இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆம்பூரில் மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை! - 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது!!

படம்
திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில், 3 மாணவிகள் படித்து வரும் நிலையில், இந்த பள்ளி மாணவிகளிடம் பழகி வந்த நண்பர்கள் 3 பேர், மாணவிகளை ஆசை வார்த்தை கூறி காரில் கடத்திச்சென்று, பாலியல் தொல்லை அளித்துள்ளனர், மாணவிகளை காணவில்லையென அவர்களது பெற்றோர், ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த காவல்துறையினர், மாணவிகளை தீவிரமாக தேடி, பள்ளிகொண்டா அருகே காரில் இருந்து மாணவிகளை காவல்துறையினர் மீட்டனர், அதனை தொடர்ந்து, மாணவிகளை கடத்திச்சென்றதாக, ஆம்பூரை சேர்ந்த அனான், ஜலால் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை ஆம்பூர் நகர காவல்துறையினர் போக்சோ சட்டத்தில்  கைது செய்தனர்..மேலும் பள்ளி மாணவிகளை காரில் கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்த, நண்பர்கள் மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம், ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கோவையில் நடைபெற்று வந்த தேசிய அளவிலான குதிரையேற்ற சாம்பியன்ஷிப் நிறைவு, ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை புல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!!

படம்
கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டி அருகே உள்ள மோலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்ற போட்டிகளின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது.  ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி, மோலப்பாளையத்தில் “பவர் ஹவுஸ்”  மைதானத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட போட்டி அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. சென்னை புல்ஸ் தமிழ்நாடு, பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் கேரளா, பெங்களூரு நைட்ஸ் கர்நாடகா, கோல்கொண்டா சார்ஜர்ஸ் தெலங்கானா மற்றும் எலைட் ஈக்வெஸ்ட்ரியன்ஸ் மேற்கு வங்கம் ஆகிய அணிகள் பங்கேற்றன. 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் ஷோ ஜம்பிங் போட்டிகள் நடைபெற்றன.. தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சத்தியபாமா சட்டமன்ற உறுப்பினர், பிரபல திரைப்பட நடிகர்கள் ஆர்யா மற்றும் ஷாம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொ...

கோவை இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என்று சிந்தனை கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்!!

படம்
சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா கோவையில் நடைபெற்றது. இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் உரையாற்றினார். கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப் படிக்கட்டுகள்’, ‘வெற்றியின் விதைகள் 100’, ‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெற்றிப்பாதை’ ஆகிய நான்கு நூல்களின் அறிமுக விழா கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார்.கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.‘வெற்றிப்பாதை’ நூலுக்கு கோவை பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சச்சிதானந்தர், இதிகாச மாமணி முனைவர் முருகேசன் அறிமுக உரையாற்றினர். மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ் இலக்கிய ஆய்வறிஞரும் நூலாசிரியருமான பத்மாவதி, ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் குறித்தும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கருணாநிதி, ‘...

பார்வைக்காக நடைபோடுவோம்” எனும் தலைப்பில், பார்வைத் திறனை வழங்கும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!

படம்
கருவிழிப் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு, தங்களின்  முகங்களைப் பார்ப்பதும், தங்களைச் சுற்றியுள்ள உலகை மீண்டும் காண்பதும் இன்றும் ஒரு கனவாகவே உள்ளது. கண்தானம் மூலம் இந்தக் கனவை நனவாக்கி, ஒருவரின் வாழ்க்கையில் பார்வை எனும் மிகப்பெரிய பரிசின் மூலம் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த முடியும்.  ஒருவரின் இருளில் ஒளியாக இருங்கள்” என்ற உத்வேகமூட்டும் கரு பொருளை முன்வைத்து, கோவை மாவட்ட கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கம், மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கண்தானம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் கண்கள் தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. . இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், தானும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய  கோயம்புத்தூர் தி ஐ ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் இணை மருத்துவ இயக்குநர், டாக்டர் ஷ்ரீஷ் குமார் கோடவூர் கூறியதாவது..  கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்...

வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்த அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு!!

படம்
வேலூர் மாவட்டம் முன்னாள் முதல்வர். எடப்பாடி  பழனி சாமி  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தின் பொதுச் செயலாளர் அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள் ளார் அவரை சந்திக்க சென்ற அதிமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழப்பு வேலூரில் செயல்பட்டு வரும் நட்சத்திர லாட்ஜில் முதலுதவிஅளிக்கப்படவில்லை லிப்ட் ஆப், ஏசி ஆப் என குற்றச்சாட்டு – ஆம்புலன்ஸ் வருவதிலும் தாமதம்; அரசு உரிய விசாரணை நடத்த கோரிக்கை! வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட் டப்பாளையம் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் லாட்ஜ் ஓட்டலில், முன் னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செய லாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை சந்திக்கும் ஆவலுடன் வந்த அதிமுக நிர் வாகி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை யும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரப்பாக்கம்  அதிமுக கிளை செயலாள ராக இருந்த காமராஜ் என்பவர்,முன்னாள் முதல்வர். எடப்பாடி பழனிசாமி வேலூர் வருகையையொட்டி அவரை சந்திப்பதற் காக தோட்டப்பாளையத்தில் உள்ள தனி யார் நட்சத்திர ஓட்டலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக கூட்ட நெரிசலில் நின்றிருந்த நிலையில், நட் சத...

நத்தம் அருகே FQL செயலி மூலம் பணம் போட்டு பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜா(25) இவர் FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் ராஜா மன உளைச்சலில் காசம்பட்டியில் தோட்டத்து பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அவர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

ஆதாரமில்லாமல் பேசாதீங்க, தனது கட்சி எம்.எல்.ஏக்களை அறிவுறுத்திய சபாநாயகர்!!

படம்
பேரவையில் அமைச்சர்கள் ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தல். பேரவையில் அமைச்சர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தல். நேரலையில் செல்வதால் அத்தகைய குற்றச்சாட்டுகள் மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கிவிட்டால் அதை எப்படி திருத்துவது? என்ற கேள்வி உள்ளது TASMAC விவாதத்தின்போது திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து அமைச்சர்கள் ஆதவ், நிர்மல், விக்னேஷ் பேசிய நிலையில் சபாநாயகர் அறிவுரை. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதான்! - சென்னை உயர்நீதிமன்றம்!!

படம்
கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதானே தவிர, அரசமைப்பு நியமனத் திட்டம் அல்ல. “கருணை அடிப்படையில் அரசுப் பணி என்பது சலுகையே தவிர, அரசியல் சாசன விதி அல்ல; எந்த தகுதியும் பார்க்காமல் பணி வழங்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது” உயிரிழந்த அரசு ஊழியரின் மகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி வழங்க, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து. தகுதியான குடும்பத்தினரே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதை உறுதி செய்ய, திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

“பாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாட்டு பாடுனாங்க..இப்போ 20 ரூபாய் ஆகிருக்கு; ஆனால், ஒரு புது விளக்கத்தோட வராங்க..”டாஸ்மாக் விவகாரத்தில் தவெக அரசின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பதிலடி!!

படம்
“பாட்டிலுக்கு ரூ.10 என்று பாட்டெல்லாம் பாடினாங்க, இன்று பாட்டிலுக்கு ரூ.30 வரை வந்திருக்கிறது!”   பாட்டிலுக்கு ரூ.30 “பாட்டிலுக்கு ரூ.10 என்று பாட்டெல்லாம் பாடினாங்க, இன்று பாட்டிலுக்கு ரூ.30 வரை வந்திருக்கிறது. அதற்கும் அமைச்சர் ஒரு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார்.” -டாஸ்மாக் விவகாரத்தில் தவெக அரசின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பதிலடி. தலைமைச் செய்தியாளர் சின்ன தம்பி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படுமா? - அரசுத் தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!

படம்
       கைவிடப்பட்டது..  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவிப்பு. “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா?” என்பது குறித்து பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

TNPSC-ல் 170 அரசு வேலைகள்!!

படம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), Combined Technical Services Examination-ல் நேர்காணல் பணிகளுக்காக 170 காலியிடங்களை அறிவித்துள்ளது. - விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7, 2026 முதல் தொடங்குகிறது; ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்டோபர் 6, 2026 இரவு 11.59 மணி வரை அவகாசம். - விண்ணப்ப இணையதளம்: www.tnpscexams.in - 1.7.2026 அன்று குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; பதவிக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். - TNPSC அறிவிப்பு எண் 741 / Notification No. 8/2026 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

ISRO-வில் 175 Scientist/Engineer பணிகள்!!

படம்
ISRO-வின் Scientist/Engineer 'SC' பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 175 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. - கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் B.E./B.Tech அல்லது அதற்கு இணையான பட்டம், குறைந்தது 65% மதிப்பெண்கள் / CGPA 6.84. - காலியிடங்கள்: Electronics - 99, Mechanical - 52, Computer Science - 21; PRL-ல் தலா 1 இடம். - வயது வரம்பு: 16.9.2026 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும்; விதிகளின்படி வயது தளர்வு உண்டு. - தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Level-10 ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.56,100. - ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 16, 2026 இரவு 11.55 மணி வரை. - ISRO-வின் www.isro.gov.in மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்களைப் பார்த்து விண்ணப்பிக்கலாம். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

Exclusive: டாஸ்மாக் மது விற்பனை - 2025-26 கணக்கு!!

படம்
2025-26-ம் ஆண்டில் மொத்தம் விற்பனையான மது பாட்டில்கள் - 314,01,49,084  IMFS (வெளிநாட்டு மது): - 180 ml - 259,51,15,775 பாட்டில்கள் - 375 ml - 13,42,22,688 பாட்டில்கள் - 750 ml - 1,36,33,904 பாட்டில்கள் - 1000 ml - 12,55,159 பாட்டில்கள்       பீர்: - 325 ml - 18,04,849 - 500 ml - 96,32,444 - 650 ml - 38,40,26,515 பாட்டில்கள் IFL (இறக்குமதி மது): - 200 ml - 6,853 - 330 ml - 2,87,432 - 350 ml - 3,468 - 360 ml - 48,911 - 440 ml - 9,843 - 700 ml - 1,00,780 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் இல்லாமல் குடமுழுக்கு அழைப்பிதழ் அச்சிடப்பட்ட விவகாரம்!- பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!!

படம்
       யார் அவர்.. ? “மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் குடமுழுக்கு அழைப்பிதழை, அறங்காவலர் குழு உறுப்பினரின் பெயர்கள் இல்லாமல் அச்சிட்ட கோயில் அதிகாரி யார்? அதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்?” கோயில் இணை ஆணையர் நாளை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

FQL ஆன்லைன் செயல்மூலம் பணத்தை இழந்தவர் தற்கொலை:நத்தம் அருகே நீதி வேண்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நபரின்bஉடலுடன் உறவினர்கள் சாலை மறியல்: உடலை எடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றிய போது ஆம்புலன்ஸ் போலீசார் மற்றும் போலீசார் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்!!

படம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள காசம்பட்டியைச் சேர்ந்தவர் ராசு (என்ற)மாயழன் (25).விவசாய கூலி தொழிலாளி. இவர் எப்க்யுஎல் செயலியில் பணம் கட்டுவதற்கு அப்பகுதியில் ஊக்குவிப்பாளராக இருந்து முதலீடு செய்ய அப்பகுதியில் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட நபர்களும் அப்பகுதியில் ஆயிரக் கணக்கானோர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ராசு காசம்பட்டியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவரது உறவினர்கள் அவருடைய உடலை தூக்கிக் கொண்டு வந்து நத்தத்திலிருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை பிரிவு அருகில் உள்ள சொக்கன் ஆசாரி கண்மாய்  பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் வைத்து (இன்று ஆக்.31) சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு  திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், மதுரை மாவட்ட எஸ்பி தேவநாதன்  முன்னிலையில் அதிகாரிகள் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர் இறந்தவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டதாகவும், இதற்கு காரணமா வைர்களை கண்டுபிடித்து ...

ராணிப்பேட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநில அரசு வன்கொடுமை வழக்கு பதிவு செய்ததை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் !!

படம்
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். நரேஷ் குமார் தலைமை தாங்கி பேசினார். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர். ராஜ்குமார்,மனித உரிமைகள் துறை மாநில துணைத்தலைவர். லாலாப்பேட்டை. கோட்டீஸ்வரன்,முன்னாள் மாவட்ட தலைவர். பஞ்சாட்சரம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் வரவேற்று பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர். ராகுல் காந்தி மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டதற்காக  மத்திய அரசை  கண்டித்து கோஷமிட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் வட்டார, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உருவபடம் எரிக்க முயன்றதை  போலீசார் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சிவகுமார்.

குடியாத்தம் அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பு மற்றும். இன்னர் வீல் சங்கம் இணைந்து சுமார் 40,000 மதிப்பீட்டில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நம் பள்ளியில் முன்னாள் மாணவர் அமைப்பு மற்றும் இன்னர்வீல் சங்கம் இணைந்து பள்ளிக்கு  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (பழுது நீக்கி) சுமார் 40,000 செலவில் வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் தொடக்க விழா  பள்ளியின் தலைமை ஆசிரியை  எஸ். சுபாஷினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  முன்னதாக என் எஸ் எஸ் திட்ட அலுவலர். ஆர். ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் டாக்டர். சுகுமார், கஸ்தூரி சுகுமார், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் V. சடகோபன், பள்ளி அம்பாசிடர்   புலவர். கோ. மணி,இன்னர்வீல் சங்க தலைவி. சரளா, செயலாளர். சாந்தி ரவி, முன்னாள் தலைவி. கீதாலட்சுமி, விஜயலட்சுமி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள். பி. சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். என் எஸ் எஸ் உதவி திட்ட அலுவலர்  ஹரி கிருஷ்ணன், இன்னர் வீல் சங்க பொறுப்பாளர்கள். லதா,விஜி, விமலா,  ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, சசிகலா மற்றும் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள், பள்ளியின் அனைத்து ஆசிரிய பெருமக்கள், ...

குடியாத்தம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம்! -அசம்பாவிதம் ஏற்படும் முன் புதிய கட்டிடம் கட்டப்படுமா?

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் உள்ள நெல்லூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதுடன், கட்டிடத்தில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. ஆபத்தான கட்டிடம் என்பதால் ஊராட்சி அலுவலகம் தற்போது நூலக கட்டிடத்தின் சிறிய பகுதியில் செயல்பட்டு வருகிறது.  பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பழைய கட்டிடத்தை அகற்றி, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

குடியாத்தத்தில் நடைபெற்ற நியாய விலை கடை விற்பனையாளர்களின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!

படம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளின் விற்பனையாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று காலை வட்டாட்சியர். அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.   இதில் கைரேகை விரைந்து முடிக்க வேண்டும்  நியாய விலை கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்   அனைத்து விற்பனையாளர்களும் பணி நேரத்தில் அடையாள கார்ட் அணிந்திருக்க வேண்டும் போன்ற ஆலோசனை வழங்கினார்.  இதில் அனைத்து விற்பனைகளும் கலந்து கொண்டனர். குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா!!

படம்
திருமயம்-31- திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகஸ்ட்-31 (திங்கட்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெண்ணிலா வரவேற்றார். முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு முன்னிலை வகித்துப் பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் , இயக்குநர் ம.பிச்சப்பா, செயலாளர் மு.விஸ்வநாதன் , புலத்தலைவர் டாக்டர் முருகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக பட்டிமன்றப் பேச்சாளர் பேரா.முனைவர் மனோன்மணி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதாவது : ஓவ்வொரு மாணவரும் பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி மதிக்க கற்றுக் கொண்டாலே நாம் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விடலாம். தம்முடைய பிள்ளைகளை கல்லூரிகளில் சேர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் பெருங்கனவு. அவர்களுடைய வலிகளையும், தியாகங்களையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் பொறுப்பு. நம் தேசம் வல்லரசாக  வேண்டுமென்றால் இளைய தலைமுறையினர் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்....

234 எம்.எல்.ஏக்களிடமும் சத்தியம் வாங்கினார் முதல்வர் விஜய் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேச்சு!!

படம்
மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என எங்களை மேடையில் நிற்க வைத்து முதலமைச்சர் சத்தியம் வாங்கினார் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டால் அந்த முதியோர்கள் சொல்லும் அந்த வரலாறு மனதை வேதனைப்படுத்துகிறது பெற்று வளர்த்து ஆளாக்கி அழகு பார்க்கும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை மாற வேண்டும் தற்போதைய சூழலில் பெண்களின் பெற்றோரை அரவணைக்கும் வகையில் இளைஞர்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும் குடும்பப் பிரச்னைகளால் பெற்றோர்களை பிரித்து வைக்கும் நிலை வேண்டாம் வாழும் போது பெற்றோர்களை மதிக்கத் தெரியாமல் அவர்களை வணங்கத் தெரியாமல் அவர்கள் இறந்த பிறகு அழுவதில் ஒரு பயனும் இல்லை பெற்றோர்களை மதிக்கும் பண்பை இளைஞர்களும் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் ஜாதி மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டும் தான் ஆட்சியில் அமர முடியும் என...

வண்டல் மண் அள்ளும் அனுமதிக்கு ரூ.3000 லஞ்சம் ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளர் கைது !!

படம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய் வண்டல் மண் அள்ளும் அனுமதிச் சீட்டு தர ரூ.3000 வாங்கிய ஊராட்சி ஒன்றிய பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார் இது பற்றிய விவரம் வருமாறு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உதவி பொறியாளர் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் 43 இவரிடம் விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க பயணச்சீட்டு கேட்டு ஒருவர் அணுகியுள்ளார் அதற்கு அந்த நபரிடம் ஷேக்கா தில்ஷாத் பர்வீன் ரூ.3000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது கேட்ட பணத்தில் அந்த நபர் 200 வழங்கிய போதும் மீதப் பணம் வேண்டும் என ஷேக்கா தில்ஷாத் பர்வீன் கேட்டு வந்துள்ளார் மேலும் பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார் போலீஸாரின் அறிவுறுத்தலின் படி ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள ஷேக்கா தில்ஷாத் பர்வீன் வீட்டில் வைத்து ரூ. 3000 லஞ்சம் வாங்கும் போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் !  செய்தியாளர் கார்மேகம்

நத்தம் அருகே ஏஜெண்டு வீட்டின் செப்டிக் டேங்கில் பணம் - செப்டிக்டேங்க்கை தோண்டும் பணியில் போலீசார்!!

படம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் ஏஜெண்டுகள் 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று பணம் பட்டுவாடா நடைபெறுவதாக வந்த வதந்தி தொடர்ந்து ஏஜென்ட் ரமேஷ் வீட்டை 1000-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இந்நிலையில் ஏஜென்ட் ரமேஷ் *வீட்டில் செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை* தொடர்ந்து இன்று போலீசார் முன்னிலையில் செப்டிக்டேங்க்கை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரைவீரன்

கழகத் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு இருந்த Z+ பாதுகாப்பு வாபஸ்!!

படம்
இனி மாநில போலீஸ் பாதுகாப்பு மட்டுமே இருக்குமாம். Z வகை பாதுகாப்பு என்பது ஒருவர் என்ன பதவியில் இருக்கார்னு பார்த்து முடிவு செய்வது அல்ல. அவரது முக்கியத்துவம், அவருக்குள்ள அச்சுறுத்தல்கள் இதெல்லாம் வெச்சு தான் தீர்மானிப்பாங்க. MLA MP அமைச்சர் பதவிகள் இல்லை என்றாலும் இது மாதிரி பாதுகாப்பு தொடரும் உதாரணமா பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எந்த தேர்தலிலும் ஜெயித்தது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பெரிய கட்சியும் அல்ல. ஆனாலும் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது (பிறகு அவரே அந்த பாதுகாப்பு வேண்டாம் என சொல்லிட்டார்) தவெக ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் முன்பு முதல்வர் விஜய் அவர்களுக்கு கூட Z பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் 1995-2001 வரை பதவியில் இல்லாத போதும் அவருக்கு Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா கைதாகி பதவி இழந்து சிறையில் இருந்த போதும்.. ஜாமீனில் வெளி வந்த போது அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அரசியல் தவிர.. முக்கிய மத தலைவர்களுக்கு கூட Z பாதுகாப்பு உள்ளது தமிழ்நாட்டில் சில ஆதீனங்கள், பீடாதிபதிகள் அவ்வளவு ஏன் யோகா நிலையம் நடத்துவோருக்கு கூட...

நிலவன் டிவியின் இன்றைய தலைப்பு செய்திகள்!!

படம்
ராகுல்காந்தியை பிரதம வேட்பாளாராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்தே வெளியேறுவோம் 2029 பாராளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல் காந்திதான். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம். காங்கிரஸை சேர்ந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் *ராஜகோபுரம் மீண்டும் திறப்பு* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு ராஜ கோபுர வாசல் திறக்கப்பட்டது  தீ விபத்து காரணமாக மூடப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபமும் 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை ✦ வேளாங்கண்ணியில் இருந்து திரும்பிய போது துயரம் ✦ கோயிலுக்கு வந்த‌போது சோகம் ✦ ``இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று நினைக்கிற எந்த ஒரு இந்துவும் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதே இந்துத்துவா ✦ விஜய்-வெற்றிமாறன்-சுதா கொங்கரா COMBO? ✦"3 அமைச்சர்கள் மட்டுமே" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு ✦ "இந்த ஆட்சியில் குறு...

இயற்கையை மனிதன் பாழாக்கியதன் விளைவே இயற்கைச் சீற்றங்கள் என, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டு நிறுவனர் தின விழா நிகழ்ச்சியில் குருஜி ஷிவாத்மா தெரிவித்துள்ளார்!!

படம்
கோவை கருமத்தம்பட்டி -  அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது  ஆண்டு நிறுவனர்  தின விழா  ஆசிரம வளாகத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள்,  பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.   ஆசிரமத்தின் நிறுவனர் தின விழா மற்றும் குரு ஜெயந்தி விழா ஆசிரம வளாகத்தில் அமைதியான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் ஆசிரம வளர்ச்சிக்குத் துணைநிற்கும் நன்கொடையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் மகிழ்விக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்   கூறுகையில், சமுதாயத்திற்கு உண்மையாகவும், நேர்மையாகவும், அறவழியிலும் தொண்டாற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் தமிழக அரசு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். நற்பணிகளைச் செய்பவர்களை ஊக்கப்படுத்...

புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை!!..

படம்
தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் தங்களின் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் மூலம் எளிதாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. முகவரி சான்று ஏதேனும் ஒன்று: ஆதார் அட்டை, எரிவாயு சிலிண்டர் பில், மின்சாரக் கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது வங்கி கணக்கு புத்தகம். தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர். சிவகுமார்!!

படம்
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த  சாஜி அவர்களின் குழந்தையின் பிறந்தநாள் விழா, சுசீந்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத் தலைவர். டாக்டர். சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர். பிறந்தநாள் விழா மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி !!

படம்
சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி தொழிலதிபரிடம்  ரூ. 40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் இருந்து ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் யாணைக்கவுனி போலீஸார் கடந்த ஆக - 03 - ந் தேதி கைது செய்தனர் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர் இந்த   மனு நீதிபதி பி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது அப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது என எதிர்ப்பு தெரிவிக்கப...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு முதல்வர். விஜய் வருகை! - வருகிறாரா ?

படம்
மதுரை மாவட்டம்,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள முதல்வர். விஜய்க்கு அழைப்பு விடுத்திருப்பதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா கூறியுள்ளார்.  உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வருகிற செப் - 17 - ந் தேதியில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது கோயில் குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மேலும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன குடமுழுக்கு விழாவின் போது 5.000 போலீஸார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் இதனிடையே கோயில் குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் நிர்மல் குமார் எம்.எல்.ஏக்கள் மதார் பாதுருதீன் கருப்பையா கோபிசன் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்கிருஷ்ணா காவல் ஆணையர் ராஜேந்திரன் அறங்காவலர் செல்லையா கோயில் இணை ஆணையர். செல்லத்துரை உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் முதல்வர். விஜய் கலந்து கொள்வாரா என மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் செய்தியாளர்களுக்குப் பதிலள...

ஆம்பூர் அருகே பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விற்பனை! -4 பேர் கைது!!

படம்
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மாங்காதோப்பு, பாஷாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ரஹ்மத்துல்லா - ஹவாமா தம்பதியினர், இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண்பிள்ளைகள் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 14 ஆம் தேதி ஹவாமாவிற்கு 5 ஆவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையை, தனது உறவினர்கள் மூலம் பெங்களூரை சேர்ந்த ஷம்ரின் தாஜ் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயிற்கு விற்றுள்ளனர், இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் சுகப்பிரியா அளித்த புகாரில், பெங்களூர் சென்று குழந்தையை  காவல்துறையினர், மீட்ட நிலையில், இதுதொடர்பாக, குழந்தையை விற்ற பெற்றோர் மற்றும் வாங்கிய நபர்கள் என 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்களின் சடலம் மீட்பு!!

படம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் விவசாயி பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு! மீட்கப்பட்ட சிறுவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆலங்காயம் போலீசார் தீவிர விசாரணை. சம்பவ இடத்தில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர். மகாலட்சுமி விசாரணை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

ராமேஸ்வரம் ஸ்ரீ குழந்தை வேலன் திருக்கோயில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்! – தவெக மாவட்டச் செயலாளர். மலர்விழி ஜெயபாலா தலைமையில் மாபெரும் அன்னதானம்!!

படம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மல்லிகை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குழந்தை வேலன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவின் சிறப்பு நிகழ்வாக பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர். மலர்விழி ஜெயபாலா தலைமையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமேஸ்வரம் நகர் இணை பொறுப்பாளர் பொன் பஞ்சா சிறப்பாக செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்று விழாவை சிறப்பித்தனர். மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

மாவட்ட அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம்!!

படம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையர், சேப்பாக்கம், சென்னை -5  அவர்களின் கடிதம். மாணவர்களின் கல்வி உதவித்தொகை சம்மந்தமாக அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக. தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி! -தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெற்றதில் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுவாக ஆர்வமுடன் பங்கேற்பு!!

படம்
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி சார்பில் உள்நாட்டு ஹேக்கத்தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… குறிப்பாக  36 மணி நேர தொடர் ஹேக்கத்தானாக  நடைபெற்ற இதல்,. வழக்கமான வகுப்பறைச் சூழலைத் தாண்டி, மாணவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் தங்கள் குழுவினருடன் இணைந்து சிந்தித்து, திட்டமிட்டு, செயல்படுத்தி, சோதனை செய்து, தங்களது தீர்வுகளை முன்வைக்கும் வாய்ப்பைப் பெற்றனர். ஹேக்கத்தானில் கணினி சார்ந்த படிப்புகளைப் பயிலும் மாணவர்களுடன், தகவல் தொழில்நுட்பம் சாராத பிற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து பங்கேற்றனர். தலா 6 மாணவர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, வழங்கப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு புதுமையான யோசனைகளை மாணவர்கள் முன்வைத்தனர். இறுதியாக மாணவர்கள் உருவாக்கிய தீர்வுகளை தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் ...