நத்தம் அருகே ஏஜெண்டு வீட்டின் செப்டிக் டேங்கில் பணம் - செப்டிக்டேங்க்கை தோண்டும் பணியில் போலீசார்!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அருகே FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் ஏஜெண்டுகள் 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று பணம் பட்டுவாடா நடைபெறுவதாக வந்த வதந்தி தொடர்ந்து ஏஜென்ட் ரமேஷ் வீட்டை 1000-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இந்நிலையில் ஏஜென்ட் ரமேஷ் *வீட்டில் செப்டிக் டேங்கில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை* தொடர்ந்து இன்று போலீசார் முன்னிலையில் செப்டிக்டேங்க்கை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரைவீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக