கடலூரில் தீப்பிடித்த டீக்கடை: நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட எம்.எல்.ஏ!!
கடலூர் மாவட்டம்,விருத்தாச்சலம் திருவிக நகரில் சாதிக் பாஷா என்பவருக்கு சொந்தமான தேநீர் அங்காடி திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்தச் சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்ற விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ விபத்து குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட சாதிக் பாஷாவுக்கு ஆறுதல் கூறினார். மேலும், வருவாய் வட்டாட்சியரை தொடர்பு கொண்டு, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக