கரூரில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம். முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம். இதில் சிறப்பாக அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், மாண்புமிகு ஈரோடு மக்களவை உறுப்பினர்.கே.ஈ.பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகிக்க, கரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். வெங்கமேடு சக்திவேல் வரவேற்புரையாற்ற,கழகச் செய்தி தொடர்பு துணைச் செயலாளர். சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களும், சமூக வலைதள பயிற்சியாளர். விக்னேஷ் அவர்களும் சமூக வலைத்தள பயிற்சி கருத்தரங்கை நடத்திட, இன்று கரூர் அழகம்மை மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.