கடலூர்-பணி நிறைவு பெறும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்

 


கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.03.2025 தேதி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள்  இளங்கோவன், தகுமாரசாமி,  தெய்வநாயகம், கோபால், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,ராஜா,  ஜெயராமன், தலைமை காவலர் ஜெயச்சந்திரன், ஆகியோர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து, 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

S. ஜெயக்குமார் IPS அவர்கள் சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் மென வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற காவல் துறையினர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேமநல நிதி. குடும்ப சேமநல நிதி ஆகிய பண பயன்கள் விரைவாக கிடைக்க வேண்டும் என காவல்துறை அமைச்சுப் பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!