கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0 நிறைவு, வெற்றிக்கோப்பையை தட்டி சென்ற தமிழ்நாடு அணி! கோப்பைகளுடன் பரிசுகளும் வழங்கபட்டது. விருவிருப்புக்கு பஞ்சமில்லாத ஒரு கிரிக்கெட் போட்டியாக அமைந்தது என ரசிகர்கள் உற்சாகம்!!!
கோவை மாவட்டம், மாற்று திறனாளிகளின் வாழ்க்கையை மாற்றும் வகையில், இந்திய பாரா கிரிக்கெட் லீக் எனும் போட்டிகள் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ரோட்ராக்ட் க்ளப் ஆப் கோயம்புத்தூர் கேலக்ஸி மற்றும் தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பாரா கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். நான்கு அணிகளாக களமிறங்கிய இப்போட்டியில், தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தன்டர் வாரியர்ஸ், டெல்லி யுனிகார்ன்ஸ், மற்றும் வியான் வீணை ஸ்கூல் ரேஜிங் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பங்கேற்றது. இதன் இறுதி போட்டிகள் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ், கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இப்போட்டிக்கான கோப்பையை தட்டி சென்றது. தமிழ்நாடு டவுன் டவுன் டைகர்ஸ் அணி, இந்தியன் பாரா கிரிக்கெட் லீக்ன் மூன்றாவது பதிப்பான ஐபிசிஎல் 3.0-ல் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. மேலும் இற...