இடுகைகள்

மே, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கரூரில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம். முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!

படம்
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஒன்றிய - நகர - பகுதி -  பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம். இதில் சிறப்பாக அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், மாண்புமிகு ஈரோடு மக்களவை உறுப்பினர்.கே.ஈ.பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகிக்க, கரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். வெங்கமேடு சக்திவேல் வரவேற்புரையாற்ற,கழகச் செய்தி தொடர்பு துணைச் செயலாளர். சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களும், சமூக வலைதள பயிற்சியாளர். விக்னேஷ் அவர்களும் சமூக வலைத்தள பயிற்சி கருத்தரங்கை நடத்திட, இன்று கரூர் அழகம்மை மஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கடலூரில் போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர். ஆனந்தகுமார் மற்றும் போலீசார்   பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய முயன்ற 5 போதை குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 474 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணம் நேருஜி நகரில் கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகாடமி பயிற்சி நிலையம் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நேருஜி நகரில் கண்டாதேவி இசை மற்றும் நாட்டிய அகடமி பயிற்சி நிலையம் உள்ளது. இந்த பயிற்சி நிலையத்தின் 12ம் ஆண்டு விழா மற்றும் சலங்கை பூஜை விழா அரக்கோணம் திருத்தணி சாலையிலுள்ள ஜோதி ராமசாமி மஹாலில் சிறப்பாக   நடைபெற்றது. விழாவிற்கு அகாடமி தலைவர். கே.ஆர்.சதீஷ் பாபு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர். கே. ஆர்.இந்திரா வரவேற்றார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்டம் விநாயகா நாட்டாலயா நிறுவனர்.  டாக்டர். எஸ். ஆர். மீனாட்சி பிரியா ராகவன் மற்றும் வளர் முருகன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வெஸ்டன் நடனம், கிளாசிக்கல் நடனம், கீபோர்டு வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிபடுத்தினர்.   கிளாசிகல் மாஸ்டர் .டாக்டர். புகழேந்தி பெருமாள் மற்றும் நித்திய கல்யாணி எம். விஜயா, குமாரி கீர்த்திகா ராமசந்திரன், ஆர்.தாமரைசெல்வன் சாய்மாஸ்டர், டி.யோகநாதன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். மாணவர்களின்பெற்றோர்கள் மற்றும் பொதுமக்...

கடலூரில் இன்று பணி ஓய்வு பெறும் காவல்துறையினருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

படம்
கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.05.2025 தேதி பணிஓய்வு பெறும்  ஆய்வாளர். R. தணிகாச்சலம்,  உதவி ஆய்வாளர்கள். P .K. முருகன்,T.  வெங்கடேசன், C.  கிருஷ்ணமூர்த்தி, G.  மணிவண்ணன், B.சாமிநாதன் மற்றும் P. ஜான்பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள். A. ரகுமாறன், K. குமார், C.  நாகராஜன்,M.  நடராஜன், N. மணிவேலன்  ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூரில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோகளில் ஓட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

படம்
கடலூர் மாவட்டம்,உலக புகையிலை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி. ஆதித்யா செந்தில்குமார் IAS மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS ஆகியோர் துவக்கி வைத்தனர்.  புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பண்ருட்டி உட்கோட்ட காவலர்களின் வாராந்திர காவாத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!

படம்
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள், பண்ருட்டி உட்கோட்ட காவலர்களின்  வாராந்திர கவாத்தினை (Parade) பார்வையிட்டார். பின்னர் காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் .காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்து பணிகளை சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பண்ருட்டி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்.  ராஜா அவர்கள் உடன் இருந்தார் . கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

மதுரையில் திமுக கழக சார்பில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தின் இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பண்ருட்டி நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!

படம்
கடலூர் மாவட்டம்,மதுரை மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரலாற்று சிறப்புமிக்க  பொதுக்குழு கூட்டம் நாளை 01.06.2025  நடைபெறுவதை முன்னிட்டு இன்று கடலூர் மேற்கு மாவட்ட கழக அவைத்  தலைவர், முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர். டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் அவர்களும் பண்ருட்டி நகரமன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான . க.இராஜேந்திரன் அவர்கள் கூட்ட அரங்கை பார்வையிட்டார். இந்த நிகழ்வில்  இளைஞரணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் உடன் இருந்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற ஜமாத் காலனி பள்ளிவாசலில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா!

படம்
திருப்பூர் மாவட்டம்,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால்மஸ்ஜிதே ரஹ்மானிய ஹனிஃபி சுன்னத்வல் ஜமாத் காலனி பள்ளிவாசல் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 10 மற்றும்12,வகுப்பில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரிக்கப்பட்டது. ஜும்மா தொழுகை முடிந்த பின்  ஜமாத்தார்கள் முன்னிலையில்   காலனிபள்ளிவாசல்நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. சூளேஸ்வரன்பட்டி செய்தியாளர்.மக்கள்சேவகன்மஜீத்.

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகர திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடிகர். வாகை சந்திரசேகர் பங்கேற்பு!!

படம்
கடலூர் மேற்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர திமுக சார்பில் கழகத் தலைவர் தலைமையிலான கழக அரசின் நாடு போற்றும் நான்காண்டு  சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று 30.5.2025  மாலை 6 மணி அளவில் நெல்லிக்குப்பம் வைடப்பாக்கம் மந்தகரை கலியபெருமாள் திடலில் நெல்லிக்குப்பம் நகர கழக செயலாளர். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளராக  கலை இலக்கிய பகுத்தறி பேரவை மாநில தலைவர். நடிகர்.  வாவை சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டு கழக அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்  .க.இராஜேந்திரன் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு உரையாற்றினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

பண்ருட்டி நகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் ஓட்டுநர் ரவி அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு விழா! நகர் மன்ற தலைவர்.க ராஜேந்திரன் பங்கேற்பு!!

படம்
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகராட்சியில் சுகாதாரப் பிரிவில் ஓட்டுநராக பணி புரிந்துவந்த  ரவி அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு விழா இன்று 30.5.2025 நகராட்சி அலுவலகத்தில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர்.க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி பொறுப்பு ஆணையாளர். கண்ணன் அவர்கள்   சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 6,754 பயனாளிகளுக்கு ரூபாய் 12.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

படம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று  நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டமன்ற பேரவைத்தலைவர்.மு.அப்பாவு அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவினை சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் 6,754 பயனாளிகளுக்கு ரூ.12.68 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.மு.அப்துல் வஹாப் அவர்கள்,  முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர்.இரா.ஆவுடையப்பன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர். மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

விக்கிரவாண்டில் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம்! அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு!!

படம்
விழுப்புரம் தெற்கு மாவட்டம் விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர். பொன். கௌதமசிகாமனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் மண்டல தேர்தல் பொறுப்பாளர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்களும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான க. பொன்முடி அவர்களும் இணைந்து  2026 சட்டமன்ற  தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியின் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.. உடன் சட்டமன்ற உறுப்பினர். அன்னியூர் சிவா அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு முகாம்!

படம்
கடலூர் மாவட்டம்,உலக புகையிலை தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாநகராட்சியில் கடலூர் மாநகராட்சி மேயர்.  சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயரும் வழக்கறிஞருமான பா. தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமையில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர். பார்த்திபன் பங்கேற்று சிறப்பான ஆலோசனை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள். செல்வ.புஷ்பலதா, சரிதா,சரஸ்வதி,சங்கீதா,சுமதி, சுபாஷ்னி,கிரேஸி, பாலசுந்தரம் கர்ணன் மாநகராட்சி பணியாளர்கள். மற்றும் தூய்மை பணியாளர்கள். திரளாக பங்கேற்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா! சு.ரவி. எம்.எல்.ஏ. பங்கேற்பு!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்  ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் 157 பேருக்கான பட்டமளிப்பு விழா! நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.  கல்லூரி செயலாளர். ரவிக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி .எம்.எல்.ஏ, இந்தியாவின் முதல் ஐ பிரைட் ராக்கெட் மிஷின் டைரக்டர் ஆனந்த் மேகலிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் இந்த நிகழ்வில் அரக்கோணம் ரோட்டரி சங்க தலைவர். ஆர். பி. ராஜா அதிமுக கட்சி நிர்வாகிகள். மோகன், நரேஷ் ,கே. ஆர். சீனிவாசன், சாரதி, தூர்வாசலு மற்றும்  பெற்றோர்கள்  கலந்து கொண்டனர். கல்லூரியின் 5 பாடப்பிரிவுகளில் 10 பெண்கள் உட்பட 157  பேர் பட்டம் பெற்று கொண்டனர்.  பேராசிரியர் வீரமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிர்வாக அலுவலர். சுரேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்  இறுதியில் கல்லூரி முதல்வர். ஜெகநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார். அரக்கோணம் செய்தியாளர் ரவி.