நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது 17வது பட்டமளிப்பு விழா !!
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த மருங்கூர், கீழக்கொல்லையில் உள்ள
நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 17 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி செயலாளர் & தாளாளர் அர்ஜுன் தலைமையேற்று வரவேற்றார்.
டிஎன்எஸ்சிஇஎம்ஏ செகரட்டரி நடராசன், துணை பதிவாளர் துரைராஜ், மெம்பர் ஆப் சின்டிகேட் சப் கமிட்டி நாராயணன் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ஆஷா ரோஸ்லின் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக துறை தலைவர், பதிவாளர் ராஜசேகரன்,
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 2026 2027 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக