வேல்முருகன் MLA முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்!!
கடலூர் மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு மாநில இளைஞரணி துணை செயலாளர். மு. சுரேந்தர் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிதம்பரம் M.Y.M பைசல் மஹாலில் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
உடன் கடலூர் மாவட்ட பொறுப்பாளர். தி.கண்ணன் மாமன்ற உறுப்பினர், மாநில இளைஞர் அணி செயலாளர். வே.க .முருகன் தொகுதி பொறுப்பாளர்கள். சு.சேரலாதன், ஆர்.கே .குமரன், எம்.ஆர் .கே .சிவக்குமார், வழக்கறிஞர். லெனின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக