ராணிப்பேட்டை: பாலாற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை பலத்த பாதுகாப்புடன் சென்று பாலாற்றில் கரைக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை, நவல்பூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மூன்று இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.
இந்நிலையில் அந்த விநாயகர் சிலைகளை பாலாற்றில் கரைப்பதற்காக முத்துக்கடை, ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே உள்ள மேம்பாலம் வழியாக ஊர்வலமாக சென்று பால் ஆற்றில் கரைத்தனர் , இந்த நிகழ்ச்சிக்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் அவர்கள் ஆய்வு செய்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விழா நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடைபெற அறிவுறுத்தப்பட்டன ..மேலும் இதில் மாவட்டகாவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் , ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர். இமயவர்மன், ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக