கடலூர் - குள்ளஞ்சாவடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் ஆனந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டுத்துறை சம்பந்தமாகவும் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் மதித்து அவர்கள் வார்த்தையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். பள்ளியில் அனைவரும் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக