இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்! அய்மன் ஜமால் IPS பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக