நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் நடைபெற்ற கார்த்திகை பூஜை!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத கார்த்திகை பூஜை நடைபெற்றது. இதில் முருகப் பெருமானுக்கு பால், பழம்,பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான அபிஷேகமும், அலங்காரமும் தீபாராதனைகளும் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதைபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள் பிரகாரத்தில் உள்ள, தண்டபாணி சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.