இயற்கை வேளாண்மை பற்றியும் பஞ்சகவ்வியம் தயாரிப்பு முறை பற்றியும் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம் !!
உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் உசிலம்பட்டியில் பயிற்சி செய்து வருகின்றனர். உசிலம்பட்டி அருகே இடையப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை வேளாண்மையை பற்றியும் பஞ்சகவ்வியம் தயாரிக்கும் முறை பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர் .வேளாண் கல்லூரி மாணவர்கள் தர்ஷன், அருண்குமார் கார்மெலின், லித்திக் ரோஷன், கதிரவன், ஸ்ரீகாந்த் ஆகியோர் விவசாயிகளுக்கு செயல்முறையில் விளக்கினார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக