செய்யூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! ஆர்டிஓ நல உதவிகளை வழங்கினார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், செய்யூர் ஊராட்சி கிராமத்தில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அரசு பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு அரக்கோணம் தாசில்தார். வெங்கடேசன் தலைமை தாங்கினார். செய்யூர்கிராம அதிகாரி பவானி வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன், செய்யூர்
ஊராட்சி மன்ற தலைவர். ஜோதிலட்சுமி ராஜா கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அரசின் நல உதவிகளையும் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் முன்வாய்
ஊராட்சி மன்ற தலைவர். பிரேமா பழனி செய்யூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். கோட்டீஸ்வரன் அரக்கோணம் வட்டார திட்ட அலுவலர் பிரகாஷ் மற்றும் அரக்கோணம் ஒன்றிய துணைச் சேர்மன். புருஷோத்தமன் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான தமிழ்செல்வன் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர். ஆர். பி.ரவிக்குமார் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர். ஆர். பி.ராஜா உட்பட ஆத்தூர் கிராம அதிகாரி. லட்சுமி நரசிம்மன் பல்வேறு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர் முகாம் ஏற்பாடுகளை செய்யூர் ஊராட்சி மன்றம் சார்பில் செய்து இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக