இடுகைகள்

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பாக, 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி கோவை பந்தயசாலையில் உள்ள ஐடிசி வெல்கம் உணவகத்தில் துவங்கபட்டது!!

படம்
கோவை மாவட்டம்,கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சியை நடத்துகிறது. உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர். இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21,ம் தேதி வரை, கோவை பந்தயசாலையில் உள்ள ஐடிசி வெல்கம் உணவகத்தில், நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன்  கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்ப...

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்லாமிய மத முறைப்படி திருமணபதிவு சான்றிதழில் கையெழுத்துக்களை ஒருவருக்கொருவர் மாற்றி போட்டு திருமணம் நடைபெற்றது!!

படம்
  கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் நடைபெற்றது. கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்  ஹக்கிம்-45 வயதான இவர், கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை  சேர்ந்த ஷபினா பேகம் என்ற  37 வயது பெண்ணை, திருமணம் செய்து கொண்டார். இருவரும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த நிலையில், இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி முறைப்படி இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். தொடர்த்து இருவரும் திருமணம் செய்து கொள்ள பெரியோர்கள் பேசி முடிவு செய்து, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரது  வீட்டு உறுப்பினர்கள் பலர் முன்னிலையில், இஸ்லாமிய முறைப்படி, திருமண பதிவு சான்றிதழில் இருவரும் கையேழுத்து இட்டு கணவன், மனைவியாக திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில், வழக்கறிஞர் குமாஸ்தாகள் லட்சுமி, திவ்யா, செல்வராஜ், சரவணம்பட்டி கதிர் ...

திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த அமைச்சர். ஜா. முகமது பர்வேஸ்!!

படம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஆவுடையார் கோவில்( எ) திருப்பெருந்துறை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமாள் திருத்தேர் திருவிழாவில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று, 20/06/2026 ஆயிரக்கணக்கான பக்தர்களோடு கலந்துகொண்டு தேர்வடம் பிடித்த போது எடுத்த படம். புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!

படம்
தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம்  பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன பதாகைகளை ஏந்தி தமிழக அரசை கண்டித்தும் தமிழகஅரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பப்பட்டன. இது குறித்து பேட்டி அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்அத் மாநிலச் செயலாளர் முகமதுஒலி, பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழகம் என்பது ஒரு காலத்தில் அமைதி பூங்காவாக இருந்து வந்ததாகவும் ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்காக எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்தார்.  சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை, கும்மிடிப்பூ...

கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி நற்பெயரை பெற்றதை தொடர்ந்து; சென்னையில் துவக்கபட்டது! இத்திட்டம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை வாழ் மக்கள் மகிழ்ச்சி!!

படம்
கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ஆர். தெய்வேந்திரன் நாடார், 16-வது நினைவு தினத்தை முன்நாட்டு ஒரு ரூபாய் உணவு திட்டம் சென்னையில் விரிவு படுத்தப்பட்டது..  சென்னையில் நடைபெற்ற முதன்மை நிகழ்ச்சியில், ஆர்.கே. தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் அகிலேஷ் குமார்  கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்.  தெய்வேந்திரன் நாடார் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.  அவரைத் தொடர்ந்து,  தெய்வேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனங்களின் ஊழியர்களும் தங்களது மரியாதையைச் செலுத்தினர். இதனை தொடர்ந்து, ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்,"சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆர். தெய்வேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தினசரி ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது. ஒரு ரூபாய் உணவுத் திட்டம் அடித்தட்டு மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என சென்னை வாழ் மக்கள்  தரப்பில் பாராட...

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக் குழுமங்களின் சார்பில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கான லெகஷி விருது வழங்கும் விழா!!

படம்
கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கேபிஆர் கல்விக்குழுமங்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த ஆய்வறிஞர், இளம் நட்சத்திரச் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த பேராசிரியர் மற்றும் சிறந்த முன்னாள் மாணவர் போன்ற பிரிவுகளின்கீழ் விருதினையும் பரிசுத்தொகையினையும் வழங்கி வருகிறது.  இவ்வாண்டு நடைபெற்ற லெகஷி விருதிற்கு 14 மாநிலங்களிலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவ்விண்ணப்பங்களை, நடுவர் குழுவினர் முறைப்படுத்தி, விருதிற்கான விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வுசெய்தனர். அதில் அமெட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வி.ராஜேந்திரன் வாழ்நாள் சாதனையாளர் விருதுடன், 50,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த பேராசிரியர் விருதிற்கான பிரிவில், பாலக்காட்டில் உள்ள இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர். சாந்தக்குமார் மோகன...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி வழங்கும் விழா நிகழ்ச்சி பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயலால் மகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்கள். மற்றும் குழந்தைகள்!!

படம்
  கோவை மாவட்டம், ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி பழங்குடியினர் கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இளம் தொழிலதிபரும் விவசாயியுமான சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி என்பவர் நெஞ்சார உதவிக்கரம் நீட்டியுள்ளார்.  தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் இப்பள்ளியைக் கடந்து சென்ற உமா மகேஷ்வரி, அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகள் இருப்பதனை அறிந்துள்ளார். இப்பள்ளியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் உள்ள பழங்குடி சமூக குழந்தைகள் பெருமளவில் படிக்கின்றனர்.  இக்குழந்தைகளின் நிலையை உணர்ந்து, இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கிரிக்கெட் மட்டை, பந்துகள், ஸ்டம்ப்புகள், கைப்பந்துகள், கால் பந்துகள், எறி பந்துகள், டெனிகாய்டு,செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நேரில் சென்று வழங்கினார்.  இதுகுறித்து பேசிய உமா மகேஷ்வரி, "பழங்குடியின கிராமப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற உதவிகள் மிகவும் அவசியம் என்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாடு மட்டுமே அவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் அ...