பள்ளிக்கல்வித் துணை இயக்குநருக்கு பணி நிறைவு! பாராட்டு விழா!!
கடலூர் மாவட்டம், பேர்பெரியாங்குப்பம் எம் ஆர் ஆர் மஹாலில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்ககத்தின் தனியார் பள்ளிகள் துணை இயக்குனரும்
முன்னாள் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின், மாவட்ட கல்வி அலுவலருமான உயர்திரு அ.துரை பாண்டியன் அவர்களுக்கு
பல்வேறு முதுகலைஆசிரியர் சங்கங்கள் , பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள்,பொதுநல அமைப்புகள், சார்பில் பணி நிறைவு பாராட்டு நடைபெற்றது. இவ்விழாவில் பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் கெளரவரத் தலைவர்.தமிழ்ச்செம்மல் முனைவர் இரா. சஞ்சீவிராயர் , செயல் தலைவர் நல்லாசிரியர் முனைவர் ராஜா ஆ, சங்கத்தின் பொருளாளர் சி. கோமேதகன், ம. கோபிநாத், ப.சாமிப்பிள்ளை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பாராட்டு விழாவில் பல்வேறு முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக