ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது கைது!!
மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ளவருமான அஸ்வத்தாமன், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூருவில் கைது. ஏற்கனவே சென்னை போலீசார் வெளியிட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில், பெங்களூரில் இருந்து பாங்காக் தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளார். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்று பிடிபட்ட அஸ்வத்தாமனின் ஜாமினை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறையீடு செய்ய காவல்துறை முடிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக