இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலிண்டர் முன்பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

படம்
நகரங்களில் வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாளாக அதிகரிப்பு. நாளை முதல் ( மே1) இந்த புதிய மாற்றம் அமலுக்கு வருகிறது. கிராமப் பகுதிகளில் முன்பதிவுக்கான இடைவெளி 45 நாட்களாக தொடரும். ஒரு வேளை 25 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்தால் கணினி அதை தானாக நிராகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இன்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது!!

படம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் சென்று, சுப்ரமணியசுவாமி கூறும் பொருள் வைத்து பூஜை செய்யப்படுவது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் பெட்டியில் இடம் பெறும். பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பதும், பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று மண் கலயத்தில் தீர்த்தம், மண் கலயத்தின் மண், ஏர் கலப்பை மற்றும் பிரம்பு வைக்க உத்தரவாகியுள்ளது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!!

படம்
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! ``முன்ஜாமீன் கோரிய உமா சங்கர் பிரபல துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுபவரே தவிர சினிமா எடிட்டர் இல்லை'' - உமா சங்கர் தரப்பு ``கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் படத்தை நகலெடுத்து, துணிக்கடையில் வேலை பார்க்கும் உமா சங்கருக்கு அனுப்பியுள்ளார். உமா சங்கர் தான் படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்'' - தயாரிப்பு நிறுவனம் தரப்பு. எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்துதான் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. பிரசாந்த் என்பவர் தனது லேப்டாப்பில் படத்தை திருட்டுத்தனமாக ஏற்றிய பின் மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார். நாளொன்றுக்கு 500 பேர் வீதம் 145 நாட்களுக்கு மேல் வேலை பார்த்தவர்களின் உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது'' - காவல்துறை தரப்பு தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கோடைகாலத்தில் கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4அல்லது 5 முறையாவது குடிப்பதற்கு குடிநீர் கொடுக்க வேண்டும்!ஜெ.யு.சந்திரகலா IAS !!

படம்
கால்நடைகளின் உடல் நலம் மற்றும்  பால் உற்பத்திக்கும் அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளதால் கோடை காலத்தில் கால்நடைகளின் .பராமரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.   கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 (அ) 5 முறையாவது குடிப்பதற்கு உகந்த குடிநீர் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர்த் தொட்டியை அமைக்க வேண்டும்.   மாடுகளை தண்ணீர் குடிக்க செய்யும் போது கலப்பு தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு தூவும் போது மாடுகளின் தண்ணீர்குடிக்கும் அளவு அதிகரிக்கும்.   இது போன்ற காலகட்டங்களில் உப்பு கட்டிகளை (SALT LICK) கொட்டகைகளில் தொங்கவிடுவதினால் கால்நடைகளின் தண்ணீர்பருகும் தன்மை அதிகரிக்கும்.   நீர்தெளிப்பான் அமைப்பது, குளிர்ந்த நீரினைக் கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின்விசிறி அமைப்பது ஆகியவை மூலம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் அயர்ச்சியினைத் தவிர்க்கலாம். மேலும் மாட்டுக்கொட்டகையின் கூரைக்கு மேலேயும் நீர் தெளிப்பான் அமைக்கலாம். இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.   அடைக்கப்பட்ட அல்லது நெருக்கமான இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டா...

அறந்தாங்கி: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழா!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வீழிமங்கலம்கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு அந்த கிராமத்தினர் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுத்து கடந்த சில தினங்களாக கோயில் கோபுரங்களுக்கு வர்ணங்கள் பூசி கடந்த நான்கு நாட்களாக யாகசாலை கொட்டகை அமைத்து வேதாச்சாரியார்களை வைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூக்கள் நடைபெற்றது.  இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் யாகசால கொட்டகையை வளம் வந்து கோவிலின் மேல் உள்ள கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசங்களில் இருந்ததை கோபுரத்தில் ஊற்றி தீபாரதனை கட்டினார் இதை ஆயிரக்கணக்கான மெய்ய நண்பர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாட்டை வீழி மங்கலம் கிராமத்தினர் செய்தனர் பாதுகாப்பு பணியை மீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கள்ளழகர் மதுரை புறப்பாடு!!

படம்
மதுரை மாவட்டம்,உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்ட சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்வானது, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்  B.K.அர்விந்த்.இ.கா.ப., அவர்கள் தலைமையிலான மாவட்ட காவல்துறையினரின் சீரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறப்புடன் நடைபெற்றது. ஆண்டிபட்டி செய்தியாளர் தனலட்சுமி.

தனுஷ்சின் "கர " கரைசேருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

படம்
தனுஷின் ‘கர’ கரை சேர்ந்ததா? - நெட்டிசன்கள் சொல்வது என்ன? - விமர்சனம் இதோ! விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் குறித்த நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். போர் தொழில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கர’. தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளர். இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கர’ திரைப்படத்தில் கதாபாத்திரத்துடன் நடிகர் தனுஷ் ஒன்றியிருக்கிறார். படத்தை தோளில் தாங்கி இருக்கிறார். சுராஜ் வெஞ்சரமுடு, ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் நன்றாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

சிபிஐ விசாரணை உத்தரவு! செந்தில் பாலாஜி கொடுத்த தில்லான விளக்கம்!!

படம்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின்மாற்றிகள் கொள்கைகள் முறைகேடு நடந்திருப்பதாக ஒரு அமைப்பு புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மின்மாற்றிகள் கொள்முதல் பின்பற்றும் நடைமுறைகள் வழக்கமானது. டெண்டரில் பலர் கலந்து கொண்ட நிலையில், குறிப்பிட்ட சிலர் ஒரே தொகை குறிப்பிட்டுள்ளனர். சிபிஐ விசாரணை: டெண்டர் தொடர்பாக மூன்று குழுக்கள் தான் இறுதி செய்யும். மின்மாற்றி கொள்முதலில் கடந்த காலங்களில் பின்பற்றும் முறை தான் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணை முகாந்திரம் இருப்பது குறித்து முழுமையான உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான முழு உத்தரவு வந்த பிறகு விளக்கமளிக்கிறேன். சில கட்சிக்கு ஆதரவாக சிபிஐ விசாரணையை நெருக்கடிக்கு உத்தவிட்டுள்ளனர்.  1987 ஆண்டில் இருந்து இந்த நடைமுறையை தான் அரசு பின்பற்றுகிறது. 2021 ஆண்டில் மட்டும் புகார் அளிப்பதற்கு அரசியல் அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது போடப்பட்ட வழக்...

இரண்டு ஜோடி திருமணம் அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவனம் நடத்தியது!!

படம்
அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில்  அருள் குழந்தைகள் இல்லத்தில் இரண்டு திருமணங்கள் நடைப்பெற்றது நிகழ்விற்க்கு நிறுவன ஆலோசகர் எஸ்.ஜேக்கப் தலைமை தாங்கினார் நிறுவன செயலர் தேவஆசிர்வாதம்  வரவேற்றார் நிகழ்ச்சியில்  வேளாயுதம் யசோதா ஜோடிக்கும்  கோவிந்தராஜ்.தேவி என மற்றொரு ஜோடிக்கும் நடந்த திருமணத்தில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய திருச்சபை சென்னை பேராய தலித் மற்றும் கரிசனை வாரிய இயக்குனர்  ஜெபராஜன் மற்றும்   அறம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கலைநேசன் திருமதி தேன்மொழி கலைநேசன் தம்பதியர்கள் தாலி வழங்கினர்  ஆதி திராவிட ஆசிரியர் காப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மற்றும் நிறுவன ஆலோசகர் .பிரின்ஸ் தேவாசிர்வாதம் மணமக்களை வாழ்த்தி பேசினார் மேலும் திருமணத்தில்  இரயில் உபயோகிப்போர் சங்க பொது செயலர் நைனா மாசிலாமணி விசி க மு.மாவட்ட செயலர் க.கௌதம் விசக மாவட்ட செயலர் சந்தர் மனித நேய மக்கள் கட்சி மா செயலர் முகமதுஅலி பௌத்த இயக்க அறக்கட்டளை நிறுவனர் பார்த்திபன் தலைமையாசிரியர் தேவசுந்தர் குளோ டிரஸ்ட் இயக்குனர் ஜேம்ஸ் அரசு வழக்கறிஞர் பாபு காவனூர் கு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது கைது!!

படம்
மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ளவருமான அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூருவில் கைது. ஏற்கனவே சென்னை போலீசார் வெளியிட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில், பெங்களூரில் இருந்து பாங்காக் தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளார். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று பிடிபட்ட அஸ்வத்தாமனின் ஜாமினை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையீடு செய்ய காவல்துறை முடிவு.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!

படம்
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு. விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், 15 நாட்கள் பரோல் விடுப்பு கோரிய மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

திமுக நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

படம்
அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை. திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தும், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

தமிழகத்தில் இன்று ஏப்ரல் 30 பரவலான இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது!!

படம்
தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் ,தேனி ,தென்காசி, விருதுநகர், கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வெப்பச்சலனம் மழை பெய்யக்கூடும்..சேலம், ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை காணப்படும்...பாலக்காடு கணவாய் பகுதிகளில் வரும் சனிக்கிழமை பரவலான இடங்களில் மழை காணப்படும்..பெரம்பலூர் ,திருச்சி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ,கடலூர் ,அரியலூர், சேலம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை காணப்படும். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு!!

படம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு.குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கருணாஸுக்கு மே 5-ல் தண்டனை விவரம் அறிவிக்கிறது புதுச்சேரி நீதிமன்றம்.சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான முதியவர் விவேகானந்தன் சிறையில் ஏற்கெனவே தூக்கிட்டு தற்கொலை.2024 மார்ச்சில் முத்தியால்பேட்டை பகுதியில் 5ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.காணாமல்போன சிறுமி இரு நாட்கள் கழித்து வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்க கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பங்கேற்பு!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா வீழிமங்கலம்கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியசாமிக்கு அந்த கிராமத்தினர் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுத்து கடந்த சில தினங்களாக கோயில் கோபுரங்களுக்கு வர்ணங்கள் பூசி கடந்த நான்கு நாட்களாக யாகசாலை கொட்டகை அமைத்து வேதாச்சாரியார்களை வைத்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூக்கள் நடைபெற்றது இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் யாகசால கொட்டகையை வளம் வந்து கோவிலின் மேல் உள்ள கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசங்களில் இருந்ததை கோபுரத்தில் ஊற்றி தீபாரதனை கட்டினார் இதை ஆயிரக்கணக்கான மெய்ய நண்பர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாட்டை வீழி மங்கலம் கிராமத்தினர் செய்தனர். பாதுகாப்பு பணியை மீமிசல் காவல் துறையினர் மேற்கொண்டனர். புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் வெ. மகேந்திர குமார் அவர்களின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!!

படம்
அரசுத்துறை, பொதுத்துறை  தனியார் துறை , குறிப்பாக பத்திரிக்கை துறை மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள விவசாய த்துறை அனைத்திலும் அன்றாட ம் இந்த உலகத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற உழைப்பாளர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.ஒரு அரசு முன்னேற வேண்டுமானால் அரசு துறையில் பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அரசிற்கு பெருமை வந்து சேரும் என்பதில் எள்ளளவும் மையமில்லை. இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக  தமிழ்நாடு அரசு இரட்டை இலக்க  பொருளாதார வளர்ச்சியை எட்டி எட்டுவதற்கு உழைத்த உழைப்பாளர்களுக்கு இந்த பெருமையை, நன்றியை  பறைசாற்றுகிறோம் அவர்களுக்கு பெருமதிப்பிற்குரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ஒவ்வொரு கிராமத்திலிருந்து அந்த கிராமத்தை முன்னிலைப்படுத்தி வெளிக்கொண்டு வருவதற்கு உழைத்துக் கொண்டிருக்கும் விவசாய குடி உழைப்பாளர்கள் பெருமக்கள் போல நகரத்தில் எண்ணற்ற உழைப்பாளர்கள்,  தொழிலாளர்கள், தூய்மை காவலர்கள்  இவர்களை காக்கும் காவல்துறை காவலாளர்கள் இவர்கள் அனைவரின் உரிமைகளை பாதுகாக்கும் பத்திரிக்...

பீகாரில் ஒரே நாளில் வாக்குப்பதிவு வெளியான நிலையில் தமிழகத்தில் இதுவரை இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை வெளியிடாதது ஏன்..?*அரசியல் கட்சியினர் சரமாரி கேள்வி!!

படம்
சென்னை: கடந்தாண்டு பீகாரில் மட்டும் 24 மணி நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு வெளியான நிலையில் தமிழகத்தில் இதுவரை இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடாதது ஏன் என அரசியல் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையத்தை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தரவுகளில் குளறுபடி இருந்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என அறைக்கூவல் விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற்றது. 4 முனைப்போட்டி நிலவிய இந்தத்தேர்தலில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அன்றைய தினத்தின் இறுதியில் வாக்குப்பதிவு 85.15 சதவீதமாக இருந்தது. 2 நாட்களுக்கு பிறகு, மறுசரிபார்ப்பிற்கு பின் இந்த தற்காலிக சதவீதத்தை 85.10 சதவீதமாக (0.05% குறைவு) ஆணையம் திருத்தியது. அதே சமயம், பாலின வாரியான விவரங்களையோ (ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்) அல்லது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையையோ அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. பல ஆண்டுகளாக தேர்தல்களைச் சந்தித்து வரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு முக்கிய திராவி...

யாராக இருந்தாலும் கைது!!

படம்
மதுரை:கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது (காலணிகளை வீசி) அநாகரிகமாக ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி வழக்கு  "கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது; யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" - காவல்துறைக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

தேனி-கம்பம் பகுதியில் திடீரென பேருந்துகள் சிறைபிடிப்பு !!

படம்
தேனிமாவட்டம், கம்பம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

திண்டுக்கல் சி. சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

படம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி குறிப்பிடுகிறது. 29 ஏப்ரல் 2026 தேதியிட்ட இந்தச் செய்தியில், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் இவர், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அவருக்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் உடல்நலக் குறைவு அதிமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 2025-ஆம் ஆண்டிலும் செரிமானப் பிரச்சினை காரணமாக இவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க...

செம்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது - கத்தி, செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்!!

படம்
திண்டுக்கல், செம்பட்டியை அடுத்த அழகர்நாயக்கன்பட்டி சேர்ந்த துர்காதேவி(28) இவரது கணவர் ஜெய்கணேஷ்(38) இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. அதேபோல் துர்காதேவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கலாம்? என்ற சந்தேகத்தின் பேரில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகணேஷ் கத்தியால் துர்காதேவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து செம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெயகணேசை கைது செய்து அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மொபைல், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (28/04/2026) மின்னஞ்சல் (e-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது 35-வது முறையாக விடுக்கப்படும் மிரட்டல் என்பதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.  இன்றைய முக்கிய தகவல்கள்: வெடிகுண்டு மிரட்டல்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை: வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு அதிகரிப்பு: அலுவலகத்திற்கு வரும் நபர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடரும் என NDTV கருத்துக்கணிப்பு!!

படம்
தமிழ்நாட்டில் மீண்டும் திமுகவே ஆட்சியை தக்கவைக்கும் என NDTV கருத்துக்கணிப்பு. திமுக கூட்டணிக்கு 125-145 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 65-80 தொகுதிகளும், தவெகவுக்கு 18-24 தொகுதிகளும், மற்றவை 2-6 தொகுதிகளும் கிடைக்கும். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துக்கணிப்புகளை மிஞ்சப்போகிறதா 2026 தேர்தல்? தமிழக அரசியலில் 'விஜய் ஃபேக்டர்' ஏற்படுத்தும் அதிரடி மாற்றம்!!

படம்
       சென்னை:           தமிழக சட்டமன்றத் தேர்தல் என்றாலே அது திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான இருமுனைப் போட்டியாகவே தசாப்தங்களாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை காணாத ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாகத் தேர்தல் காலங்களில் வெளியாகும் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்த முறை முழுமையாகப் பலிக்க வாய்ப்பில்லை என்ற ஒரு வலுவான வாதம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்புகள் ஏன் தோல்வியடையலாம்? பொதுவாகக் கருத்துக்கணிப்புகள் கடந்த காலத் தேர்தல் தரவுகள் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சி/எதிர்க்கட்சி மீதான அதிருப்தி ஆகியவற்றைக் கொண்டே கணிக்கப்படுகின்றன. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) களமிறங்கியிருப்பது, இந்த மரபுவழி கணிப்புகளைச் சிதைக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் துருவங்களின் வாக்கு வங்கிகளில் விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்...

ராணிப்பேட்டை அருகே தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!!

படம்
  ராணிப்பேட்டை அருகே வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில்   தலைமறைவாக இருந்த தமிழரசன் (வ 38 ) என்பவர் ஈரோடு மாவட்டம் பன்னாரி அம்மன் பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் பெயரில் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தனிப் படை குழு அமைத்து ஈரோடு மாவட்டம் சென்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

100% இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட வார்டில் வெற்றி பெற்ற இந்து சுயேச்சை வேட்பாளர்!!

படம்
குஜராத் மாநிலம் கோத்ரா நகராட்சியில் 100% இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட 7வது வார்டில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் சுயேச்சை வேட்பாளர் வெற்றி இந்த வார்டை சாராத நான் பெற்ற வெற்றி சமூக நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு. பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவத்தின் குறியீடு" என அபேக்ஷா சோனி மகிழ்ச்சி.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

“ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்” நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து!!

படம்
ஜாதி, மதம் அற்றவர் என்பதை தெரிவிக்க, சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை. இந்த சான்று விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்.உண்மையில் நாம்தான் அதை பின்பற்ற வேண்டும். இதற்கு சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை நம் நடத்தை மூலம் தான் அதைக் காட்ட வேண்டும். ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்கக் கோரி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

நாட்டின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது!!

படம்
உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதி கிடைப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது; நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியும் திமுகவுக்கு உடந்தையாக குரல் எழுப்பியது; உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது திமுக, உ.பி.,யில் கங்கா விரைவுச்சாலை திறந்து வைத்தபின் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை!!

படம்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை. மே 4, 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பணியின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனை. ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி சந்தீப் ராய்ரத்தோர், சென்னை, தாம்பரம் காவல்துறை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்பு தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா சக்தி கரகம், அக்னி கரகம் அழைத்தல் நடைபெற்றது!!

படம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம், அப்புலுபாளையம் அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் சித்திரை மாதத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 21ம் தேதி பண்டிகை சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 28ம் தேதி அப்புலுபாளையம் அருள்மிகு நாகாளம்மன் கோயிலில் இருந்து மாகாளியம்மனுக்கு நகை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இன்று காலை நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோடு அருள்மிகு வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல், மாவிளக்கு பூஜைகள் மற்றும் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து அக்னி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், குணசேகரன், தாமோதரசாமி, பாலாஜி, கேசவன், ராஜகோபால், வீரபத்திரன், கவுன்சிலர் சித்ரா மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர். கோவை செய்த...

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டரின் துவக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது!!

படம்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில், “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” எனும் மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மேற்கு ஆஸ்திரேலியா அரசின் முன்னாள் அமைச்சர், அலனாஹ் மெக் டியர்னன், ஆஸ்திரேலியா அரசின் சட்டத்துறை தலைமை வழக்கறிஞரின் உதவி அமைச்சர் யாஸ் முபாரகாய், ஆஸ்திரேலியாவின் ரிவர்டன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இதனை திறந்து வைத்தனர்   டிஸ்பெப்சியா சென்டர் குறித்து மூத்த குடலியல் நிபுணரும், விஜிஎம்  மருத்துவமனையின்  தலைவருமான, டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் கூறியதாவது.. ஜீரணக்குறைபாடு உலகளவில் 20 சதவீகிதம் முதல் 30 சதவீத மக்களை பாதிக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சினை, இதில் சுமார் 20 சதவிகித நோயாளிகளுக்கு  மட்டுமே தெளிவான காரணம் கண்டறியப்படுகிறது. மீதமுள்ள பலருக்கும், காரணம் தெரியாத ஜீரணக்குறைபாடு என வகைப்படுத்தப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலும் முழுமையான ஆய்வுகள் இல்லாமல் பொதுவான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவது வழக்கமாக உள்ளது, பொதுவாக நீடித்த ஜீரணக்...

அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன 35ம் ஆண்டு ரத்ததான முகாம்!!

படம்
அரக்கோணம் அடுத்த  கீழ குப்பம் ஜவஹர் நகர்  தலைமை இடமாகக் கொண்டு அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தின் 35 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இந்த முகாமிற்கு அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐ டி தேவ ஆசீர்வாதம் தலைமை தாங்கி நடத்தினார் சங்க ஆலோசகர் ஜேக்கப் அனைவரையும் வரவேற்றார் அரசு மருத்தவமனை ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் மணிமாறன் ரத்தம் தானம்  செய்யும் அன்பர்களின் உடல் பரிசோதனை செய்தார் ஆதிதிராவிட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர் சங்க மாவட்ட தலைவரும் கங்க ஆலோகருமான பிரின்ஸ் தேவ ஆசீர்வாதம் முகாமினை தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கினார் முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சந்துரு அரக்கோணம் நகர பொருளாளர் யாழினி ஆதி ஒன்றிய பொருளாளர் வஜ்ரவேல் நகர நிர்வாகி ஆர் என் குணா மற்றும் திருச்சி ஜேம்ஸ் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தேவசுந்தர் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்முகாம் ஒருங்கிண...

குடியாத்தத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 வது பிறந்தநாள் விழா!!

படம்
வேலூர் மாவட்டம் குடியேற்றம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேரவை சார்பில் பெரியார் சிலை அருகில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்பேரவை அமைப்பாளர் வி.சடகோபன் தலைமைத் தாங்கினார். பேரவைத் தலைவர் த.புவியரசி MC வரவேற்றார். பேரவை நிர்வாகிகள் கவிஞர் தூயவன், வி.ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் திமுக நகர நிர்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன் ந.ஜம்புலிங்கம் ஆ.வசந்தா ஆறுமுகம் கவிஞர் த.பாரி பெரிய.கோட்டீஸ்வரன் பேரவை புரவலர்கள் வழக்கறிஞர் எஸ்.பாண்டியன்ஆசிரியர் ஜெ.தமிழ்ச்செல்வன் இரா.முத்துக்குமார் ச.ஈஸ்வரி. விஜயா அம்சா. சுஜாதா முனைவர். ராஜராஜன், சிவா ஆர்ட்ஸ் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

Kitkat அறிமுகம் செய்துள்ள பவுச்!!

படம்
Kitkat சாப்பிடும் வரை பயனர்கள் டிஜிட்டல் உலகத்திலிருந்து ஓய்வு எடுக்க 'Break Mode' Wrapper-அறிமுகப்படுத்தியது KitKa, tஸ்மார்ட்போனை Wrapper-க்குள் வைத்தால் மொபைல், Wi-Fi, ரேடியோ சிக்னல்கள் தடைபடும். Faraday cage தொழில்நுட்பத்தில் உருவான இந்த Wrapper செம்பு உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டது.   தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

மகாராஷ்டிராவில் சுட்டெரிக்கும் கோடை வெயில்! வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 109 பேர் பலி!!

படம்
 மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக உள்ளது.மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் வெப்பத்தாக்கத்தினால் மொத்தம் 39 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் கவலையளிக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் இதுவரை 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.குறிப்பாக அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சி பகுதியில் நேரடி வெப்பத்தாக்க பாதிப்புகள் ஏதும் புதிதாக இல்லை என்றாலும், வெப்பம் சார்ந்த இதர உடல்நலக் குறைபாடுகளால் 108 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்த அபாயகரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிர சுகாதாரத் துறை அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது. வெப்பத்தாக்க ந...

தனியார் சோலார்பேனர் கம்பெனியின் பெரும்பள்ளம் தோன்றியதால் கால்நடைகள் உயிரிழப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேள்வரைஊராட்சிக்கு உட்பட்ட பாப்பானந்தல் கிராமத்தில் தனியார் சோலார் பேனர் அமைக்கப்பட்டு அதன் அருகில் அவர்கள் பெரும் பள்ளம் தோண்டி உள்ளனர் அதனால் அப்பகுதியில் கால்நடைகள் அதிகமாக மேய்ச்சலுக்கு வருவது வழக்கம் இன்று வேள்வரை கிராமத்தை சேர்ந்த முத்து 50wloமுத்து என்பவர் தனது பால் மாடு கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என்று அந்த கிராமத்துகளை சுற்றி தேடி வந்தார் ஆனால் மாடு கிடைக்கவில்லை இன்று காலை அவருக்கு அந்த பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் உங்கள் மாடு சோலார் பேனர் அருகில் கால்வாயில் கிடப்பதாக கூறினார்கள் அதை அடுத்து அவர்கள் சென்று பார்த்த போது மாடு இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது என்பது தெரிந்து அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர் மற்றும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர் இந்த மாடு மேய்க்கும் பகுதியில் தனியார் சோலார் பேனர் அமைத்ததன் பேரில்தான் இந்த கால்நடை இறந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்இதேபோல்இந்த சோலார் அமைப்பின் காரணமாகத்தான் கால்நடைகள் இனிமேலும் இறக்காமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கவும் கா...

90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு 2046ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு!!

படம்
குடியிருப்போர் நலச் சங்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 90 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கை 2046ம் ஆண்டுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.  2017-ல் தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி, இது இரு தரப்பினருக்கு இடையேயான 'ஈகோ' பிரச்னை என்பதால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று உத்தரவிட்டார்.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்!!

படம்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை பிரம்மாண்டமான தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.திருவிழாவின் 9-ஆம் நாளான இன்று, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் தாயுமானசுவாமியும், மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயாரும் எழுந்தருள, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் "நமச்சிவாய" கோஷமிட்டபடி வடம் பிடித்துத் தேரை இழுத்தனர். மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நான்கு உள்வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த தேர்களைக் காண திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.தேரோட்டப் பாதையெங்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சிகர நிகழ்வான இந்தத் தேரோட்டத்தைத் தொடர்ந்து, நாளை தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் விஜய்!!

படம்
ரிசல்ட்டுக்குப் பிறகு தவெக சார்பில் வெல்லும் நபர்களை ஆட்சி அமைக்க திமுகவும் அதிமுகவும் இழுக்க முயற்சிக்கலாம். ஏற்கனவே எடப்பாடியில் வேட்புமனுவின் போதே அதே வேலையைச் செய்தார்கள். ரிசல்ட்டின் போது அந்த மாதிரி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் அத்தனைப் பேரையும் சென்னைக்கு அழைத்து ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார் விஜய்.அந்தக் கூட்டத்தில் ரிசல்ட்டின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரைகள் சிலவற்றை வழங்கவும் திட்டம். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

போதிய இருப்பில் பெட்ரோல்.. பதட்டம் வேண்டாம்!!

படம்
எண்ணெய் நிறுவனங்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. எனவே பொதுமக்கள் தேவையற்ற முறையில் சேமிப்பு (panic buying] செய்ய வேண்டாம். வீட்டு உபயோக எல்பிஜி விநியோகமுகம் தடையில்லாமல் கிடைக்கின்றன; காத்திருப்புக் காலம் 5 நாட்களுக்கும் குறைவுதான், ஆட்டோ எல்பிஜியும் இடைவிடாத முறையில் கிடைப்பது உறுதி செய்யப்டுகின்றன; இதற்காக கூடுதல் கவனமும் செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன்.  தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம்!!

படம்
புதுக்கோட்டைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளைவிடவும், இன்று அதன் மார்பின் மேல் உயர்ந்து நிற்கும் 'பப்ளிக் ஆபீஸ்' கட்டடம் என்று அழைக்கப்படும் தற்போதைய மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பொலிவு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 ஆண்டுகளுக்கு முன்னால் புதுக்கோட்டை மன்னரின் காலத்தில் கட்டப்பட்டு, காலத்தால் சிதிலமடைந்த கட்டடம் அதன் மரபு சிதையாமல் மீண்டும் கட்டி எழுப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நீதிமன்றக் கட்டடம் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நவீனச் சிற்பி எனப் போற்றப்படும் திவான் சேஷைய்யா சாஸ்திரியின் தொலைநோக்குப் பார்வையில் 1878-1883 காலகட்டத்தில் உருவானதுதான் இந்தக் கட்டிடம். 'வருவாய் மற்றும் நீதித்துறை என நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே கூரையின் கீழ் இயங்க வேண்டும்' என்ற அவரது லட்சியத்தை, உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ராபர்ட் சிஷோம் இந்தோ-சாரசெனிக் பாணியில் கட்டினர். சுமார் 12 ஏக்கர் வளாகத்தில், 1,00,143 சதுர அடி பரப்பளவில் இந்த பிரமாண்டம் விரிந்து கிடக்கிறது. சதுர வடிவிலான இந்தக் கட்டடத்தின் மையத்தில் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி!!

படம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "மீனாட்சி.. சொக்கநாதா.." என்ற பக்தி முழக்கத்துடன் மாசி வீதிகளில் திரண்டு நின்று வடம்பிடித்துத் தேரை இழுத்தனர். முதலில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சிறிய சப்பரங்களில் முன்செல்ல, அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மற்றொரு தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அழகிய மலர்களாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மாட வீதிகள் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கடந்த 12 நாட்களாகத் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் என களைகட்டிய சித்திரை திருவிழா, இந்தத் தேரோட்டத்துடன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தைக் காண ஒட்டுமொத்த மதுரையே ஆவலுடன் தயாராகி வருகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

விஜய்யின் பகீர் திட்டம்!!

படம்
ஜனநாயகம் எல்லாருக்கும் உரிமையைத் தருகிறது. த.வெ.க என்ற புதிய கட்சி தேர்தலை சந்தித்ததும் அப்படித்தான்.ஆனால், தேர்தலுக்கோ அரசியலுக்கோ முற்றிலும் தகுதியற்றத் தன்மையில் அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய் தொடர்ந்து செயல்பட்டு வருவது பொதுமக்களிடம் நன்றாக அம்பலப்பட்டு விட்டது. அதை மறைப்பதற்காக ஊடகங்களிலும் சோஷியல் மீடியாக்களிலும் விஜய் மற்றும் த.வெ.க.வின் வெற்றி குறித்து ஊதிப் பெரிதாக்கப்படும் செய்திகள் பெய்டு புரமோஷன் என்ற முறையில் மிக அதிகமாக வெளியாகி வருகிறது. ➤➤. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் த.வெ.க. குறிப்பிட்ட அளவில் வாக்குகளைப் பெறும் என்பதும், வேட்பாளர்கள் யார் என்று தெரியாவிட்டாலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட சதவீதத்தினர் விசில் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், விஜய்தான் முதலமைச்சர் என்று தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ரசிகர்களையும் ஏமாற்றும் செயலை விஜய் தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ➤➤. குழந்தைகளைத் தூண்டிவிட்டு, உங்கள் வீட்டில் அடம்பிடித்து அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லாரையும் விசில் ...

காவலர்களுக்கு நோ லீவு- தமிழ்நாடு டிஜிபி!!

படம்
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது - தமிழ்நாடு டிஜிபி. சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவு. மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி