கடலூர் புத்தக திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் பங்கேற்று சிறப்புரை!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட நிருவாகம் சார்பில் 3 -வது கடலூர் புத்தக திருவிழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வரவேற்புரையில் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்த கருத்துகளை கூற சிறப்பு விருந்தினர்கள் வருகை புரிந்துள்ளனர். உலகில் சாக்ரடிஸ்தான்  முதலில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்க சொன்ன பகுத்தறிவாளர். அதேபோல் அறிஞர் அண்ணா அவர்கள் மிகபெரிய புத்தக வாசிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர். நெல்சன் மண்டேலா அவர்கள் சிறையில் இருந்தபோது புதிய புதிய புத்தங்களை வாசித்தார். அண்ணல் அம்பேத்கார் அவர்கள் வெளியூர்களில் தங்கும் சமயங்களில் நூலகம் அருகில் உள்ள விடுதியில் தங்கி வாசிக்கும் பழக்கம் கொண்டவர்! 

வாசிப்பு என்பது ஆழத்தை அறிவது!

வாசிப்பு என்பது வானத்தை அளப்பது!

வாசிப்பு என்பது காலத்தை உருவாக்குவது! என சிறப்புரையாற்றினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்