இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்!!

படம்
வேலூர் மாவட்டம்,குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற  12 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அருள்மிகு படவேடு எல்லையம்மன் ஆலயம் அருகில் இருந்து புறப்பட்டு  காங்கிரஸ் ஹவுஸ் ரோடு அண்ணா தெரு பழைய பஸ் நிலையம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு நெல்லூர் பேட்டைஏரியில்கரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர். சுபலட்சுமி,காவல்துணைகண்காணிப்பாளர். சுரேஷ் வட்டாட்சியர் பழனி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  குடியாத்தம் செய்தியாளர் கே.வி.ஆர்.

அரக்கோணம் மதுரை பிள்ளை தெருவில் நடைபெற்ற சமபந்தி போஜனம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரம், மதுரை பிள்ளை தெருவில்  வர சக்தி விநாயகர்  சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஐந்தாம் நாளில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளில் சி கஜேந்திரன் பி.செழியன் என்.வெங்கடேசன் முதலியார் ஈ..சண்முகம் வி.சரவணன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.மேலும் நிகழ்ச்சியில் ஜிஎஸ் .மூர்த்தி எஸ்.டி. ராஜேஷ் பேன்சி தாமு என்.பாலகிருஷ்ணன் எம்.குமார் விக்கி, ராமலிங்கம், தினேஷ்குமார், சீனிவாசன் உள்ளிட்டவர்களும் ||வது வார்டு பொதுமக்களும் கலந்து கொண்டனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய வாகனத்தால் தகராறு!!

படம்
தேனி மாவட்டம், தேனி ,மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு எதிரே  தக்காளி ஏற்றி வந்த வண்டியை போக்குவரத்துக்கு இடையூறாக இளைஞர்கள் நிறுத்தி வைத்தனர். கறிகோழி கடை வியாபாரி தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் விசாரணைக்கு  வந்த காவல்துறையினர் மீது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அப்ப குதியினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேனி செய்தியாளர் சின்னதம்பி.

ஒன்றிய பெருந்தலைவருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம்,இன்று 31/08/2025 திருமண நாள் காணும் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு அவர்களுக்கு நிலவன் TV சார்பில் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். அன்புடன், மு. பிரகாசம்  நிலவன் TV குழுமம் 

வேல்முருகன் MLA முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்!!

படம்
கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு மாநில இளைஞரணி துணை செயலாளர். மு. சுரேந்தர்  அவர்களின் ஒருங்கிணைப்பில் சிதம்பரம் M.Y.M பைசல் மஹாலில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் முன்னிலையில் தங்களை  கட்சியில் இணைத்துக்கொண்டனர். உடன் கடலூர் மாவட்ட  பொறுப்பாளர். தி.கண்ணன் மாமன்ற உறுப்பினர், மாநில இளைஞர் அணி செயலாளர். வே.க .முருகன் தொகுதி பொறுப்பாளர்கள். சு.சேரலாதன், ஆர்.கே .குமரன், எம்.ஆர் .கே .சிவக்குமார்,  வழக்கறிஞர். லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்றனர்.  கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

தமிழ்நாட்டில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்! வேல்முருகன் எம். எல். ஏ!!

படம்
கடலூர்மாவட்டம்,வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றுவது, கடல் பகுதிகளிலிருந்து மீனவர்களை வெளியேற்றுவது,துணிஉற்பத்தியிலிருந்து நெசவாளர்களை வெளியேற்றுவது இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கிறது. இவர்களின் திட்டங்கள், பொருளியல் கொள்கைகள் ஆகிய அனைத்தும் இத்திசையிலேயே செயல்பட்டு வருகின்றன. இப்போது சில்லரை வணிகத்திலிருந்து மண்ணின் வணிகர்களை வெளியேற்றும் திட்டத்தை, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.  குறிப்பாக, ஜி.எஸ்.டி. ஆன்லைன் வர்த்தகத்தால் நாட்டில் சில்லரை வணிகம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.  ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், மளிகை வணிகம் மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்த வணிகர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.  அதாவது, அதானி, அம்பானி, டி மார்ட் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உள்நாட்டு சில்லரை வணிகர்களும், உழவர்களும், சிறு உற்பத்தியாளர்களும் நசுங்க வேண்டும் என்பதே, ஒன்றிய அ...

கரூர்: வள்ளியம்பாளையம் அருள்மிகு நல்லாயி அம்மன் கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா!!

படம்
கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்  நடைபெறும், கரூர் தொகுதி, மண்மங்கலம் வட்டம், வள்ளியம்பாளையம் அருள்மிகு நல்லாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள்  கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கடலூர்: மர்ம பொருள் வெடிப்பு சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!

படம்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் காடாம்புலியூர் சமத்துவபுரத்தில் மர்ம பொருள் வெடித்த சம்பவ இடத்தினை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுகாவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். கடலூர் மாவட்ட செய்தியாளர்  குகன்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!

படம்
கடலூர் போக்குவரத்து காவல்நிலையம் உதவி ஆய்வாளர். சிவக்குமார் வாகனத்தனிக்கை செய்யும்போது கடலூர் உழவர்சந்தை   அருகில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனத்தை வழக்கு பதிவு செய்தும் விழிப்புணர்வு வழங்கி அனுப்பப்பட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!

படம்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அவர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் அவர்கள் சைபர் கிரைம் காவலர்களுடன் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மவாட்ட அளவிலான விளையாட்டு போட்டியின் போது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது,  OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் காவல் உதவி App தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட்,Loan Apps, school scholarship scams ,Part time jobs பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும்  சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in  குறித்து விளக்கமளிக்கபட்டது. கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

மீனாட்சிப்பேட்டை: இரண்டு நாட்கள் கைப்பந்து போட்டி!!

படம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சப்தகிரி நகரில் நேற்று 30 ஆம் தேதி மற்றும் இன்று 31 ஆம் தேதி என இரண்டு நாட்கள் டிசி நண்பர்கள் நடத்தும் 3 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

குறிஞ்சிப்பாடி: பெண் மாயம்! காவல்துறை விசாரணை!!

படம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கொத்தவாச்சேரி காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கம்சலா, திருமணம் செய்யாமல் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், அவரது சகோதரர் சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

வடகரை: பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து செயல்முறைப் பயிற்சி!!

படம்
திட்டக்குடி வட்டம், வடகரை அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில், மாணவர்களுக்கு விதைப்பந்து செயல்முறை பயிற்சி நேற்று (ஆக. 29) அளிக்கப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர். செல்வராணி மற்றும் ஆசிரியர். பாரி ஆகியோர் மாணவர்களுக்கு விதைப்பந்து செயல்முறை குறித்து விளக்கினர். இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூர்: செல்வ விநாயகர் வீதியுலா; பக்தர்கள் பரவசம்!!

படம்
கடலூர் மாவட்டம், நெய்வேலி, மந்தாரக்குப்பம் பாலாஜி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  இரவு செல்வ விநாயகர் வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

புவனகிரி: தாமிர கம்பிகள் திருடிய மர்ம நபர்கள்!!

படம்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் கிராமத்தில் வயல்வெளியில் இருந்த மின்மாற்றியை மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த சுமார் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து மின் துறை அதிகாரி ரவி அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கடலூரில் தீப்பிடித்த டீக்கடை: நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட எம்.எல்.ஏ!!

படம்
கடலூர் மாவட்டம்,விருத்தாச்சலம் திருவிக நகரில் சாதிக் பாஷா என்பவருக்கு சொந்தமான தேநீர் அங்காடி திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்தச் சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்ற விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ விபத்து குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட சாதிக் பாஷாவுக்கு ஆறுதல் கூறினார். மேலும், வருவாய் வட்டாட்சியரை தொடர்பு கொண்டு, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

அரக்கோணம் டவுன் ஹாலில் நடைபெற்ற அன்னதானம்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரில் தி டவுன் ஹால் சங்கம் உள்ளது. மிகவும் பழமை மிக்க இச்சங்கத்தின்  புதிய நிர்வாகிகள் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடு க்கப்பட்டனர். இந்நிலையில் புதிய நிர்வாகம் சார்பில் வாரம்தோறும்  அன்னதானம் வழங்க முன் வந்தது அதன்படி நேற்று  சங்க தலைவர் ஜி.கே. பாபு ஜீ தலைமையில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர். டாக்டர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஜிவி ஜெய்சங்கர் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கபடும் அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக பொதுச் செயலாளர். பன்னீர்செல்வம் மற்றும் ஜி.வி. ஜெய்சங்கருக்கு சமூக நல பொறுப்பாளர். முருகவேல் மற்றும் பூக்கடை சாய்  பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர். பாண்டுரங்கன் முன்னாள் கவுன்சிலர். எஸ்.சரவணன் உட்பட சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

செய்யூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! ஆர்டிஓ நல உதவிகளை வழங்கினார்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், செய்யூர் ஊராட்சி கிராமத்தில் தமிழக அரசின் உங்களுடன்  ஸ்டாலின் சிறப்பு முகாம் அரசு பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு அரக்கோணம் தாசில்தார். வெங்கடேசன் தலைமை தாங்கினார். செய்யூர்கிராம அதிகாரி பவானி வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன், செய்யூர்  ஊராட்சி மன்ற தலைவர். ஜோதிலட்சுமி ராஜா கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று,  அரசின் நல உதவிகளையும் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் முன்வாய் ஊராட்சி மன்ற தலைவர். பிரேமா பழனி செய்யூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். கோட்டீஸ்வரன் அரக்கோணம் வட்டார திட்ட அலுவலர்  பிரகாஷ் மற்றும் அரக்கோணம் ஒன்றிய துணைச் சேர்மன். புருஷோத்தமன் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிழ்செல்வன் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர். ஆர். பி.ரவிக்குமார் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர். ஆர். பி.ராஜா உட்பட ஆத்தூர் கிராம அதிகாரி. லட்சுமி நரசிம்மன் பல்வேறு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் திரளாக  கலந்து கொண்டனர் முகாம் ஏற்பாடுகளை செய்யூர் ஊராட்சி மன்றம் சார...

நெமிலி பேரூராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் - பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர்& பேரூராட்சி மன்ற தலைவர்!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சியில் உள்ள, கலா பேரடைஸ் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாம்நடைபெற்றது.முகாமிற்கு நெமிலி பேரூராட்சியின் செயல் அலுவலர். எழிலரசி தலைமை தாங்கினார், நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன் வரவேற்றார். இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் நெமிலி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர். ஞானசுந்தரம், நெமிலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர். சந்திரசேகர், நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், கவுன்சிலர்கள். ஏழுமலை, தண்டபாணி, சேகர், மங்கையர்க்கரசி, முகம்மது அப்துல் ரகுமான் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இயங்காமல் இருக்கும் மாணவ மாணவிகள் விடுதியை மீண்டும் திறக்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை!!

படம்
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலராக மதிப்புமிகு ப.செந்தில்குமார் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் புதியதாக பொறுப்பேற்றுள்ள அலுவலக கண்காணிப்பாளர் மதிப்புமிகு மோகன் , இளநிலை பொறியாளர் குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தனர் பின்பு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மதிப்புமிகு ப.செந்தில்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதன் விவரம்  மனுவில் மாவட்டத்தில் இயங்கிக் கொண்டு இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள விடுதிகளை மீண்டும் திறக்க வேண்டும் பெரியப்பாளையம் சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி, சமூகநீதி அரசினர்  மாணவர் விடுதி...திருவள்ளூர் , கோளப்பன்சேரி சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி ,வெள்ளியூர் சமூகநீதி அரசினர்  மாணவர் விடுதி செவ்வாப்பேட்டை சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி, ஆரணி சமூகநீதி அரசினர் மாணவர் விடுதி.(பழங்குடியினர் நலத்துறை), திருவள்ளூர் சமூகநீதி அரசினர் மாணவியர் விடுதி, பூந்தமல்லி, அரசினர் மாணவியர்...

தணிகைப் போளூரில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் விழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்,தணிகைப் போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூபாய். 68 லட்சம்  மதிப்பீட்டிலான மூன்று புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு  பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.  நடராஜன் வரவேற்றார். துணைத் தலைவரும் திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான பசுபதி,பொருளாளர் . டில்லி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு  அழைப்பாளராக ஊராட்சி மன்றத் தலைவர்.  வெங்கடேசன் பூமி பூஜையில் கலந்து கொண்டு அனைவருடன் இணைந்து அடிக்கல் நாட்டினார். முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்.  மோகன் காந்தி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் . மேரி தங்கம்மாள்,  மற்றும். கன்னியப்பரெட்டி,   மனோகரன்,  முனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அரக்கோணம் செய்தியாளர் ரவி.

பரம்பரா அகாடமி சீனியர் சிபிஎஸ்இ செகண்டரி பள்ளி விளையாட்டு விழா!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், வடமாம்பாக்கம் ஊராட்சி எல்லையில் எஸ்.கே பரம்பரா அகாடமி சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ உடன் இணைந்தது) பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில்  .கேல் மஹோத்சவ் எனும் மாபெரும் ஆண்டுவிளையாட்டு   கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர். பார்த்தசாரதி வெங்கடராமன் நல்லாசியுடன் அறங்காவலர். கமல் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசிய போது இப்பள்ளி விளையாட்டு மற்றும் கல்வியில் அதிக பணம் செலுத்தி வருகிறது. இப்பள்ளியில் பயின்ற மாணவர் இருவர் டாக்டர் படிப்பு படிக்கவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் ஆகவே இனி வரும் காலங்களில் ஐஐடி டாக்டர் மற்றும் விளையாட்டுகளுக்கு அதிக கவனம் செலுத்தும் என கூறினார். வருடாந்திர விளையாட்டு தினம்-2025 விழா கொண்டாடத்திற்கு வந்தவர்களை  பள்ளி முதல்வர் சாமுவேல் கிறிசோஸ்டம்.ஜே. வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கோட்ட காவல் துணை   கண்காணிப்பாளர். ஒய்.ஜாஃபர் சித்திக் மற்றும் அரக்கோணம் ஒன்றியம், வடமாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர், டி. பாக்...

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!!

படம்
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து மற்றும் இதர விளையாட்டு துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர். சு.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர். பி. ஹேமலதா,பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர். ஏ. வீ.லோகநாதன் பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர். E.பழனி, முதுகலை ஆசிரியர்கள். குமார், லட்சுமிகாந்தன்.பாரதி ஆசிரியர் செயலர். ரத்தின பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி எஸ்.வீ.ஜுவல்லரி உரிமையாளரும்,சமூக ஆர்வலருமான  எஸ் .வீ.அருள் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டி-ஷர்ட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்துரை ஆற்றினார்.பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர். முனைவர். ராஜா.ஆநன்றிகூறினார்.முன்னதாகஉடற்கல்வி இயக்குனர். சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர். செல்வகுமார் ஆகியோர் நோக்கியாற்றினர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

ராணிப்பேட்டை: பாலாற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!!

படம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை பலத்த பாதுகாப்புடன் சென்று பாலாற்றில் கரைக்கப்பட்டது.          ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை, நவல்பூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மூன்று இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். இந்நிலையில் அந்த விநாயகர் சிலைகளை பாலாற்றில் கரைப்பதற்காக முத்துக்கடை, ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலம் வழியாக ஊர்வலமாக சென்று பால் ஆற்றில் கரைத்தனர் , இந்த நிகழ்ச்சிக்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் அவர்கள் ஆய்வு செய்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விழா நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடைபெற அறிவுறுத்தப்பட்டன ..மேலும் இதில் மாவட்டகாவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் , ராணிப்பேட்டை  துணை கண்காணிப்பாளர். இமயவர்மன், ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் பங்கேற்றனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

அமைச்சருக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த மணிவண்ணன்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் இன்று 29/08/2025 திருமணநாள் விழா காணும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, விஸ்வாஸ் தலைவர். கமலாகாந்தி அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்  உலகில் உள்ள எல்லா வளமும் நலமும் பெற்று இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!             அன்புடன், மணிவண்ணன்  நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்.

அமைச்சருக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த எஸ்.ஜி.சி பெருமாள்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் இன்று 29/08/2025 திருமணநாள் விழா காணும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, விஸ்வாஸ் தலைவர். கமலாகாந்தி அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்  உலகில் உள்ள எல்லா வளமும் நலமும் பெற்று இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!             அன்புடன், எஸ்.ஜி.சி பெருமாள்,  நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர்

ரெட்டிவலம் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் ! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர். பெ. வடிவேலு!!

படம்
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர். சிவக்குமார் தலைமை தாங்கினார், ரெட்டிவலம் ஊராட்சி மன்ற தலைவர். உமாதேவி ரமேஷ், நெடும்புலி ஊராட்சி மன்ற தலைவர். மாறன், அகவலம் ஊராட்சி மன்ற தலைவர். ஆஷா மார்கண்டேயன், வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி இரவி, ஒன்றிய குழு உறுப்பினர். கிருஷ்ணவேணி, ஆரூண், வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் ரெட்டிவலம், வேட்டாங்குளம், அகவலம், நெடும்புலி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி திமுக ஒன்றிய செயலாளர்கள், ஆர். பி.ரவீந்திரன், எஸ். ஜி. சி. பெருமாள், மணிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் நரசிம்மன், தனசேகர், வெங்க...