வேப்பூர்: அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடுதல்!!
தூய்மை பாரத இந்தியா திட்டத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் இந்தியன் வங்கி கிளை ஈடுபட்டது. இதையொட்டி, அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்தியன் வங்கி கிளை மேலாளர். தங்கராசு மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகை மதிப்பீட்டாளர். சபரி மற்றும் வங்கி அலுவலக உதவியாளர். பிச்சைமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றும் நோக்கத்துடன் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக