போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திய வாகனத்தால் தகராறு!!
தேனி மாவட்டம், தேனி ,மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு எதிரே தக்காளி ஏற்றி வந்த வண்டியை போக்குவரத்துக்கு இடையூறாக இளைஞர்கள் நிறுத்தி வைத்தனர். கறிகோழி கடை வியாபாரி தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் விசாரணைக்கு வந்த காவல்துறையினர் மீது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அப்ப குதியினர் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக