கரூர்-ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மூலம் 30 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பையை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டம்
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட திமுக சார்பில், புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இன்று கரூர் பிரேம் மஹாலில் நடைபெற்ற இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 30 வகையான மளிகை பொருட்களை உள்ளடக்கிய பையை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
-கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக