தேனி மாவட்டம், கம்பத்தில் ஆங்கூர்பாளையம் சாலையில் செல்போன் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிட தொழிலாளி விழுந்து படுகாயம் அடைந்தார். குழி தோண்டப்பட்டதற்கான தடுப்பு ஏதும் இல்லாததால் குழியில் விழுந்து படுகாயம் அடைந்ததால் அப்பகுதி பொதுமக்களும் கம்யூனிஸ்டு கட்சியினரும் சேர்ந்து தனியார் தொழில் தொடர்பு நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் இதனை யடுத்து கம்பம் தெற்கு நிலைய காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.