ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர். எம். எ. முனியசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!
ராமநாதபுரம் மாவட்டம்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் தலைமை ஏற்று..
இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். M.A.முனியசாமி அவர்கள் முன்னிலையில்.
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர். ஆ.பவுல் மெல்க்யூர் அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 50 க்கு மேற்பட்டோர் தன்னை இணைத்துக் கொண்டனர்.
இதில் திருவாடானை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர். ஆர் ரவிச்சந்திரன், திருவாடானை தெற்கு ஒன்றிய கழக செயலாளர். சுப. ரத்தினமூர்த்தி, தொண்டி பேரூர் கழகச் செயலாளர். பி. காளிதாஸ், பாசறை மாவட்ட கழக செயலாளர். ஆர் ராம்குமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக