புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நாள் காட்டி வழங்கிய எஸ். ஜி. சி பெருமாள்!!
ராணிப்பேட்டை மாவட்டம், 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகம் சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகளுக்கு 2026- ஆம் ஆண்டிற்கான நாள்காட்டி, இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை எஸ். ஜி. சி பெருமாள் அவர்கள் வழங்கினார்.
இதில் அவைத்தலைவர். பா. செ நரசிம்மன், ஒன்றிய பொருளாளர். ரமேஷ், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள். அ. சீனிவாசன், வழக்கறிஞர் எம். தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், மாவட்ட பிரதிநிதிகள. சி.ஜி. சண்முகம், கா.தே. தனசேகரன்,சுரேஷ், தசரதன், ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள். கலைஞர் தாசன், மணிகண்ட கருணாநிதி, அகவலம் நரசிம்மன், கிளை நிர்வாகிகள். ஜெயக்குமார், தமிழரசு, அருள், பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக