இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கேவேளூரில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு அதிமுக கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியம்  கேவேளூர் பகுதியில்  முன்னாள் காவல் ஆய்வாளர். முகுந்தன் அவர்கள் ஏற்பாட்டில்  ஒன்றிய கழக செயலாளர் வளவனூர் எஸ்.அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக  செயலாளர் S.M.சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர்  வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் அனைத்துலக  எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். VKR.சீனிவாசன், மாவட்ட கழக துணை செயலாளர். ரமா பிரபா உட்பட திரளான அதிமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கடலூர்-காவல்துறை துப்பறிவு மோப்பநாய் படைப்பிரிவு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் சாகச நிகழ்ச்சி!!

படம்
  கடலூர் மாவட்டம்  கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், கடலூர் மாவட்டம் காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படைபிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடலூர் மஞ்சக்குப்பம்  புத்தக திருவிழாவில்  விழிப்புணர்வு  சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 1. துப்பறியும் மோப்ப நாய்கள் வணக்கம் செலுத்துதல். 2. துப்பறியும் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மற்றும் பயிற்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்பணிதல் 3. மோப்ப நாய் லியோவின் தனித்திறமையை மக்களுக்கு காண்பித்தல். 4. மோப்ப நாய் லியோ வண்ணப்பெட்டியில் மறைத்து வைத்துள்ள வெடிகுண்டை கண்டுபிடித்தல். இதன் மூலம் மக்களுக்கு பொது இடங்களில் பஸ் நிலையம், இரயில் நிலையம், திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்படும் பொருட்களை, குறிப்பாக சூட்கேஸ், பேக், போன்றவற்றை பொதுமக்கள் தன்னிச்சையாக அதை திறப்பது (ம) எடுத்துக்கொண்டு செல்லுதல் கூடாது. மாறாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறை வரும்வரை அந்த பொருட்களின் அருக...

கடலூர்-பணி நிறைவு பெறும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்

படம்
  கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.03.2025 தேதி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள்  இளங்கோவன், தகுமாரசாமி,  தெய்வநாயகம், கோபால், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,ராஜா,  ஜெயராமன், தலைமை காவலர் ஜெயச்சந்திரன், ஆகியோர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. ஜெயக்குமார் IPS அவர்கள் சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் மென வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற காவல் துறையினர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேமநல நிதி. குடும்ப சேமநல நிதி ஆகிய பண பயன்கள் விரைவாக கிடைக்க வேண்டும் என காவல்துறை அமைச்சுப் பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார். -கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கரூர்-ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மூலம் 30 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

படம்
  கரூர் மாவட்டம்  அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட திமுக சார்பில்,  புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இன்று கரூர் பிரேம் மஹாலில் நடைபெற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 30 வகையான மளிகை பொருட்களை உள்ளடக்கிய பையை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கினார்.  இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் -கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .31.03.2025 (திங்கள்கிழமை) 😍இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்🕌🕋🙏 👉.கடலூரில் தீபாவளி சீட்டு, சிறு சேமிப்புத் திட்டம் நடத்தி 2000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கம்மியம்பேட்டையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். 👉.நெல்லிக்குப்பம் அடுத்த காரணப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் எம்.எல்.ஏ தலைமையில் திறக்கப்பட்டது.  👉.கடலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை வெயில் தாக்கத்தை முன்னிட்டு நீர், மோர் பந்தல் திறப்பு விழா திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்றது. 👉.கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. 👉.கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா இம்மாதம் 22-ந்தேதி துவங்கி இன்று திங்கள்கிழமை சிறப்பாக முடிவடைகிறது. 👉.கடலூர் கிளை சிறைச்சாலை தற்போது கறிக்கடையாக மாறி உள்ளது. தற்போது 18 முதல் 21 வயது உடைய கைதிகளை அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தகவல். 👉.பண்ருட்டி நகராட்சி ...

நெமிலி எஸ்.ஜி.சி பெருமாள் அவர்களின் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்ற வார்த்தை மெய்ப்பிக்கும் ஈகைத் திருநாளாம் புனித ரமலான் திருவிழா நல்வாழ்த்துக்கள் இப்பெருநாளில் சமத்துவமாய் சுதந்திரமாய் சகோதரத்துவமாய் வாழ உறுதி ஏற்போம் சபதம் ஏற்போம்! திரு.எஸ்.ஜி.சி பெருமாள் செயலாளர் (நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகம்). சுந்தராம்பாள் பெருமாள் மாவட்ட கவுன்சிலர்.

நெமிலி - புனித இரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு பெ. வடிவேலு பங்கேற்ற பேரன்பின் பெருவிழா!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் பேரூர் தி.மு.க சார்பில் பேரூர் செயலாளர். என்.ஆர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய மக்களின் உரிமைகளையும், நலன்களையும் நிலைநாட்ட எந்த நிலையிலும் உறுதியோடு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்கள் துணை நிற்பார் என்று தெரிவித்து, அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.  இந்த நிகழ்வில் பனப்பாக்கம் பேரூராட்சி மன்றத் தலைவர்.கவிதா சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்துங்கன், சாரதி, கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

பண்ருட்டி- மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழாவில் நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம்!

படம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் 5 வார்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் பூர்த்தி நிறைவு விழாவில் இன்று 30.3.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க.இராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். எஸ்வி SV.ஜுவல்லரி உரிமையாளர் வைரக்கண்ணு அருள் நகர மன்ற உறுப்பினர் சோழன் இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி நகர மன்ற தலைவர். ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு!

படம்
கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  பேருந்து நிலையம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 2025  கீழ் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிக்காக 4 கோடியே 70 லட்சம் மதிப்பீடுகள் ஒதுக்கப்பட்டு  பணிகள் தொடங்கப்பட உள்ளதால்  பணிகள் நடைபெற உள்ள இடங்களை சீட் மூலம் சைடு அடைப்புகள் பணி நடைபெற்று வருகிறது  இன்று 30.3.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு.க.இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு   ஒப்பந்ததாரர்கள் அறிவுரைகள் வழங்கி பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

விழுப்புரம் - திரு. க. பொன்முடி வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் அவர்கள் நாயனூர் ஊராட்சியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO) தேர்வு செய்யப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!

படம்
விழுப்புரம் மாவட்டம் மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயனூர் ஊராட்சியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO) அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை இன்று (29.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா,இ.ஆ.ப., விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர். முருகேசன், விழுப்புரம் சிட்கோ, கிளைமேலாளர். அ.முகமதா பேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். ஆ.சா.பிரபு உட்பட பலர் உள்ளனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கரூர் - நெரூர் வடபாகம் ஊராட்சி ஒத்தகடை அருந்ததியர் காலனியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நாடக மேடையை அமைச்சர். செந்தில் பாலாஜி திறந்து வைப்பு!

படம்
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூர் நெரூர் வடபாகம் ஊராட்சி, ஒத்தகடை அருந்ததியர் காலனியில், ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, நாடக மேடையை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில்  கலந்துக்கொண்டனர். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .30.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) 👉.ஆந்திராவில் இருந்து கடலூருக்கு இரயிலில் கடத்தி வரப்பட்ட 58 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த 19 வாலிபர்கள் கைது. 👉.ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின்  பிரச்சார  செயலாளர் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கை.  👉.திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 👉.கடலூர் புதுப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.63 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மேயர் துவங்கி வைத்தார். 👉.தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் கடலூர் துறைமுகத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்க வேண்டும் என காவல் SP-யிடம் மனு. 👉.கடலூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கடலூர் கோவன் நுரையீரல் சிகிச்சை மையம் சார்பில் சிறை கைதிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் 120 புத்தகங்கள் வழங்கப்பட்டது. 👉.தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்டம் சார்பில் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு குறித்த சுய பயிற்சி முகாம் திருப்பாதி...

பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அனிதா நாராயணன் தலைமை தாங்கினார்,  ஒன்றியக்குழுஉறுப்பினர் மனோகரன், து.தலைவர் கிரிஜா,மு.உ.தொ.கல்வி அலுவலர்உத்தமன், RtdHMஹரிஹரன், முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் விநாயகம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்விப் புரவலர்கள், முன்னாள் மாணவர்கள், SMCஉறுப்பினர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பிள்ளைகளின் கலை நிகழ்சிகளை கண்டுகளித்தனர்.  ஏற்கனவே உள்ள 155புரவலர்களுடன் புதிதாக 5 புரவலர்கள் இணைந்தனர். ஆசிரியைகள் மலர்விழி,ஐடா,ஞானம்,சியாமளா,அகிலா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர் SMC தலைவர் மணிமேகலை லிங்கநாதன், PTC பார்த்திபன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி கலையரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி அமைச்சர். செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு!

படம்
கரூர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், இன்று, கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி கலையரங்கில், கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில்,  மாணவச்செல்வங்களுக்கு, உயர்கல்விக்கு  வழிகாட்டிடும்  'என் கல்லூரி கனவு' நிகழ்ச்சியை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

விருத்தாச்சலம் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆய்வு செய்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!

படம்
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.  துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் அவர்கள் உடன் இருந்தார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

பண்ருட்டி - ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தவர் கைது!

படம்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்தி விற்பணை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. P. N. இராஜா அவர்களின் மேற்பார்வையில் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு. வேலுமணி, உதவி ஆய்வாளர்கள் திரு. பிரேம்குமார், திரு. தங்கவேல் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. தவச்செல்வம் மற்றும் போலீசார்  பண்ருட்டி ரயில்வே ஸ்டேசன் புத்துமாரியம்மன் கோயில் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து  கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 1. பிரதீப் வயது 26 த/பெ ஈஸ்வரன் ராவ், விசாகப்பட்டினம், ஆந்திரா, 2.அருண்குமார் வயது 33 த/பெ ஆறுமுகம், புவனகிரி, 3. புகழேந்தி வயது 26 த/பெ சக்கரபாணி, புவனகிரி, 4. ஜெயசுமண் வயது 25, த/பெ செந்தில்குமார், பண்ருட்டி, 5. ஜீவானந்தம் வயது 25 த/பெ முருகன், கடலூர், 6. அஜய் (எ) அஜய்குமார் வயது 20 த/பெ வெங்கடேசன், தோப்புக்கொல்லை, 7. ஜீவா வயது 20 த/பெ கலைச்செல்வன், தோப்புக்கொல்லை, 8. கிருஷ்ணசெல்வம் வயது 18 த/பெ கிருஷ்ணமூர்த்தி, தோப்புக்கொல்...

கடலூர் - குள்ளஞ்சாவடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!

படம்
கடலூர் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் ஆனந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS  அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை சம்பந்தமாகவும் மற்றும்  போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும்   தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் மதித்து அவர்கள் வார்த்தையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். பள்ளியில் அனைவரும்   போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

பெ. வடிவேலு தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த நான்கரை மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதி ரூ.4034 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் - தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் பா.ஜ.க அரசை கண்டித்து இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் தக்கோலம் கூட்ரோடு பகுதியில் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில்  மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி அவர்களும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.MP அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினர். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.கண்ணய்யன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், சயனபுரம்  ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். சிவா, ஒன்றிய நிர்வாகிகள். புருஷோத்தமன், சங்கர், அப்துல் ரகுமான் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந...

நெமிலி அருகே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4000 கோடியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

படம்
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும் இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் மேற்பார்வையில், மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர். ஆர்.ஜி.வினோத் காந்தி அவர்கள் வழிகாட்டுதலின்படி, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4000 கோடியை தரமறுக்கும் பாசிச ஒன்றிய அரசை கண்டித்து நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பி்ல் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் கீழ்வீதி மற்றும் நாகவேடு கிராமத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். மங்கையர்க்கரசி சுப்பிரமணி, நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய கழக பொர...

ராஜபாளையம் - 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றியை பாஜக அரசை கண்டித்து தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

படம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் திமுக தலைமை கழகத்தின் உத்தரவின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் அறிவுறுத்தலின்படி, இராஜபாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தளவாய்புரம் ஊராட்சி  பேருந்து நிலையம் அருகில் மற்றும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி OP அருகில் என இரண்டு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராஜபாளையம் ஒன்றிய செயலாளர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் வாரியதுணைத்தலைவர் ராசாஅருண்மொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது எனவும், தமிழ் மொழியை அழிக்கும் நோக்கில் இந்தி மொழியை திணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கல்வி நிதி நிறுத்தியது அதனைத்தொடர்ந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான  சம்பள நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்தி தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, இருந்தபோதிலும் ம...

அடிப்படை வசதிகூட இல்லை: சிதம்பரம் அரசு கல்லூரி பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவிகள் மறியல்!

படம்
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி விடுதியில் அடிப்படை வசதி கேட்டு மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இருவேளை பாடப்பிரிவுகளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என கடந்த இரு வாரத்திற்கு முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைத்தும் சரிசெய்யப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை மாணவிகளின் கோரிக்கைகள் சரி செய்யப்படவில்லை.இந்நிலையில்  இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சிதம்பரம் - கடலூர் புறவழிச் சாலையில் மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளார் சௌமியா, மாவட்ட துணை செயலாளர் சிவநந்தினி, விடுதி கிளை தலைவர் புவனேஸ்வரி, செயலாளர் அருணா மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.தகவலறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் அர...

கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக சேர்கப்பட்ட மோப்ப நாய்க்கு பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!

படம்
கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதியதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதின்பேரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு ஒரு (Narcotic Dog) மோப்ப நாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று (28.03.2025)- ந்தேதி  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgiuam Malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு "ராக்கி" என பெயர் சூட்டி வாழ்த்தினார்.  மேற்படி மோப்பநாய் 18.8.25 தேதி முதல் கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு கடலூர் மாவட்டம் மோப்பநாய் படைபிரிவில் சேர்க்கபட்டு போதை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும், மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுபடுத்தவும் பயன்படுத்த உள்ளது . துணை காவல் கண்காணிப்பாளர் திரு சார்லஸ் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் திரு இளங்கோவன் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் உடன் இருந்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் கு...

கடலூர் புத்தக திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் பங்கேற்று சிறப்புரை!

படம்
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட நிருவாகம் சார்பில் 3 -வது கடலூர் புத்தக திருவிழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வரவேற்புரையில் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்த கருத்துகளை கூற சிறப்பு விருந்தினர்கள் வருகை புரிந்துள்ளனர். உலகில் சாக்ரடிஸ்தான்  முதலில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்க சொன்ன பகுத்தறிவாளர். அதேபோல் அறிஞர் அண்ணா அவர்கள் மிகபெரிய புத்தக வாசிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர். நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் இருந்தபோது புதிய புதிய புத்தங்களை வாசித்தார். அண்ணல் அம்பேத்கார் அவர்கள் வெளியூர்களில் தங்கும் சமயங்களில் நூலகம் அருகில் உள்ள விடுதியில் தங்கி வாசிக்கும் பழக்கம் கொண்டவர்!  வாசிப்பு என்பது ஆழத்தை அறிவது! வாசிப்பு என்பது வானத்தை அளப்பது! வாசிப்பு என்பது காலத்தை உருவாக்குவது! என சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கோவை மாவட்ட திமுக சார்பில் இஃப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!

படம்
கோவை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், கோவை குறிச்சி பிரிவு பிவிஜி மஹாலில் இப்தார் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துக்கொண்டார்.  இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.