கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி கலையரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி அமைச்சர். செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு!
கரூர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், இன்று, கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி கலையரங்கில், கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில்,
மாணவச்செல்வங்களுக்கு, உயர்கல்விக்கு வழிகாட்டிடும் 'என் கல்லூரி கனவு' நிகழ்ச்சியை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக