ராணிப்பேட்டை மாவட்ட பி எஸ்பி நிர்வாகம் விரைவில் அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட நிர்வாகம் கலைக்கபட்டடு புதிய நிர்வாகம் அறிவிக்க மாநில தலைவர் முடிவு செய்து உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா.சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அரக்கோணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் சார்பில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலையும் தனித்து சந்தித்தது இந்த நிலையில் தமிழ் மாநில தலைவர் டாக்டர் ஆனந்தன் அவர்கள் உத்தாவின் பேரில் ராணிப் பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகம் கலைக்கப்படுவதாகவும் விரைவில் மாவட்ட தலைவர் பா.சுதாகர் தலைமையில் புதிய நிர்வாகம் அறிவிக்கபடும் என்கிற தகவலை மாநில தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பா சுதாகர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக