கழகத் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு இருந்த Z+ பாதுகாப்பு வாபஸ்!!
இனி மாநில போலீஸ் பாதுகாப்பு மட்டுமே இருக்குமாம். Z வகை பாதுகாப்பு என்பது ஒருவர் என்ன பதவியில் இருக்கார்னு பார்த்து முடிவு செய்வது அல்ல. அவரது முக்கியத்துவம், அவருக்குள்ள அச்சுறுத்தல்கள் இதெல்லாம் வெச்சு தான் தீர்மானிப்பாங்க. MLA MP அமைச்சர் பதவிகள் இல்லை என்றாலும் இது மாதிரி பாதுகாப்பு தொடரும் உதாரணமா பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எந்த தேர்தலிலும் ஜெயித்தது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பெரிய கட்சியும் அல்ல. ஆனாலும் அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு இருந்தது (பிறகு அவரே அந்த பாதுகாப்பு வேண்டாம் என சொல்லிட்டார்) தவெக ஆரம்பித்து தேர்தலை சந்திக்கும் முன்பு முதல்வர் விஜய் அவர்களுக்கு கூட Z பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் 1995-2001 வரை பதவியில் இல்லாத போதும் அவருக்கு Z+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது
2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா கைதாகி பதவி இழந்து சிறையில் இருந்த போதும்.. ஜாமீனில் வெளி வந்த போது அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அரசியல் தவிர.. முக்கிய மத தலைவர்களுக்கு கூட Z பாதுகாப்பு உள்ளது தமிழ்நாட்டில் சில ஆதீனங்கள், பீடாதிபதிகள் அவ்வளவு ஏன் யோகா நிலையம் நடத்துவோருக்கு கூட Z பாதுகாப்பு உண்டு இதெல்லாம் ஏற்கனவே சொன்னது மாதிரி அவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் அடிப்படையில் கொடுப்பார்கள்
திமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதன் தலைவருக்கு உள்ள அச்சுறுத்தல்கள் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் அவருக்கான பாதுகாப்பை விலக்கி இருப்பது சிறுபிள்ளை தனமானது. இங்கே சிலர் முதல் அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்து இருக்கும் என சொல்வதை பார்க்கலாம் ஆனால் Z பிரிவு பாதுகாப்பை விலக்குவது என்கிற முடிவை முதல் அமைச்சர், DGP, உள்துறை செயலாளர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தான் எடுக்க முடியும். வேறு யாருக்கும் இதில் அதிகாரம் இல்லை.
திமுகவை பொறுத்தவரை Z பாதுகாப்பு இல்லை என வருத்தப்படும் இயக்கம் அல்ல. வலுவான தொண்டர்படை கொண்ட கட்டுக்கோப்பான இயக்கம் தான். ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு ஸ்டாலின் அவர்கள் தனக்கான மத்திய அரசின் Z+ பிரிவு பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தலாமே என அவர்களை அனுப்பி வைத்தவர் தான். அதற்கு பதிலாக மாநில அரசின் சிறப்பு பாதுகாப்பை எடுத்து கொண்டார். 2021-26 அவர் முதல்வர் என்பதால் அவருக்கு தனக்கான பாதுகாப்பை தீர்மானிக்கும் அதிகாரம் இருந்தது
ஆனால் முன்னாள் முதல்வர் ஆனதும் மூணே மாசத்தில் அவருக்கான பாதுகாப்பை விலக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமான சிந்தனை கொண்ட அரசு நமக்கு அமைந்து இருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த சூழலில் தான் ஜெயலலிதா அவர்கள் பதவியில் இல்லாத போதும் முழுவதுமாக Z+ பாதுகாப்பு கொடுத்த அப்போதைய திமுக அரசை நினைத்து பெருமிதமாக உள்ளது எனக்கு. கலைஞர் எதிர்கட்சியாக இருந்த போது அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஜெயலலிதா அவர்கள் சொல்லி சிறப்பு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என கலைஞருக்கு கடிதம் எழுதினார். அப்படியான தலைவர்கள் முதல் அமைச்சராக இருந்த மாநிலம் இது. தலைவர்கள் பாதுகாப்பில் இதுவரை எந்த அரசும் இத்தனை அலட்சியமாக இருந்தது இல்லை.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக