ராணிப்பேட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ராகுல் காந்தி மீது உத்தரகாண்ட் மாநில அரசு வன்கொடுமை வழக்கு பதிவு செய்ததை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் !!
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். நரேஷ் குமார் தலைமை தாங்கி பேசினார். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர். ராஜ்குமார்,மனித உரிமைகள் துறை மாநில துணைத்தலைவர். லாலாப்பேட்டை.
கோட்டீஸ்வரன்,முன்னாள் மாவட்ட தலைவர். பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர். ராகுல் காந்தி மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டதற்காக மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் வட்டார, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உருவபடம் எரிக்க முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக