10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை ரூபாய். 5000 வழங்கிய ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,2024 - 2025 கல்வி ஆண்டில் கடலூர் மாவட்ட காவல்துறையினரின் பிள்ளைகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஊக்கத்தொகை ரூபாய். 5000 மற்றும் பாராட்டு சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயகுமார் IPS அவர்கள் வழங்கினார்.
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அனீஷ்கண்ணா, அதிஷ்வரன், நிஷாந்தி, ஹீரா, யாேகஸ்ரீ, ராகுல், அனுஜா, பாலாஜி, காவியா, சுதர்சனராஜ் மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிரணவ், ஏஞ்சல் சௌந்தரம் மேரி, திவ்யாஷ், கீர்த்திலட்சுமி, அனிஷ்கா, வைஷ்ணவி, ஸ்ரீவர்ஷினி, சஞ்சனா, ரக்ஷனா பிரியா, அக்ஷயா ஆகியோர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக