கரூர்: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய். 10 லட்சம் நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம்,கடந்த சனிக்கிழமை அன்று, கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிவாரண தொகையை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கினார். இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். இளங்கோவன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.