இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கன்னியகுமரி எஸ்பிக்கு விருது!!

படம்
மக்கள் காவலனாக சிறப்பாக பணியாற்றிய குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலினுக்கு முதல்வர். விஜய் விருது வழங்கினார். தமிழ்நாடு முதல்வர். ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற IAS,IPS மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

தங்கத்தை கக்கும் அண்டார்டிகா எரிமலை!!

படம்
      வீணாகும் தங்கம்: நாள்தோறும் சுமார் 10 சவரன் தங்கத்தை காற்றில் கக்கும் அண்டார்டிகாவின் Mount Erebus எரிமலை! இதன் மதிப்பு ஆண்டிற்கு தோராயமாக ரூ.18.9 கோடி எனவும், இந்த தங்கத் துகள்கள் எரிமலையில் இருந்து 1,000 கி.மீ தூரம் வரை பரவி, அண்டார்டிகா பனிப்பாறைகளில் படிவதாகவும் புதிய ஆய்வில் தகவல். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

படம்
        உடன்பிறப்புகளே… உங்களின் குரல்களைக் கேட்டேன்; ஆய்வறிக்கைகளைப் படித்தேன். கழகத்தின் அடுத்த நூறாண்டுக்கான பயணத்தைத் திட்டமிட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கிறேன். தி.மு.க. கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: தங்கம் தென்னரசு  கீதா ஜீவன் அர.சக்கரபாணி எஸ்.எஸ்.சிவசங்கர்  தமிழரசி இரவிக்குமார்  எம்.எம்.அப்துல்லா இ.பரந்தாமன் ச.முரசொலி எம்.பி டாக்டர். எழிலன் எஸ்.கே.பி.கருணா இக்குழுவானது, கழக மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கழகத்தின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், தேர்தல் பணிகளைச் செய்வதற்கான நிரந்தர அமைப்பு, தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் Think tank போன்றதொரு அமைப்புக்கான தேவை, அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவை குறித்தும் பரிந்துரைகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கிடும். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

பண்ருட்டியில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர். சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினம் அனுசரிப்பு!!

படம்
கடலூர் மாவட்டம்,பண்ருட்டியில் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும் & இந்தியாவின் சிறந்த தேசியவாதத் தலைவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சியாம பிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, சுகுமார்,  கோவிந்தராஜ், ராமர்,  வெற்றிவேல், கோகுல், ஜெகதீஷ், கிருபாநிதி, அய்யனார், கிருபாகரன், புண்ணியமூர்த்தி, ராமச்சந்திரன், சுரேஷ்,  புஷ்பராஜ், சரவணன், சீனிவாசன், மோகன், முருகதாஸ், பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் உள்ள, அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவ பிரதிநிதிகள் பதவியேற்பு விழா மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு பேரணி!!

படம்
கோவை மாவட்டம்,கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிற அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் செயலர் பிரேம்குமார் மற்றும் துணைச் செயலர் பிரேம்சந்த் ஆகியோரின் ஆலோசனையின் படி பள்ளி மாணவப் பிரதிநிதி, துணை பிரதிநிதி மற்றும் பள்ளியில் செயல்படும் நான்கு குழுக்கள் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்வு நடைபெற்று அவர்களுக்கான பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜபாரதி மற்றும் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து பள்ளியின் பிரதிநிதி, துணை பிரதிநிதி, 4 குழுக்களின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பொறுப்பை ஏற்கும்முன் மாணவர்களின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் புல்ஸ் அணி, ஈகிள்ஸ் அணி, பேன்த்தர்ஸ் அணி, ரெய்னோஸ் அணி உள்ளிட்ட அணியினர் கைகளில் தங்களது கொடியினை ஏந்தி பேரணியாக வந்து பள்ளி மைதானத்தில் நிறுவினர்...

விஜய் இந்த நிலைக்கு வருவதற்கு அவ்வளவு சுலபம் இல்லை! -நடிகர். ரங்கநாதன்!!

படம்
இன்று அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் விஜய்யின் பின்னால், பலருக்கும் தெரியாத ஒரு கஷ்டமான குடும்பப் பயணம் இருந்ததாக இயக்குநரும் நடிகருமான ரங்கநாதன் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர். ரங்கநாதன்: ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, "இப்போது விஜய் முதல்வராக இருப்பதால் அவர் எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தார் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது" என்று ஆரம்பித்தார். அவர் தொடர்ந்து, "எங்கள் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். சினிமாவில் ஒரு வாய்ப்புக்காக பல கதவுகளைத் தட்டினார். விஜய் பிறந்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை சீராக ஆரம்பித்தது. அதற்கு முன்பு குடும்பம் சந்தித்த கஷ்டங்களை வெளியில் யாரும் பார்த்ததே இல்லை" என்றார்.  மிகவும் நெகிழ வைத்த சம்பவத்தையும் அவர் பகிர்ந்தார். "விஜய் கைக்குழந்தையாக இருந்த காலம் அது. வீட்டில் குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுக்கக்கூட வசதி இல்லாத நிலை. ஒரு பிரபல நடிகர் உதவுவார் என்ற நம்பிக்கையில் எஸ்.ஏ. சந்திரசேக...

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற நியாய விலை கடை விற்பனையாளர்களின் மாதாந்திர கூட்டம் !!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று காலை நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு வருவாய் ஆய்வாளர். காமராஜ் முன்னிலை வகித்தார்  இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர். ஸ்வேதா அவர்கள் கலந்துகொண்டு.விற்பனையாளர்களுக்கு கருத்துக்களை எடுத்துக் கூறினார். இதில் நியாய விலைக் கடைகளை குறித்த நேரத்தில் திறக்க வேண்டும். குடும்ப அட்டையில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும்.  பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் இல்லை என்றால் திருப்பி அனுப்ப வேண்டும்.  விற்பனையாளர்கள் விடுப்பில் சென்றால் தகுந்த காரணத்தை பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.  குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் . கைரேகை வைக்க வேண்டும் போன்றவைகளை எடுத்துக் கூறினார்.  இந்நிகழ்ச்சியில் சார் துணைப் பதிவாளர் தனலட்சுமி மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கோவை மாவட்டம்: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம்!!

படம்
கோவை: அன்னூர் பகுதியில் 16 இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து தொடர் |திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் அச்சம் நாகமாபுதூர், கரியாம்பாளையம், குன்னத்தூர், கணேசபுரம் மற்றும் பல இடங்களில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல  லட்சம் மதிப்புடைய பொருட்களை திருடிச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை.* தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது!!

படம்
பாலியல் குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாக கருதி, குற்றவாளி சிறையில் மீதி காலத்தை கழிப்பதை கோர்ட் விரும்பவில்லை என நீதிபதி கூறியுள்ளார். நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் குழந்தைகள் அடையாளத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார் தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கன்னியாகுமரி மாவட்டம் : கொற்றிகோடு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, புத்தன்வீடு, வழிக்கலாம்பாடு செம்பருத்திவிளை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை (71)

படம்
தனிமையில் இருந்த இவர், பூட்டிய வீட்டினுள் சுமார் 8 நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என கருதபட்ட நிலையில், உடல் அழுகி தூர் நாற்றம் வீசி அக்கம்பக்கத்தினர் கொற்றிக்கோடு காவல்நிலைய போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்  அசார் தலைமையிலான குழு உடல் அழுகி புழுக்கள் அரித்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு,  தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம்  மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

முதல்வர் ஆய்வு நடத்தும் நாளில் கொடூரங்கள் அரங்கேறி இருப்பது சட்டம் - ஒழுங்கு சீரழிவையே காட்டுகிறது.: திமுக விமர்சனம்!!

படம்
சினிமாவில் வரக்கூடிய கொடூரமான வில்லத்தன காட்சிகள் தமிழகத்தில் நிஜத்தில் நடக்க தொடங்கியுள்ளன என மயிலாடுதுறையில் காதலர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை சுட்டுக்காட்டி திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சமூகவலைதள பதிவில்; கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு! மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது. இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்...

தான் படித்த பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மாணவர்கள் உற்சாகம் இப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுமே கம்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் தான்என்றுமாணவர்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு!!

படம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள  ராயப்பன்பட்டிபுனித அலோசியஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் உந்து தளையும் உறுவாக்கினார். தற்பொழுது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் படித்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன் இன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தளபதி விஜய்யின் அறிக்கையினை முன்மொழிந்தார்.   தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணத்தையும் ஒழுக்கத்தையும் நான் முன்னோர் காலத்தில் இந்த பள்ளியில் உங்களைப் போல ஒரு மாணவனாக இருந்து வந்தேன்          இப்பொழுது கடின உழைப்பால் நேர்மையின் சிகரமாய் மக்கள் சேவகராக உங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்     இந்தப் பள்ளியில் படித்த மாணவன் என்று பெருமையாக கூறுகிறேன்   நீங்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் தான் என்று நீங்கள்யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஜெகநாத்மிஸ்ரா எங்கள் பள்ளி மாணவ...

மணக்குடி அருகே, கோவில்விளை பகுதியில் பள்ளி வாகனம் விபத்து:அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் அனைவரும் உயிர் தப்பினர்!!

படம்
கன்னியாகுமரியில் இயங்கி வரும்  தனியார் சிபிஎஸ்இ பள்ளி வாகனம் ஒன்று இன்று காலையில் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்தபோது  கோவில்விளையில் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் குழந்தைகள் அனைவரும் பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் பள்ளி வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. வாகனம் அதிவேகமாக ஓட்டி வரப்பட்டதே விபத்துக்கு காரணம் என விபத்து நடந்த இருந்தவர்கள் தெரிவித்தனர். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

வைகோவின் நாணயம்!!

படம்
"கடந்த ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கமிஷன், கரப்ஷன்! ஆனால் இதைக் கூட்டணிக்குள் இருந்து கொண்டே பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா.... அதனால்தான் பேசவில்லை"  என்கிறார் வைகோ! அடடா எவ்வளவு நாணயமான மனிதர்! அது சரி, அது அயோக்கியத்தனம் என்றால், அப்படிப்பட்ட கட்சியோடு கூட்டணியில் இருந்தது என்ன "தனம்"? _சுப வீரபாண்டியன். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

மதுரை : அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுகவிற்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்ன? என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும், அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் - திருமாவளவன் பேட்டி!!

படம்
இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையிலும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறேன் - திருமாவளவன், அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ விவகாரம் குறித்து கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியது தான் ஆதாரமில்லாமல் ஒரு கருத்தை சொல்லி விட முடியாது - மதுரையில் திருமாவளவன் பேட்டி மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் : தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு அவர் எந்த கோணத்தில் இந்த பிரச்சனை பார்க்கிறார் என தெரியவில்லை எங்களை பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய்ப்பில்லை விசிக இடதுசாரிகள் இயூமுலி இந்த கட்சிகள் தவெகவிற்கு அளித்த வாக்குறுதிகளை கட்டாயம் காப்பாற்றுவார்கள். காங்கிரஸ் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டும் அல்லாமல் கூட்டணியில் இணைகிறோம் நாடாளுமன்ற தேர்தல் வரை என்னென்ன தேவைகள் என்பன குறித்து அறிவித்துவிட்டு இந்த கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள். இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு நல்குகிறார்கள் ஐந்தா...

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றக் கூட்டம்!!

படம்
புதுக்கோட்டை  திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்      வாசிப்போர் மன்றக் கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்வுக்கு  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி  தலைமையேற்றார். பள்ளியின்  இயக்குனர்  ரா. சுதர்சன்  மற்றும்  துணைமுதல்வர் குமாரவேல்  ஆகியோர்  முன்னிலை  வகித்தனர்.  முழுக்க முழுக்க  மாணவர்களே  முன்னின்று  நடத்திய  வாசிப்போர் மன்றக் கூட்டதிற்கு சிறப்பு விருந்தினராக  பட்டிமன்ற  நடுவர், தமுஎகச  மாவட்ட செயலாளர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி  கலந்துகொண்டார்.  நிகழ்வில் சிங்கப்பூர் கவிஞர் இன்பா  எழுதிய  ”ஒரு மேகம் வரைந்து  தருவாயா” என்ற  இளையோருக்கான நூலிலிருந்து   பதின்மூன்று  கதைகளை  மாணவர்கள்  எம்.ஸ்ரீநாத், வி.தேவதர்சன், ச. கன்யா, ர.அகல்யா, பி.கவினேஷ், ஜெ. அதியன், எஸ். அஸ்மிட்டா ரிபானா, என்.தாண்யஸ்ரீ, ஜெ.யாழினி, ரா.அபூர்வாஸ்ரீ, லா.வெரோனிகா, வெ.சஷ்டிகா, ஜி. ஜெய்கிருத்திக்  ஆகியோர்...

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள, கெளமார மடாலயத்தில், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சங்கமம் 2026 எனும் தலைப்பில் நடைபெற்ற கல்வி ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது!!

படம்
கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, சங்கமம் 2026 எனும் தலைப்பில் விழிப்புணர்வு விருதுகள் வழங்கும் விழா கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள கோவை மட்டுமின்றி திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். தற்போது நடைபெற்று நிறைவு பெற்ற 2025 மற்றும் 2026 கல்வியாண்டில் அரசு மற்றும்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த, மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல் உறுப்பு தானம் வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தில் பசுமையை காப்போம் என்ற தலைப்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்...

கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், வாரியர்ஸ் லயன்ஸ் சங்கம், அன்பு லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து நடத்திய ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை எனும் நிகழ்ச்சி கோவை கொடிசியா அருகே உள்ள ஜே ஆர் ஹாலில் நடைபெற்றது!!

படம்
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின், கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், வாரியர்ஸ் லயன்ஸ் சங்கம், அன்பு லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து நடத்திய ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை எனும் நிகழ்ச்சி கோவை கொடிசியா அருகே உள்ள ஜே ஆர் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவினை ஜிஎஸ்டி லயன் செந்தில்குமார் ஒருங்கிணைத்திருந்தார். சங்கத்தின் தலைவர்களான கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், சித்ரா பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில், மாவட்ட ஆளுநர் பிஎம்ஜேஎப் ஏ.ராஜசேகர் மாவட்டத்தின் முதல் பெண்மணி நந்தினி ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சங்கத்தின் செயல்பாடுகள், சேவைத் திட்டங்கள், தலைமைப் பண்பு பற்றி ஆலோசனைகள் குறித்து சிறப்புரையாற்றி அவர்களின் சேவைகளை  பாராட்டியதுடன், சிறந்த மாவட்ட ஆளுநர் ஏ. ராஜசேகர், சிறந்த மாவட்ட முதல் பெண்மணி நந்தினி ராஜசேகர் ஆகியோருக்கு  மூன்று சங்கங்களும் இணைந்து விருதுகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக முதலாம் துணை ஆளுநர் தேர்வு சூரி நந்தகோபால், இரண்டாம் துணை ஆளுநர் தேர்வு, பாஸ்கர் மாவட்ட அமைச்சரவை செய...

இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் டிஎன்டிபிஎல் சீசன் 1 எனும் பிக்கிள்பால் போட்டிகள், கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன!!

படம்
கோவையில் உள்ள எஸ்டி ஸ்போர்ட்ஸ் இன்டோர் கோர்டில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் தொடராகக் கருதப்படும் தமிழ்நாடு பிக்கிள் பால் டைனஸ்டி லீக்  சீசன் 1, மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.100 வீரர்கள், 10 அணித் தலைவர்கள் மற்றும் 10 அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட இந்த தொடக்க விழா விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த தொடரின் தலைப்பு ஆதரவாளராக இந்திய கார் பந்தய சாம்பியனும், விஎன்ஏ க்ரூப்ஸ் மற்றும் டிஐஏ டைமண்ட்ஸ்  நிறுவனங்களின் உரிமையாளருமான பாலபிரசாத் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.  விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் பாராட்டப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் என். கிருஷ்ணா, உலகின் நம்பர் 1 விர்சுவல் ரியால்ட்டி டென்னிஸ் வீரர் விமல்ராஜ் ஜெயச்சந்திரன், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அதவா ஈஸ்வரா, சர்வதேச பயிற்சியாளர் ராக்கி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் போட்டியில் வீரர்கள் உற்சாகமாக...

பெண்களின் வாழ்க்கை வட்டம் மிகவும் குறுகியது அவர்களை இச்சமூகத்தில் சாதனை பெண்களாக மாற்ற இன்னும் போராடி கொண்டே தான் இருக்கிறார்கள், போராட்ட களத்திற்கு வந்ததே முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன் கோவையில் பெண்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய சிங்கபெண் சிறப்பு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் அனிதா பெருமிதம்!!

படம்
நீதியரசர் கற்பக விநாயகம் வழிகாட்டுதலின் படி, மாதாமாதம் பல்வேறு  சமூக சேவை பணிகளை, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை வ உ சி பூங்கா அருகே, உள்ள தி கேரளா க்ளப்  அரங்கில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைந்து விழாவினை சிறப்பித்த பிரபு, பிரபு விஜயலட்சுமி ஆகியோர் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விழாவில், அமைப்பின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, வழக்கறிஞர் தேன்மொழி, கற்பகம் அகாடமி சார்பாக டாக்டர் கதிரவன், மற்றும் சிங்கப்பெண் சிறப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளர் அனிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவுக்கான வரவேற்புரையை அமைப்பின் நிறுவன தலைவர் ஆர். கே. குமார் வழங்கினார். தொடர்ந்து இச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்க படும் அநீதி, குறித்தும் பெண்கள் இன்னும் விழிப்படையாத நிலை குறித்தும், சட்ட நிலை குறித்தும் தங்களது கருத்துகளை முன் மொழிந்தனர...

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் சர்ச்சை; விருதுநகர் த.வெ.க ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம்!!

படம்
போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்த விருதுநகர் த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். விருதுநகரில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் முத்துவேல் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் - தமிழ்நாடு காவல்துறை!!

படம்
 சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டினால்  பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் - தமிழ்நாடு காவல்துறை!!  18 வயது நிறைவடையாத சிறார்கள் கார், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். பெற்றோருக்கு ரூ.25,000 வரை அபராதம் & 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) ரத்து செய்யப்படும். 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது - தமிழ்நாடு காவல்துறை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எதிர்வினையாகப் பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ!!

படம்
செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு எதிர்வினையாகப் பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ!  பத்திரிகையாளருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு.. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

முதல்மைச்சர் விஜய் தலைமையில் காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் 2-வது நாள் மாநாடு தொடங்கியது!!

படம்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. காலையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகலில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

தரங்கம்பாடி அருகே காதல் ஜோடி சடலமாகக் கண்டெடுப்பு!!

படம்
தரங்கம்பாடி அருகே சாந்தங்குடி பகுதியில் காதல் ஜோடி சடலமாக கண்டெடுப்பு; உயிரை மாய்த்துக் கொண்டனரா? அல்லது ஆணவக் கொலையா? என விசாரணை! உயிரிழந்த இருவருமே வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்.  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

WhatsApp-ல் புது வசதி!!

படம்
WhatsApp-ல் புது வசதி!!  Privacy-ஐ கூட்டும் பொருட்டு username வசதியை அறிமுகம் செய்தது WhatsApp இந்த வாரத்தில் இருந்தே பயனர்கள் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யலாம் என்றாலும், இந்த வருட இறுதிக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிப்பு  WhatsApp செயலியின் Settings > Account > Username வழியாக பெயரை ரிசர்வ் செய்யலாம். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் பழைய அரசு பள்ளிக் கட்டிடத்தை சேதப்படுத்தியதாக புகார்!!

படம்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தில், பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு பள்ளிக் கட்டிடத்தை மதுபோதையில் ஒருவர் சேதப்படுத்தியதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிராம மக்களின் புகாரின்படி, சங்கிலி மகன் சின்னதம்பி என்ற (மாரிமுத்து) என்பவர் மதுபோதையில் அரசு பொதுச் சொத்தான பழைய பள்ளிக் கட்டிடத்தின் கதவினை  உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் நேரில் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அமைச்சர் சரத்தை கண்டித்தும்அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர் அதில் தமிழக அமைச்சர் சரத்தைபதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் நூற்றிற்கும் மேற்பட்ட திமுக மாணவர் அணி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது அவர்கள் கூறியது காணமே காணோமே முதலமைச்சரை காணோமே என்று கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர் உடனடியாக சரத்தை கைது செய்ய வேண்டும் என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கண்டன கோஷம் எழுப்பினர் அதன் பிறகு அறந்தாங்கி காவல் துணைக்கு கண்காணிப்பாளர் அனைவரையும் தங்களது வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

திமுகவுக்கு எதிராக திரும்பும் தோழமை கட்சிகள்? விசாரணை வேண்டும்.. விசிக, இடதுசாரிகள் டிமாண்ட்!!

படம்
சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் இதே கோரிக்கையை வைத்திருப்பது.. திமுகவுக்கு எதிரான நகர்வாக பார்க்கப்படுகிறது.கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கு, சென்னை திமுகவுக்கு எதிராக திரும்பும் தோழமை கட்சிகள்? விசாரணை வேண்டும்.. விசிக, இடதுசாரிகள் டிமாண்ட்   திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது குறித்து விசாரணை வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் இதே கோரிக்கையை வைத்திருப்பது.. திமுகவுக்கு எதிரான நகர்வாக பார்க்கப்படுகிறது. கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கு, கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 2...

"தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!"-மு.க.ஸ்டாலின்!!

படம்
“ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்” 1. போதைப் பொருள் பயன்படுத்தியது போல், 'Thug Life' Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுகவினர் கைது! 2. தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு! 3. முன்னாள் அமைச்சர். எ.வ.வேலு வீட்டில் ரெய்டு! இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது! அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!!

படம்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி  மாணவி  நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்  பெற்று  சாதனை  படைத்துள்ளார்.   தஞ்சாவூரில்  ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் மற்றும் பேமிலி  கிளப்  நடத்திய நீச்சல்  போட்டியில்   நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அதில்  பள்ளியின்  ஏழாம் வகுப்பு  மாணவி  ம. சந்தோஷிகா 4 × 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே (பெண்கள்) பிரிவில் முதல் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்  மற்றும்  50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் (பெண்கள்) பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு  பயிலும் மாணவர்  ம. நிஷாந்த் கிருஷ்ணன் 4 × 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே (ஆண்கள்) பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.     நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று  பள்ளிக்குப் பெருமை சேர்த்த  மாணவி  சந்தோஷிகா மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற நிஷாந்த் கிருஷ்ணன்  ஆகியோரை ...

கோவையில் நடைபெறவுள்ள "கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்றது!!

படம்
கோவை மாவட்டம்,பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு கோவையில் நடைபெறவுள்ள "கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர்  நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, கோவை, உப்பிலிபாளயம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  ஆப் ஸ்கிரின் ஹப் எனும் அமைப்பு, நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாரத்தான் டி-ஷர்ட்டினை வெளியிட்டார். இதில், மாரத்தான்  வீரர் விஜய் ஆனந்த், ராபர்ட் போஷ் நிறுவனத்தின்  குழுத் தலைவர் வனிதா, ஆட்டம் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் சார்பாக, ராஜேஷ் ஆகியோருடன், டாக்டர் நித்யா, டாக்டர் மல்லிகா, டாக்டர் கே. மோகனா மற்றும் பார்வதி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த முயற்சியை பாராட்டினர். ரன் பார் ஹேர் என்பது ஒரு மாரத்தான் மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், உடல்நலம் மற்றும் அதிகாரமளிப்பை முன்னிறுத்தும் ஒரு சமூக இயக்கம் என்பதை வி...