

படம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேமங்கலம் ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பில், 4 ஏக்கர் பரப்பளவில் தனிநபர் விவசாயி கொய்யாக்கன்று பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.  அதனைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருவேல்பட்டு ஊராட்சியில், வேளாண்மைத்துறையின் கீழ், இயங்கும் விதை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்!

படம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் மேல்மலையனூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் (Focus Block Development Programme) தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட திட்டக்குழு அலுவலர் பூ.நடராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.  அதனைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருவேல்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் வட்டார மருத்துவ அலுவலர் மரு.காயத்ரி உட்பட பலர் உடன் இருந்தனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

பண்ருட்டியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு!

படம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது.பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தலைமையில் இதற்காக பயிற்சியளிக்கப்பட்டது. இதை வேளாண்மை அலுவலா் அனிதா, துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் காா்முகிலன் ஆகியோா் முன்னின்று நடத்தினா். தொடா்ந்து, செட்டிபாளையத்தில் நெல் வயல்களில் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு தொடா்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 39 வருவாய் கிராமங்களிலும் இந்தப் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்தாா். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கடலூர்- கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு!

படம்
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரம் சி .மேலவன்னியூர் , ஆயிப்பேட்டை ஆகிய கிராமங்களில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியினை கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் மு.லட்சுமிகாந்தன் ஆய்வு மேற்கொண்டார். நடப்பு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி தற்போது கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்றது.  இந்த நிலையில் கீரப்பாளையம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் பயிர் கணக்கெடுக்கும் பணியினை இன்று (ஏப்.29)கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் மு. லட்சுமி காந்தன் ஆய்வு செய்தார். உரிய காலக்கெடுவிற்குள் இப்பணியினை முடித்திடவும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்பணியை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஜே ஏ எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் ஆகியோர் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் செ. அமிர்தராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜ்பாபு, வெங்கடேசன், பயிர் அறுவடை பரிசோதகர் வீராசாமி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர்களுக்கானபணி நிறைவு பாராட்டு விழா!!

படம்
கடலூர் மாவட்டம்,திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நிறைவு நாளில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.  முகாம் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் முனைவர் ராஜா ஆ வரவேற்புரை ஆற்றினார். இப்பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு கடலூர் மாவட்ட கல்வி அலுவலர். ஞான சங்கர் அவர்கள் தலைமையில், முகாம் தொடர்புகள் அலுவலர் .தேவநாதன் அவர்கள் பள்ளி ஆய்வாளர். ஜீவானந்தம் , முகாம் மதிப்பீட்டாளர்.பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கடலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களான. ஜான் ஜேம்ஸ். வில்லியம்ஸ். டொமினிக்.லூக்காஸ் திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். திருக்குமரன் குறிஞ்சிப்பாடி எஸ் கே வி பள்ளி. குமார் ஆகியோர் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்றனர்.  மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வ...

நெய்வேலி என்எல்சியில் நடைபெற்ற தொழிற்சங்க அங்கீகார தேர்தல்: தொமுச அமோக வெற்றி!!

படம்
நெய்வேலியில் நேற்று நடந்த என்எல்சி தொழிலாளர் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் திமுகவின் தொழிற்சங்க பிரிவான தொமுச அதிக வாக்குகள் பெற்று முதன்மை சங்கமாக வெற்றிபெற்றது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சங்க அங்கீகாரத்-துக்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.  என்எல்சியில் மொத்தமுள்ள 6,800 தொழிலாளர்கள் வாக்களிக்கும் இந்த தேர்தலில் 6 தொழிற்-சங்கங்கள் போட்டியிட்டன. நேற்று என்எல்சியில் சுரங்க அலுவலகம், நிர்வாக அலுவலகம், அனல்மின் நிலைய அலுவலகம் உள்ளிட்ட 11 இடங்களில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. காலை 5.30 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் மின்னணு வாக்குப் பெட்டிகள் வட்டம் 9ல் உள்ள என்எல்சி நடுநிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு இரவு 9 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இந்நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று நள்ளிரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்த வாக்குகள் 6,57...

நெமிலி ஒன்றிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியதமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா,மாநில பொதுச்செயலாளர.தாஸ்  நல்லாசியுடன் இன்று மாவட்டத் தலைவர் .இரா. விநாயகம் தலைமையில் பனப்பாக்கத்தில் நடைபெற்றது. நெமிலி வட்டாரச் செயலாளர் நா.சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைமை நிலையச் செயலாளரும், இராணிப்பேட்டை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பா.பாலமுருகன்அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு, பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கி.எல்லப்பன், பாராட்டி, மாநில அமைப்பின் சார்பாக அன்னாருக்கு சந்தன மாலை, பொன்னாடை அணிவித்து கேடயமும் நினைவுப்பரிசும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். வட்டார ஓய்வு பிரிவு செயலாளர் அருள்ஜோதி,வட்டாரத் தலைவர்ஏ.சரவணன், வட்டார மகளிரணிச் செயலாளர் கோ.பொற்கொடி, மேனாள் வட்டாரத் தலைவர் தண்டபாணி,ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் .சிவக்குமார்,மாவட்ட பொருளாளர் அ.பிரகாசம், அரக்கோணம் கல்வி மாவட்ட செயலாளர் க.வாசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  பணிநிறைவு பெற்ற சு.கொளத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஜாக்டோ-ஜியோ ...

ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கார் மற்றும் கனரக வாகன வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

படம்
தமிழ்நாடு கார் மற்றும் கனரக வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின் சார்பில். தமிழ்நாடு அரசின் (RTO ) போக்குவரத்து துறையின் புதிய சட்டத்தின் படி RC புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி RC புத்தகம் நேரில் வழங்க வலியுறுத்தியும்.  போக்குவரத்து துறையில் ( RTO ) பணியாளர்களை நியமிக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், மாதவன், சபாபதி, ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர், கலில்லு லா,  பாலாஜி, ராதாகிருஷ்ணன், மோகன்ராஜ் , ஏழுமலை, குமார், ஆறுமுகம், மகேஷ்  ராணிப்பேட்டை மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர்  நல சங்கம்  சார்பில் அனைவரும் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்!

படம்
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்  தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

ஈரோடு மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் பங்கேற்பு!

படம்
ஈரோட்டில் இன்று நடைப்பெற்ற ஈரோடு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இதயதுள்ளா அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட ரவிகுமார் அவர்களுக்கு கோவை,ஈரோடு மண்டல பொறுப்பாளராக அறிவிப்பினை  வெளியிட்டோம்,கோவை,ஈரோடு, நீலகிரி,திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோவை ஈரோடு மண்டல பொறுப்பாளராக ரவிக்குமார் அவர்கள் நியமிக்கப்பபடுகிறார்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன்,நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் அனைவரும்  கலந்துகொண்டுனர்,அதேபோன்று கழக வெளிநாட்டு அணி பிரிவு செயலாளர் சேக் முகமது அவர்கள்,கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பான்பாண்டியன் அவர்களுக்கு புத்தகமும் பொன்னாடையும் அணிவித்து  மரியாதை செலுத்தினார் உடன் ஈரோடு மாவட்டச் செயலாளர் இதயதுள்ளா,ரவிக்குமார்,மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்ச் சங்க செயலாளர் சசி(எ) திராவிடக்குமரன் , மதுரை மேற்கு 2ம் பகுதிச் செயலாளர் பேச்சிமுத்து மற்றும் ஈரோடு கழக நிர்வாகிகள் உள்ளனர்.

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கான பணி ஆணை வழங்கும் விழா பெ. வடிவேலு பங்கேற்பு!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில், வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு, திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவினை வழங்கி பேசியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று உயர்ந்த நோக்கத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருகிறார். மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் வீடு கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர். ஜெயஶ்ரீ, ஊராட்சி மன்ற தலைவர்க...

புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தல் தொடர்பாக கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கை!

படம்
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து  மதுபானம் கடத்தி வரப்பட்ட வாகனங்களை அதிவிரைவு படைவீரர்கள் மூலம்  நேரடியாக சோதனை மேற்கொண்டு மதுபானங்கள் பறிமுதல் செய்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கோவையில் ரூ. 28.26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் துவக்கி வைத்து மற்றும் ரூ. 82.14 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கோவையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ரூபாய் 28.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, ரூபாய் 82.14 கோடி மதிப்பிலான, பல்வேறு வசதிகளுடன் கூடிய அதி நவீன ஹாக்கி  மைதானம் உட்பட பல புதிய பணிகளுக்கு துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பிறகு, 22,526 பயனாளிகளுக்கு ரூபாய் 215.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில், மின்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில்  பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர். பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., மாண்புமிகு கோவை மக்களவை உறுப்பினர். கணபதி. பி.ராஜ்குமார், மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர். கே.ஈஸ்வரசாமி, கோவை மேயர். ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கள்ளழகர் கோவிலுக்கு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள நான்கு சிற்றுந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு!

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (27.04.2025), தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழகர் கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலுக்கு ரூபாய் 1.20 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள நான்கு  சிற்றுந்துகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு மற்றும் மாண்புமிகு வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுடன் குத்து விளக்கு ஏற்றி, கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கடலூர் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!

படம்
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல் நிலையங்களில் மனுக்கள் மீது  காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்டம் சார்பில் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில் பெட்டிஷன் மேளா இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள்  பெட்டிஷன் மேளாவில் பங்கேற்று நேரில் விசாரணை மேற்கொண்டு மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கடலூர் SRJ காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி!

படம்
கடலூர் மாவட்டம் நேற்று 26.4.2025 தேதி மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான.S.S. சுந்தர் அவர்கள்  SRJ காவலர் திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் . கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

புதுவையில் இருந்து விற்பனைக்காக 288 மதுபாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

படம்
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்திரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் G. பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர். பாலாஜி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர். சிவகுருநாதன் மற்றும் போலீசார் சாவடி சோதனை சாவடியில் ஹோன்டா ஆக்டிவா என்ற இருசக்கர வாகனத்தில் வந்த பாலகுரு வயது 48, த/பெ குழந்தைவேல், மாரியம்மன் கோயில் தெரு, சுப்பம்மாள் சத்திரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம்,  என்பவர்   விற்பனைக்காக  புதுவை மாநில All Ways Brandy 90ml - 288 பாட்டில்கள், Super Brandy 90ml- 12 பாட்டில்கள், Brandy 90ml- 12 பாட்டில்கள், கடத்தி வந்தவர் கைது செய்து நடவடிக்கை. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

நெய்வேலி NLC நடைபெற்ற தேர்தல் வெற்றி தொடர்பாக அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தொமுச நிர்வாகிகள்!

படம்
நெய்வேலி தொழிலாளர்களின் நலன் காக்க  ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் முதன்மை சங்கமாக வெற்றி பெற்றதையடுத்து சங்கத்தை ஊக்கப்படுத்தி தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்த வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை பொதுக்குழு உறுப்பினர். புகழேந்தி அவர்கள் தலைமையில் தொமுச நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி தலைவர்கள் , செயலாளர்களுடன்  சந்தித்து நன்றி தெரிவித்தார்கள் .

காட்டுமன்னார்கோயில் அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிய வழக்கு ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆய்வு!

படம்
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் காட்டுமன்னார்கோயில் மேலபழஞ்சநல்லூர் கிராமத்தில் மனைவி மீது கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது வழக்கு சம்பந்தமான சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!

படம்
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள்  வழிகாட்டுதலின்பேரில் ஆயுதப்படை காவலர்களுக்கு  "உணவே மருந்து" என்ற தலைப்பில் உணவு முறை பழக்கம் குறித்து  தனராஜ் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிக்காலத்தில் பணியின்போது உயிரிழந்த 19 பணியாளர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை!

படம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிக்காலத்தில் பணிபுரிந்து உயிரிழந்த 19 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டது. உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.சுந்தர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், மதுராந்தகம் நகர்மன்ற தலைவர் மலர்விழி குமார், நகர கழக செயலாளர் குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்