குறிஞ்சிப்பாடி: பெண் மாயம்! காவல்துறை விசாரணை!!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கொத்தவாச்சேரி காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கம்சலா, திருமணம் செய்யாமல் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், அவரது சகோதரர் சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக