வடகரை: பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து செயல்முறைப் பயிற்சி!!
திட்டக்குடி வட்டம், வடகரை அரசினர் உயர்நிலைப் பள்ளியில், பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில், மாணவர்களுக்கு விதைப்பந்து செயல்முறை பயிற்சி நேற்று (ஆக. 29) அளிக்கப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர். செல்வராணி மற்றும் ஆசிரியர். பாரி ஆகியோர் மாணவர்களுக்கு விதைப்பந்து செயல்முறை குறித்து விளக்கினர். இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக