விழுப்புரம் - திரு. க. பொன்முடி வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் அவர்கள் நாயனூர் ஊராட்சியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO) தேர்வு செய்யப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு!
விழுப்புரம் மாவட்டம் மாண்புமிகு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயனூர் ஊராட்சியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDCO) அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை இன்று (29.03.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா,இ.ஆ.ப., விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர். முருகேசன், விழுப்புரம் சிட்கோ, கிளைமேலாளர். அ.முகமதா பேகம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். ஆ.சா.பிரபு உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்

கருத்துகள்
கருத்துரையிடுக