இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி கோவை பந்தயசாலையில் உள்ள ஐடிசி வெல்கம் உணவகத்தில் துவங்கபட்டது!!

படம்
கோவை மாவட்டம்,கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சியை நடத்துகிறது. உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர். இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21,ம் தேதி வரை, கோவை பந்தயசாலையில் உள்ள ஐடிசி வெல்கம் உணவகத்தில், நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன்  கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்ப...

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய மத முறைப்படி திருமணபதிவு சான்றிதழில் கையெழுத்துக்களை ஒருவருக்கொருவர் மாற்றி போட்டு திருமணம் நடைபெற்றது!!

படம்
  கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் நடைபெற்றது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்  ஹக்கிம்-45 வயதான இவர், கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை  சேர்ந்த ஷபினா பேகம் என்ற  37 வயது பெண்ணை, திருமணம் செய்து கொண்டார். இருவரும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நிலையில், இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி முறைப்படி இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். தொடர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்ள பெரியோர்கள் பேசி முடிவு செய்து, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரது  வீட்டு உறுப்பினர்கள் பலர் முன்னிலையில், இஸ்லாமிய முறைப்படி, திருமண பதிவு சான்றிதழில் இருவரும் கையேழுத்து இட்டு கணவன், மனைவியாக திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில், வழக்கறிஞர் குமாஸ்தாகள் லட்சுமி, திவ்யா, செல்வராஜ், சரவணம்பட்டி கதிர் ...

திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த அமைச்சர். ஜா. முகமது பர்வேஸ்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஆவுடையார் கோவில்( எ) திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமாள் திருத்தேர் திருவிழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று, 20/06/2026 ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த போது எடுத்த படம். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!

படம்
தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம்  பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன பதாகைகளை ஏந்தி தமிழக அரசை கண்டித்தும் தமிழகஅரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டன. இது குறித்து பேட்டி அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் மாநிலச் செயலாளர் முகமதுஒலி, பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழகம் என்பது ஒரு காலத்தில் அமைதி பூங்காவாக இருந்து வந்ததாகவும் ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்காக எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்தார்.  சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை, கும்மிடிப்பூ...

கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி நற்பெயரை பெற்றதை தொடர்ந்து; சென்னையில் துவக்கபட்டது! இத்திட்டம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை வாழ் மக்கள் மகிழ்ச்சி!!

படம்
கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ஆர். தெய்வேந்திரன் நாடார், 16-வது நினைவு தினத்தை முன்நாட்டு ஒரு ரூபாய் உணவு திட்டம் சென்னையில் விரிவு படுத்தப்பட்டது..  சென்னையில் நடைபெற்ற முதன்மை நிகழ்ச்சியில், ஆர்.கே. தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலேஷ் குமார்  கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்.  தெய்வேந்திரன் நாடார் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.  அவரைத் தொடர்ந்து,  தெய்வேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனங்களின் ஊழியர்களும் தங்களது மரியாதையைச் செலுத்தினர். இதனை தொடர்ந்து, ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,"சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆர். தெய்வேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தினசரி ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது. ஒரு ரூபாய் உணவுத் திட்டம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என சென்னை வாழ் மக்கள்  தரப்பில் பாராட...

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக் குழுமங்களின் சார்பில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கான லெகஷி விருது வழங்கும் விழா!!

படம்
கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கேபிஆர் கல்விக்குழுமங்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த ஆய்வறிஞர், இளம் நட்சத்திரச் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த பேராசிரியர் மற்றும் சிறந்த முன்னாள் மாணவர் போன்ற பிரிவுகளின்கீழ் விருதினையும் பரிசுத்தொகையினையும் வழங்கி வருகிறது.  இவ்வாண்டு நடைபெற்ற லெகஷி விருதிற்கு 14 மாநிலங்களிலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவ்விண்ணப்பங்களை, நடுவர் குழுவினர் முறைப்படுத்தி, விருதிற்கான விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வுசெய்தனர். அதில் அமெட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வி.ராஜேந்திரன் வாழ்நாள் சாதனையாளர் விருதுடன், 50,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த பேராசிரியர் விருதிற்கான பிரிவில், பாலக்காட்டில் உள்ள இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர். சாந்தக்குமார் மோகன...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி வழங்கும் விழா நிகழ்ச்சி பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயலால் மகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்கள். மற்றும் குழந்தைகள்!!

படம்
  கோவை மாவட்டம், ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி பழங்குடியினர் கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இளம் தொழிலதிபரும் விவசாயியுமான சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி என்பவர் நெஞ்சார உதவிக்கரம் நீட்டியுள்ளார்.  தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் இப்பள்ளியைக் கடந்து சென்ற உமா மகேஷ்வரி, அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகள் இருப்பதனை அறிந்துள்ளார். இப்பள்ளியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் உள்ள பழங்குடி சமூக குழந்தைகள் பெருமளவில் படிக்கின்றனர்.  இக்குழந்தைகளின் நிலையை உணர்ந்து, இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கிரிக்கெட் மட்டை, பந்துகள், ஸ்டம்ப்புகள், கைப்பந்துகள், கால் பந்துகள், எறி பந்துகள், டெனிகாய்டு,செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நேரில் சென்று வழங்கினார்.  இதுகுறித்து பேசிய உமா மகேஷ்வரி, "பழங்குடியின கிராமப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற உதவிகள் மிகவும் அவசியம் என்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாடு மட்டுமே அவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் அ...

குடியாத்தத்தில் மசூதிக்கு சொந்தமான இடத்தில் சுற்று சுவர் கட்டுவது சம்பந்தமாக இரு இரு தரப்பினரிடம் ஏற்பட்ட பிரச்சனை!!

படம்
வேலூர் மாவட்டம்,குடியாத்தம்  மற்றும் நகரம், வார்டு 5 பிளாக் 9 சர்வே எண் 710 /1, பரப்பு 1.3961.0 ச. மீ ஜோகி மடம், மசூதி மற்றும் கபர்ஸ்தான் இடத்தினை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கும் பொருட்டு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மசூதி நிர்வாகத்தால் கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேற்படி சர்வே எண்ணில் உள்ள இடத்தில்  முருகேசன் என்பவர் பகுதியளவு நிலப்பரப்பினை பராமரித்தும் தென்னை மரங்கள் வைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் எனவும், தொடர்ந்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தடுத்தும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இன்று 20-06-2026 காலை  10.30 மணி முதல் மேற்படி புலத்தில் குடியாத்தம் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும்  குடியாத்தம் நகர சார் ஆய்வாளர். சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில்  நில அளவீடு பணி நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடமும் காவல் துணை கண்காணிப்பாளர். சுரேஷ். வட்டாட்சியர். பிரியா. நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி. நகர அமைப்பு அலுவலர். சீனிவாசன். நகர அளவையர். தீபா ஆகியோர் ஆக்ரமணதாரர்  ...

கோவையில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற்று வரும் நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நித்தில்யம் அறக்கட்டளையினர் கோரிக்கை !!

படம்
கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள நித்தில்யம் சிறப்புப் பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த மாணவர்களின் திருக்குறள் கூறும் “குறளோசை” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் குழந்தைகள் மத்தியில் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து சிவக்குமார் கேட்ட கணித விடுகதை ஒன்றிற்கு தமிழ் ஆசிரியர் ஒருவர் சரியான விடை அளித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 1000 ரூபாய் சன்மானமாக வழங்கிய சிவக்குமார், இதுவரை இந்த விடுகதைக்கு மூன்று பேர் மட்டுமே சரியான விடை அளித்து தன்னிடம் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி குறித்து பேசிய நித்தில்யம் அறக்கட்டளை தலைவர் காயத்ரி சம்பத், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பள்ளிகளில் பயிற்சி முடித்து வெளியே வரும்போது, அவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். ஆட்டிசம் பாதித்த தனது குழந்தை வளர்ந்த பின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யும் என்பது இன்றைய கால பெற்றோர்களின் கவ...

கோவை அவிநாசி சாலையில் சிக்னலால் தலைவலி! மீண்டும் அமலுக்கு வந்த பழைய நடைமுறை!!

படம்
கோவை மாவட்டம், கோவையின் இதய பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதற்காக அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அவிநாசி சாலையின் எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் சிக்னல் கொண்டு வரப்பட்டது. அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காவல்துறை மீண்டும் அங்கு மாற்றம் செய்துள்ளது .  இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், " அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்கள், 13.06.2026 ஆம் தேதி முதல் 17.06.2026 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட உள்ளது. இதனால் பயனீர...

நகைக்காக மகளை மாப்பிள்ளை குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்ததாக பெற்றோர் புகார் – ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – விஜயா தம்பதியினரின் இரண்டாவது மகள் பொற்கொடி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பொற்கொடி திடீரென உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இராணிப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், திருமணமான நாளிலிருந்து குணா மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் நகை மற்றும் வரதட்சணை கேட்டு பொற்கொடியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். பலமுறை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தலையிட்டு சமரசம் செய்து மகளை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பொற்கொடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இது இயல்பான மரணம் அல்ல என்றும், தனது மகள் திட்டமிட்டு கொலை செய்ய...

குடியாத்தத்தில் ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாள். விழா கொண்டாட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி உட்பட்ட காங்கிரஸ் பேர் . இயக்கத்தின் மாநிலத் தலைவர். டி ஏ நவீன் அவர்களின் ஆணைப்படி வேலூர் மத்திய மாவட்ட ஓ.பி.சி. துறை. சார்பாக. மாநில துணைத்தலைவர். ஜி. ஜெலேந்திரன் தலைமையில்.  மாவட்டத் தலைவர். ஜி. சுரேஷ் குமார் . மற்றும் குடியாத்தம் நகரத் தலைவர். டி லாலா லஜபதி. ஓ பி சி மாநில துணை செயலாளர். எஸ் ஜே கந்தன், எஸ். சத்யா ஜே. சரஸ்வதி, எஸ். மகாராஜன், ஜி. அம்சா ஏ. வி. மாசிலாமணி, பாரத் நவீன் மாவட்டத் துணைத் தலைவர். விஜயேந்திரன், மாவட்ட செயலாளர். எஸ்.சி .துறை, ஓ. பி. சி. அன்பரசன், மாநில செயல் தலைவர். சுனில் இவர்கள் முன்னிலையில் வருங்கால பாரத பிரதமர். ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாள் .வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர்  ஏழை தாய்மார்களுக்கு சேலை  மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது. முடிவுரை மாசிலாமணி, மகாராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.  இவ்‌.விழாவினை ஓபிசி . துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.  இறுதியில் எஸ். ஜெயசாரதி நன்றி கூறினார். குடியாத்தம் தாலுகா ச...

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் இன்று காலையில் நடைபெற்ற ஆனித் திருவிழா தேரோட்டத்திற்கான திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி!!

படம்
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் இன்று காலை ஆனித் திருவிழா தேரோட்டத்திற்கான திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஜூன் 28ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

“தகுதி!தகுதி!! என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது” -உதயநிதி ஸ்டாலின்!!

படம்
"மாபெரும் உயிர்கொல்லும் SCAM நீட்” “தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது. மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். நீட் ஒழிப்பிற்காக திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும், சட்டப் போராட்டத்தையும் தவெக அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்” நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி கோபிகா உயிரை மாய்த்துக் கொண்டதற்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவு. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு த. வெ.க. கர்னல் பி. சுரேஷ் நேரில் பாராட்டு!!

படம்
தேனி மாவட்டம், காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், நாட்டின் பாதுகாப்பிற்காக ஆற்றிய வீரதீரச் செயலுக்காக இந்திய ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார். அவரது இந்த சாதனைக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியும் சமூக சேவகருமான கர்னல் பி. சுரேஷ், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அப்போது அவர், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், நினைவுப் பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, ராணுவ வீரரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய அவர், நாட்டின் பாதுகாப்பிற்காக மீனாட்சி சுந்தரம் மேற்கொண்ட துணிச்சலான பணிகள் குறித்தும், அவருடைய சேவை அனுபவங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்னல் பி...

நிலவன் டிவியின் தலைப்பு செய்திகள்!!

படம்
மேகதாது - CM விஜய்யின் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவும் கட்டாயம். ஆதார் கார்டு எண்ணை உடனடியாக இணைக்கவும் இறந்தவர்களின் ஆதார் விவரங்களை அறிக்கையாக அனுப்பவும் கூட்டுறவு துறை உத்தரவு டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை செல்லும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா தீர்ப்பு ரூ.246 கோடி மதிப்பிலான கோயில் திருமண மண்டப பணிகள் - நிர்வாக அனுமதி ரத்து மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும் "தமிழக அரசு என்ன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை பார்க்க வேண்டும். தீர்மானம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்ட பின் நடவடிக்கை" - கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் 4வது ஆண்டாக தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்க உள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்த சி.மகேந்திரன் சில மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடு...

திருச்சி ஆட்சியரின் முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம்! -ஆட்சியர் நடவடிக்கை!!

படம்
திருச்சி மாவட்டம்,திருச்சி ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வடமாநில பணியாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி ஆட்சியர் அறிக்கை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பால் டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இருசக்கர வாகனம் 100 மீட்டர் இழுத்து செல்லப்பட்டு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா பேட்டை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள பெல்லியப்பா நகர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி முன்னாள் சென்று இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த   அனந்தலை பகுதியை சேர்ந்த பிரதாப் மற்றும் கீழ் விசாரணை பகுதி சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.  மேலும் டேங்கர் லாரியில் சிக்கிய இருசக்கர வாகனம் 100 மீட்டர் தொலைவிற்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் டேங்கில் உராய்வு ஏற்பட்டதால் இருசக்கர வாகனம் தீப்பற்றி எறிய தொடங்கியது  இதனை கண்ட பொதுமக்கள் வாலாஜா காவல் நிலையம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பளத்திற்கு வரவழைத்து இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து சாலையில் இருந்த விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும் காயமடைந்த இரண்டு நபர்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ...

விசாரத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி யின் 56 வது பிறந்தநாள் விழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மேல்விஷாரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிஸ்கட் இனிப்பு ஆகியவை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் M.அப்துல் ஷூக்கூர் தலைமை வகித்தார்.  ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர்  K. O.நிஷாத் அஹமத் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் G. விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் மாவட்டத் தலைவர்  C.பஞ்சாட்சரம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தமிழக வெற்றிக் கழக மேற்கு நகர செயலாளர் I.அஸ்கர் அலி கிழக்கு நகர செயலாளர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மேலும் இந்த விழாவில் மேல்விஷாரம் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் B M முஜஸ்ஸர் அகமத் BSc , நகரப் பொருளாளர்  சுஹேல்,சிறுபான்மை மாவட்ட துணை தலைவர் முஹம்மது ரஃபீக், ...

வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 50ஆவது பட்டம் வழங்கும் நிகழ்ச்சி!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஐம்பதாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யார் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் கலைவாணி பங்கேற்று சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது 2022 - 25 ஆண்டு இளநிலை மற்றும்  2023-25 முதுநிலை பட்டங்கள் முடித்த 1096 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக இளநிலையில் உட்பட்ட 14 பாட பிரிவுகளில் பட்டம் முடித்த 945 மாணவிகளுக்கும் மற்றும் முதுநிலையில் 11 பாடப் பிரிவுகளில் பட்டம் முடித்த 151 மாணவிகள் என மொத்தமாக 1096 மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் இளநிலை மற்றும் முதுநிலையில் மொத்தம் 40 கல்லூரி மாணவிகள் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

சி.எம்.சி மருத்துவமனைக்கு சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் அங்கிகாரம் கிடைத்துள்ளது சிஎம்.சி மருத்துவ சிறப்பு மையம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது! - டாக்டர்கள் பேட்டி!!

படம்
வேலூர் மாவட்டம்,வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் உட் சுரப்பியல் மற்றும் நீரிழிவுத்துறை வளர்சிதைவு மாற்றுத்துறையின் சார்பில் டாக்டர் நிகில் தாமஸ் டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது சி.எம்.சி மருத்துவமனைக்கு 2026 ஆம் ஆண்டு மேமாதம் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பால் இம்மருத்துவமனைக்கு சிறப்பு மையம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது ந்த பெருமைக்குரிய அறிவிப்பு ஒரு விருது அல்ல. மாறாக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் துறையில் பணியாற்றிய பலரின் கடின உழைப்பு, வளர்ச்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு கல்வி  என்ற கருத்து ஆரம்ப நிலையில் இருந்தபோது, நீரிழிவு நோயாளிகளை முழுமையான முறையில் பராமரிக்க பயிற்சி பெற்ற நீரிழிவு செவிலியர் கல்வியாளர்களை  அமர்த்தியது. இது அப்போது ஒரு புதுமையான மற்றும் தனித்துவமான முயற்சியாக இருந்தது.காலப்போக்கில், இந்த முயற்சி பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு விரிவான திட்டமாக வளர்ந்தது. இது நீரிழிவு நோயாளிகளின் அடிப்படை மற்றும் முக்கிய தேவைகளைப் இந்தியாவிலும் வெளிநாட...

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே பேருந்து ஓட்டுனரின் கவன குறைவு காரணமாக பள்ளி மாணவி பேருந்து மற்றும் சாலை தடுப்பு சுவர் இடையே சிக்கி அலறி துடித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தின் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய சர்வீஸ் சாலையில் போதிய இட வசதிகள் இல்லாத நிலையில் பேருந்துகள் அனைத்தும் வந்து  பயணிகளை ஏற்றி கொண்டு குறுகிய இடத்தில் திரும்பி எதிர்சாலையில்  சென்று வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பேருந்து ஒன்று ஆற்காடு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் சோளிங்கர் நோக்கி செல்வதற்கு குறுகிய இடத்தில் பேருந்து திருப்பிய போது சாலையின் நடுவே இருந்த தடுப்பின் அருகாமையில் நடந்து சென்ற தனியார் பள்ளி மாணவி இருப்பதை கவனிக்காமல் பேருந்து இயக்கியதால் மாணவி பேருந்து மற்றும் சாலை நடுவே இருந்து தடுப்புக்கு இடையே சிக்கி அலறி கூச்சலிட்டு உள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பேருந்தை நிறுத்த செய்து பேருந்து மற்றும் தடுப்பு சுகருக்கு இடையில் சிக்கிய மாணவியை பத்திரமாக மீட்டெடுத்தனர் இந்த விபத்து சம்பவத்தில் மாணவிக்கு பெரிய அளவில் எதுவும் காயங்கள் ஏற்படவில்லை இருப்பினும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நட...

குப்படிசாத்தம் ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டுமானப்பணி அவலங்கள்!மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய சமுக ஆர்வலர்களின் வேண்டுகோள்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் குப்படிசாத்தம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது இந்த சுகாதார கட்டணம் தரம் குறைந்த பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டு வரும் நிலையில் கட்டுமானப் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. துணை சுகாதார கட்டுமான பணியை துறை சார்ந்த அலுவலர்கள் விரைந்து ஆய்வு செய்து தரமாக கட்ட ஆவணம் செய்ய வேண்டும். கட்டிடப் பொறியாளர் மற்றும் திட்ட இயக்குனர் இதனை நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், செருவங்கி கிராமம், கார்த்திகேய புரம் பகுதியில், 19.06.2026 அன்று மாலை 4.45 மணியளவில்ரங்கசமுத்திரம்   கிராமத்தைச் சேர்ந்த்  செல்வம் (வயது-57) த/பெ சின்னசாமி என்பவரும், சதாம் வயது-26 என்பவரும் ஆம்பூர் – குடியாத்தம் சாலையில் கார்த்திகேயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் . செல்வம் என்பவருக்கு தலையில் அடிபட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   சதாம் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேலூர்- அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  செல்வம் என்பவர் இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் எனவும், மாற்றுத்திறனாளி எனவும், இவருக்கு குப்பம்மாள் என்கிற மனைவியும் ராஜேஷ் என்கிற மகனும் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. மேலும்  உடல் உடற்கூராய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் மூலம் வழக்கு பத...

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளை முழுவதுமாக கலைக்க வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்! -புதுக்கோட்டையில் தவெக வேட்பாளர். கே எம். சரீப் பேட்டி!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,நாங்கள் தப்பு நடந்திருக்கிறது என்று சொல்வதைவிட தேர்தல் ஆணையம் எண்ணிக்கை கணக்கிலேயே குளறுபடிகள் இருக்கிறது.  அதை ஆதாரமாக எடுத்து நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எங்களது கோரிக்கையோடு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை வெளியிட்டதில் குளறுபடிகள் இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது. அதனால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எங்களது கோரிக்கை மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதுதான். எங்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.  கண்டிப்பாக உயர்நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடும் என்று நம்புகிறோம் என்றார். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை!..அரசுப் பேருந்து ஓட்டுநராக தடம் பதிக்கும் திருநங்கை ஸ்ரீ தேவி!!...

படம்
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக திருநங்கை ஒருவர் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருவது பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. திருநங்கை ஸ்ரீதேவி, கனரக வாகன ஓட்டுநர் என்ற பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த துறையில் தனது திறமையாலும் தன்னம்பிக்கையாலும் புதிய வரலாறு படைத்து வருகிறார். தினமும் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது பணியை அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மேற்கொண்டு வருகிறார். அரசுப் போக்குவரத்துத் துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தையும், அவர்களின் திறமைகளுக்கான மரியாதையையும் உயர்த்தியுள்ளது. ஸ்ரீதேவியின் இந்த சாதனைக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் திருநங்கை கலையரசி நடத்துனராகப் பணியில...

பழனி கீரனூர் காவல் நிலைய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - S.P. உத்தரவு!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர். சக்திவேல், காவலர். பார்த்திபன் ஆகிய இருவரும் பணியின் போது குடிபோதையில்   இருந்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர். சக்திவேல் காவலர். பார்த்திபன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவிட்டார். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர். ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்!!

படம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ‘எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர். ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்’. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன்” -வீரபாண்டியன்!!

படம்
   நடவடிக்கைக்கு ஆளானவர்: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப் பட்டவர் சி.மகேந்திரன். மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாமலே அவர் இருந்து வந்தார்” CPIல் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் குறித்து| இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

நீட் முறைகேடு :மேலும் ஒரு மாணவி தற்கொலை!!

படம்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே சின்னப்பம்பட்டியில் நீட் தேர்வு அச்சம் காரணமாக கோபிகா என்ற 19 வயது மாணவி தற்கொலை! கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தீவிரமாக தயாராகி வந்தவர் இவர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கோவையைச் சேர்ந்த அனு கீர்த்தனா தற்கொலை செய்துகொண்டார். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

காவல்துறைக்கு நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார்! -திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் பேட்டி!

படம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து துறை அமைச்சர் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், காவல்துறைக்கு நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா பேசி வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரால் பதிலளிக்க முடியாததால்தான் நேரலை துண்டிக்கப்பட்டதாக கருதுகிறோம் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலையில் இணைக்க வேண்டும்.  தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்   மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.  நாகபட்டினம் மாவட்டம் அக்வாடிக் அசோசியேசன் பிஆர்ஒய் நாகட்டினம் மாணவர்களுக்கு  மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளை  நடத்தியது. இந்தப் போட்டிகளில் பள்ளியைச் சேர்ந்த ஏழாம்  வகுப்பு மாணவி எம். சந்தோஷிகா  25 மீ  பிரஸ்ட் ஸ்ரோக், 50மீ பட்டர்பிளை,  25மீ  பிரீ ஸ்டைல் ஆகிய போட்டிகளில் முதலிடமும், 25 மீ பட்டர்பிளையில் இரண்டாம் இடமும், 50மீ பிரஸ்ட்  ஸ்ட்ரோக், 50மீ. பிரீஸ்டைல்  ஆகிய போட்டிகளில் மூன்றாம் இடமும்,   பெண்கள் பிரிவில்  ஒட்டுமொத்த சேம்பியன் பட்டமும், பரிசுகளும்  வென்றார். பள்ளியில்    ஒன்பதாம் வகுப்பு மாணவர் எம். நிஷாந்த் கிருஷ்ணன்  50மீ. ஃபிரீ ஸ்டைல்  போட்டியில் மூன்றாமிடமும், 50மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் மூன்றாமிடமும், 100மீ பிரஸ்ட் ட்ரோக் பிரிவில் இரண்டாமிடமும்  பெற்று  வெற்றிபெற்றுள்ளனர். நீச்ச...

குடியாத்தத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு.. முதல்வர் மற்றும் அன்புமணிக்கு நன்றி தெரிவித்து பாமகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம்,, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று தமிழக  ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சமூக நீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்ற அன்புமணி இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மயில்கல் என்றார் மேலும் இது ஒரு சாதிக்கான பிரச்சனை அல்ல தமிழகத்தின் சமூக நீதி பிரச்சனை இந்த சர்வே எடுக்கப்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வளரும் என தெரிவித்த அன்புமணி வரவேற்பு தெரிவித்து இருந்தார்.  இதனையடுத்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே சாதிவாரி கணக்கெடுக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் பாமக தலைவர் அன்புமணிக்கும் நன்றி தெரிவித்து பாமகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.