கடலூர்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது!!
கடலூர் மாவட்டம், கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் காவல்துறையினர் நேற்று புதுப்பாளையம் ஜங்ஷன் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுப்பாளையம் மசூதி தெருவைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக