அரக்கோணம் ஒன்றிய காங்கிரசார் கையெழுத்து இயக்கம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஒன்றியம், தணிகை போலூர் ஊராட்சியில் வாக்கு திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் ஒன்றிய காங்கிரசார் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய தலைவர் . நமச்சிவாயம் தலைமை தாங்கினார் . இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு ஒன்றிய தலைவர். வாசுதேவன் கலந்து கொண்டு, கையெழுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநில பொதுகுழு உறுப்பினர். பிரவினா சரவணன் மாவட்ட செயலாளர். மங்கல சேகர், தெற்கு ஒன்றிய தலைவர். மோசூர் ஏ.ராஜேஷ் பூபதி, .பாலகிருஷ்ணன் , மாணிக்கம், வெங்கடேசன் சரவணன், நல்லமுத்து நரசிம்மன் மற்றும் திரளாக பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக