இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செங்கத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்!!

படம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது. இப்போராட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

ராணிப்பேட்டையில் முதலமைச்சர், இளைஞர் விளையாட்டு திருவிழா! இது நம்ம ஆட்டம் 2026 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் முதலமைச்சர், இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் இன்று (31.1.2026)  வாலாஜா வன்னிவேடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பாக முதலமைச்சர், இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி  வைத்து  வீரர்களுடன் கபடி விளையாடினார்.  மேலும் கேலோ இந்தியா கையுந்துபந்து மையத்தின் 30 மாணவிகள் மற்றும் ஸ்டார் குத்துச்சண்டை அகாடமி 40 மாணவ மாணவிகள் மொத்தம் 70 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.5 இலட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு அட்டைகளை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.  ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அவர்கள்...

ராணிப்பேட்டையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் வழங்கினார்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின்  கீழ் 5,781 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார்கள்.  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி அவர்கள் இன்று (31.01.2026) “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் மேல்விஷாரம் MMES  மகளிர் கலைக் கல்லூரியில் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும்-2,917 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும், ஆற்காடு மகாலட்சுமி  மகளிர் கலைக் கல்லூரியில் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும்-1,465 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும்,  அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில்  அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும்-1,180 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கியும்,  கல்பட்டு பாரதிவேலு கலைக் கல்லூரியில் சோளிங்கர் சட்டமன்ற...

எச்.ராஜா உடல்நிலை . அப்போலோ மருத்துவமனை அறிக்கை!!

படம்
எச். ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவ மனை நிர்வாகம் அதிகாரப் பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், அவருக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாத பாதிப்பினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் எச். ராஜாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். பக்கவாத பாதிப்பிலிருந்து அவர் மெல்ல குணமடைந்து வருவதாகவும், குடும்பத்தினருடன் பேசும் நிலையில்  முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர். எம். எ. முனியசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!

படம்
ராமநாதபுரம் மாவட்டம்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான  மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் தலைமை ஏற்று.. இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். M.A.முனியசாமி அவர்கள் முன்னிலையில். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர். ஆ.பவுல் மெல்க்யூர் அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 50 க்கு மேற்பட்டோர் தன்னை இணைத்துக் கொண்டனர். இதில் திருவாடானை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர். ஆர் ரவிச்சந்திரன், திருவாடானை தெற்கு ஒன்றிய கழக செயலாளர். சுப. ரத்தினமூர்த்தி, தொண்டி பேரூர் கழகச் செயலாளர். பி. காளிதாஸ், பாசறை மாவட்ட கழக செயலாளர். ஆர் ராம்குமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசை வென்ற AVM பாபு அவர்களின் காளையை நேரில் சென்று பார்வையிட்டு காளையின் உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர். சி. விஜயபாஸ்கர்!!

படம்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசைத் தட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த  AVM பாபு அவர்களின் காளை. இந்தச் சிறப்பான வெற்றிக்கு, முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று காளையைப் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

நெகிழி இல்லா குற்றாலமாக மாற்றிட குற்றாலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்!!

படம்
தென்காசி மாவட்டம், இயற்கை சுற்றுலாத்தலமான குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான கலைவாணர் கலையரங்கத்தில் வைத்து இன்று சனிக்கிழமை 31-1-2026 இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் குற்றாலம் காவல்துறை மற்றும் வனசரவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மற்றும் குற்றால பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்தலமான குற்றாலத்தினை நெகிழி இல்லா குற்றாலமாக மாற்றிட குற்றாலம் பகுதிகளில் கடை நடத்திவரும் கடை உரிமையாளர்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை தடை செய்யவும் அதற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்திடவும் தெரிவிக்கப்பட்டது மேலும் குற்றாலம் பகுதிகளில் 500 மில்லி ஒரு லிட்டர் மற்றும் 2 லி குடிநீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது தேநீர் கடைகளில் கண்ணாடி குவளை மற்றும் சில்வர் டம்லர் பயன்படுத்தும் தெரிவிக்கப்பட்டது குற்றாலம் அருவியில்உயர் ...

ராணிப்பேட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரி பார்க்கும் கருவிகளின் செயல்முறை விளக்கம் குறித்த விழிப்புணர்வு!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி ஆகியவற்றின் முதல் நிலை சரிபார்ப்பு முடிந்த பின்னர், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 06.01.2026 அன்று (செவ்வாய்க் கிழமை)  88 கட்டுப்பாட்டுக் கருவிகள், 88 வாக்குப்பதிவுக் கருவிகள் மற்றும் 88 வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (மொத்தம் 264) ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியலும் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளின்படி, பயிற்சி மற்றும் விழிப்புணர்விற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் தலா 20 என்ற...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.செ. சரவணன் IAS!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சி தலைவர்.செ. சரவணன்   IAS அவர்கள் பழனி அடிவார காவல் நிலைய அலுவலகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கீழ்விஷாரத்தில் பத்திரிகையாளரை தாக்கி – செல்போன் உடைப்பு, கொலை மிரட்டல்!கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது!!

படம்
 மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியில் செயல்பட்டு வரும் எம்.எம்.இ.எஸ். ஹக்கீம் மகளிர் கல்லூரியில், இன்று(31.01.26) கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி (டேப்லெட்) வழங்கும் விழா நடைபெற்றது. இந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில், நிகழ்ச்சியை செய்தியாக சேகரிக்க சென்ற “எக்ஸ்பிரஸ் பதிப்பு” என்ற தினசரி நாளிதழின் மாவட்ட செய்தியாளர். பாரூக் பாஷா கல்லூரிக்கு வந்தபோது, கல்லூரி நுழைவாயில் அருகே நின்றிருந்த கீழ்விஷாரம் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர். பஞ்சாட்சரம் என்பவரின் மகனும் 8வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான கோபி என்பவர் ஒப்பந்த வேலைகளில் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஒப்பந்ததாரர் எஸ்.ஆர்.&கோ நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் ராஜ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து, பத்திரிகையாளரிடம் தகராறு செய்துள்ளர் அப்போது அவர்கள் பேசும்போது: “நாங்கள் போட்ட தெருசாலைகள் சரியில்லை என்று பத்திரிகையில் செய்தி வெளியிடுவாயா?” என ஒருமையில் பேசியும், தகாத வ...

இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா!!

படம்
கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில்  நடைபெற்ற  சிருஷ்டி கே ரங் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது... கோவை கதிர்நாயக்கன் பாளையம்  பகுதியில் செயல்பட்டு வரும் தி ஃபர்ஸ்ட் ஸ்கூல்  பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆண்டு விழாவில்  பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் இயற்கை அறிவியல் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு தலைப்புகளில்  ஆண்டு விழா நிகழ்வு  நடைபெற்று வருகிறது... இதன் தொடர்ச்சியாக 2026 ஆம் ஆண்டு சிருஷ்டி கே ரங் எனும்  இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும்  தலைப்பில் ஆண்டு விழா  நடைபெற்றது...  பள்ளியின் தாளாளர் பால புவனேஸ்வரி மற்றும் நிர்வாக அறங்காவலர் பால முகுந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர்,கல்வி கற்கும் மாணவர்கள் உணவு பொருட்களை உற்பத்தி செய்யும்  உழவு தொழில்  முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,அப்போதுதான் உணவின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என தெரிவி...

கடலூர் கல்லூரி பெண்கள் மனதில் இடம் பிடித்த புதுநகர் காவல் ஆய்வாளர். பிரசன்னா!!

படம்
கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பிரசன்னா    கடலூர் காவல் கண்காணிப்பாளர். எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடலூர் காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடலூர் புது நகர் பொதுமக்கள்  மிகவும் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் புதுநகர் காவல்துறை என்று கூறலாம் ஒரு காவல்துறை ஆய்வாளருக்கு குற்றப் புலனாய்வு (Investigation), சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, FIR பதிவு செய்தல், ரோந்துப் பணி, தலைமைக் காவலர்களைக் கண்காணித்தல் மற்றும் காவல் நிலையப் பதிவேடுகளைப் பராமரித்தல் என் கடும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும். அவ்வப்போது  ரோந்து பணியிலும் தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் கண்காணிக்கும் பொறுப்பையும் துல்லியமாக பிரசன்னா மேற்கொண்டு வருகிறார். ஒரு மணி நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதுநகர் ஆய்வாளர் பிரசன்னா சூறாவளியாக சுழலுவதை நமது வெட்ட வெளிச்சம் தினசரி நாளிதழ் கண்டது நேற்று ஒரு மணி நேரத்தில் மாவட...

நத்தம் சமுத்திரா பட்டியில் தவெக சார்பில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

படம்
திண்டுக்கல் மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தெற்கு மாவட்டம், நத்தம் மத்திய ஒன்றியம் சார்பில் வேலம்பட்டி, ஆவிச்சிப்பட்டி, சமுத்திராபட்டி, பூதகுடி, ஆகிய ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிவு நீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து தர கோரி தமிழக அரசையும் ஊராட்சி நிர்வாகங்களை வலியுறுத்தி சமுத்திராபட்டியில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்.S.M.நிர்மல்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர்மற்றும்நிர்வாகிகள்.க.சீத்தாராமன்,க.வினோத்குமார், ச.அருள்பாண்டி, ந.பிச்சைமணி, க.கதிரவன் த.செந்தில்குமார், பெ.பாசத்தவம், ச.சுரேஷ், பூமிராஜன், பாரிதாசன், த.பாலகுரு, து.பொன்னன், பூமிநாதன், ராஜேஸ்வரி. தமிழக வெற்றிக் கழக தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நத்தம் நகரம் நிர்வாகிகள், நத்தம் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள், சாணார்பட்டி அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்தில் முக்கிய தீர்ப்பு!!

படம்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சூழல் அமைக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது மறு குடியமர்வு நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

சசிகலா மற்றும் ஒபிஸ்க்கு நோ என்ட்ரி!?

படம்
  தமிழக தேர்தல் களத்தில் ஓரங்கட்டப்பட்டார்களா ஓபிஎஸ் மற்றும் சசிகலா? அதிமுக கூட்டணியில் ஏற்க மறுப்பது ஏன்? விளைவு என்ன? அதிமுக கூட்டணியில் இணைய ஓ.பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதே போலத் தான் சசிகலாவின் நிலைமையும் நீடிப்பதாக கூறப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

விவாதம் நிகழ்ச்சியில் மயங்கிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா!!

படம்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர். எச். ராஜா அவர்கள், இன்று என்டிடிவி (NDTV) தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். விவாதத்தின் போது அவர் நிலைகுலைந்ததைக் கண்ட நெறியாளர், அவர் கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். ​அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்தாலும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நாடகம் போடுறாரு ஓபிஎஸ்: ரூம் அரசியல் பண்றாரு நடிகர் விஜய்; ஒரே மைக்கில் 2 பேரையும் பொளந்த செல்லூர் ராஜூ!!

படம்
 மதுரை: அறையில் இருந்து கொண்டு விஜய் அரசியல் செய்வதாக செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். யார் வேண்டுமானால் வரலாம். சகோதரர் விஜய்யை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா?. புது கான்செப்ட்டா கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை. இது தவறு. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்ற காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. மாநில அரசு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், மத்திய போலீஸ் வாங்கி துக...

கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள்!!

படம்
கொடிக்கம்பங்கள் நட சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் இணையத்தில் விண்ணப்பித்தபின் கூடுதல் தகவல்கள் வழங்க வேண்டும் மதச்சார்பான நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட ஏழு நாட்களுக்கு அனுமதி மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு மூன்று நாட்கள் மட்டும் அனுமதி உதவி ஆணையர் அனுமதி அளித்தபின் எஸ் எம் எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும். தேனி மாவட்ட சிறப்புச் செய்தியாளர் தனலட்சுமி.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைவு!!

படம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.7600 குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில் மாலையில் ரூ.2,800 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,26,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.15,850க்கு விற்பனையாகிறது. காலையில் தங்கம் விலை ஒரு கிராமிற்கு ரூ.600 குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.350 குறைந்துள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை சென்னையில் கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.4,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும கிராமுக்கு வெள்ளி விலை ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.405க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கிய வெற்றி அறக்கட்டளை!!

படம்
வெற்றி அறக்கட்டளை சார்பில்  பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு வெற்றி அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் குமார் சார்பில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் வெற்றி அறக்கட்டளை செயலாளர். குமார், பொருளாளர். வடிவேல், பாண்டு ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கினார்கள். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

ஆசிரியர்கள் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!!

படம்
நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்று மற்றும் இரண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன;https:/ /trb.tn.gov.inஎன்ற இணையதளத்தில்  முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் வெளியாகியுள்ள தேர்வு முடிவு. தென் மண்டல செய்தியாளர். சின்னத்தம்பி.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேட்டி!!

படம்
திரைபப்டத்தில் நடிப்பவரக்ள் அரசியலுக்கு வர முடியும் வெற்றி பெற முடியும் என இந்தியாவில் முதல்முறையாக எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ராமாராவ் நிகழ்த்தி காட்டினார்கள்  த.வெ.க., தி.மு.க வுக்கும் இடையே போட்டி எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போல் அ.தி.மு.க நிலை அவ்வாறாக இல்லை பாரத பிரதமர் வரும் போது பின்னால் அ.தி.மு.க தலைவர்கள் புகைபப்டம் இல்லை யாரை நம்பி கட்சி நடத்துகிறார்.இவர் முகத்துக்காக ஓட்டு போடும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவரா ?இவர் எந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை.சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி என எதிலும் வெல்ல வில்லை.மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர். அனைவரும் ஒருமனதாக விரும்புகின்றனர். அந்த புதிய மாற்றத்திற்கு ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தேவையில்லை மகக்ளுக்காக பணியாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அ.தி.மு.க இல்லத்திலும் சரி, தி.மு.க இல்லத்திலும் சரி வீட்டில் கேட்கும் போது குரல் மனைவி, மகள், மகன் என அனைவரும் த.வெ.க தலைவர் விஜய்க்கு தான்வாக்குஎனதெரிவிக்கிறார்கள்.எங்கள் சர்வே மூலம் நாங்கள் 40 சதவீதம் இருக்கிறோம். இதுவரை இல்லாத வார்த்தை ஏன் சொல்கிறார். தூத்துக்குடி...

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தைமாத பிரதோஷம் வழிபாடு!!

படம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ நேரத்தில் நந்தியம் பெருமானுக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது மற்றும் சிறப்பு தீப ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்வின் ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பிரதோஷ குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

மதங்களைக் கடந்த மனித நேயம்! அன்பு தானே கடவுள்!!

படம்
திருநெல்வேலி வழியாகத் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை சென்ற முருகன் பக்தர்கள், சமாதானபுரத்தில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் ஓய்வெடுத்தனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்குத் தேவாலய நிர்வாகம் தனது கதவுகளைத் திறந்து தங்குவதற்கு இடம் அளித்தது, மத நல்லிணக்கத்திற்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

நமணமுத்திரம் குடியிருப்பு ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி கடேஷ்வரர் சிவாலயத்தில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்தாலுகா  நமணசமுத்திரம் ஸ்ரீஅனுதாம்பாள் சமேத லெட்சுமி காடேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ அபிசேகம் நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு பால்,தயிர், மஞ்சள் சந்தனம், இளநீர் தேன்," , சீயக்காய், விபூதி உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நமணசமுத்திரம், அரசந்தம்பட்டி, தேக்காட்டூர், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

தேனி இடுக்கி சுரங்கப்பாதை திட்டம் கேரள பட்ஜெட்டில் ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு!!

படம்
கேரளா :இடுக்கி மாவட்டத்தின் கனவு திட்டமான கட்டப்பனை கம்பம் சுரங்கப்பாதை திட்டத்தின் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல் கட்டமாக ரூபாய் பத்து கோடி நிதி ஒதுக்கீடு இந்தத் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு ரூபாய் 1 ,182 ,43 கோடி ஆகும் ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் கம்பத்தில் இருந்து கட்டப்பனை செல்ல 40 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணம் செய்ய சுமார் 90 நிமிடங்கள் ஆகும் ஆனால் இந்த மலைகளுக்கு இடையே அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் 12 முதல் 15 கிலோமீட்டர் தொலைவாக குறைந்து 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் தமிழகம் கேரளத்தைச் சேர்ந்த வனத்துறையினர் மத்திய மாநில அரசுகள் பொறியாளர்கள் நிபுணர்கள் மூலமாக ஆய்வு செய்யப்படும் மலையை குடைந்து அமைக்கும் இந்த பணியால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இடுக்கி அணைகள் வனவிலங்குகள் இயற்கை சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை ஏதேனும் பாதிப்புகள் இருக்குமா என்ற நோக்கில் முதல் கட்டமாக ஆய்வு பணிகள் நடைபெற உள்ளன.  இந்தச் சுரங்கப்பாதை திட்டம் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தின் நீண்டகால கனவுத் திட்டமாக கருதப்படுகிறது. தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி....

ஞாயிறு பட்ஜெட்!!

படம்
மத்திய அரசின்  2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் *நிர்மலா சீதாராமன்* நாளை தாக்கல் செய்ய உள்ளார்.  விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுகிறது இந்த பட்ஜெட்! இதற்கு முன் 1999 பிப்.28ல் அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார் . தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

சின்ன மோசூரில் தையல் பயிற்சி முடித்த 30 கிராம பெண்களுக்கு சான்றிதழ்கள் டாக்டர். ராஜசேகரன் வழங்கினார்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் அடுத்த மோசூர் ஊராட்சி சின்ன மோசூர் கிராமத்தில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்று வழங்கும் விழா நடைபெற்றது தமிழ்நாடு வறுமை கோட்டு கீழ் உள்ள  மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு தையல் பயிற்சி அளிக்கபட்டது. ஆகவே பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு  அறக்கட்டளை நிறுவனரும் தமிழ் குடி உழவர் உற்பத்தியாளர் சங்க சேர்மனும், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவரும், மனித உரிமை தொழிற்சங்க மாநில தலைவருமான டாக்டர். கே.ராஜசேகரன் தலைமை தாங்கி சான்றுகள் வழங்கினார் மேலும் அறக்கட்டளை பொதுச் செயலாளர். விமலா பழனிவேல் ஆகியோரும் சான்றுகளை வழங்கினார்.  அறக்கட்டளை இயக்குனர்கள் டாக்டர். அந்தோணிசாமி வேணுகோபால் மோகன் பாபு சதீஷ்குமார் சந்தோஷ் குமார்  மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட சிறுபான்மை பிரிவு நலக்குழு உறுப்பினர். ஜி .கே. பார்த்திபன் காங்கிரஸ் பிரமுகர். மோசூர் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக.கலந்து கொண்டனர்  விழாவில் மகளிர் குழு உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் தையல் பயிற்சியாளர். தேவி நன்றி கூறினார். அரக்கோண...

மதுரை : அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய் செல்லூர் ராஜீ பேட்டி!!

படம்
விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம். எங்களை விமர்சிக்கும் போது எப்படி திட்டாமல் இருக்க முடியும்? அறையில் அமர்ந்து அரசியல் செய்கிறார் விஜய். விஜயை நாங்களாகவே திட்டவில்லை, ஆனால் எங்களை திட்டினால் நாங்கள் திட்டாமல் இருக்க முடியாது; எங்களை விமர்சித்ததால் விஜயை நாங்கள் விமர்சித்தோம் தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனம் குறித்து செல்லூர் ராஜு கருத்து. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார்!!

படம்
மதுரை : "அதிமுகவில் தன்னை சேர்க்குமாறு ஓபிஎஸ் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது; ஊடகங்கள் வழியாகத்தான் கேட்க வேண்டுமா? அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்தவருக்கு எப்படி தொடர்புகொள்ள வேண்டும் என தெரியாதா?,  ஓபிஎஸ் நாடகம் நடத்துகிறார், அதனைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள்" முன்னாள் அமைச்சர். செல்லூர் ராஜு. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.