நத்தம் அருகே FQL செயலி மூலம் பணம் போட்டு பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜா(25) இவர் FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் ராஜா மன உளைச்சலில் காசம்பட்டியில் தோட்டத்து பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அவர்களிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.



கருத்துகள்
கருத்துரையிடுக