அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன 35ம் ஆண்டு ரத்ததான முகாம்!!
அரக்கோணம் அடுத்த கீழ குப்பம் ஜவஹர் நகர் தலைமை இடமாகக் கொண்டு அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தின் 35 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இந்த முகாமிற்கு அன்னை தெரசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஐ டி தேவ ஆசீர்வாதம் தலைமை தாங்கி நடத்தினார் சங்க ஆலோசகர் ஜேக்கப் அனைவரையும் வரவேற்றார் அரசு மருத்தவமனை ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் மணிமாறன் ரத்தம் தானம் செய்யும் அன்பர்களின் உடல் பரிசோதனை செய்தார் ஆதிதிராவிட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர் சங்க மாவட்ட தலைவரும் கங்க ஆலோகருமான பிரின்ஸ் தேவ ஆசீர்வாதம் முகாமினை தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கினார் முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சந்துரு அரக்கோணம் நகர பொருளாளர் யாழினி ஆதி ஒன்றிய பொருளாளர் வஜ்ரவேல் நகர நிர்வாகி ஆர் என் குணா மற்றும் திருச்சி ஜேம்ஸ் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தேவசுந்தர் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்முகாம் ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக