சின்னமனூர்: நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் !!
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளப்பட்டி நூறாண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ வெண்டி முத்தையா திருக்கோயிலில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கிய நிலையில் இன்று காலை கடம் புறப்பாடு கும்ப கலசத்திற்கு தீர்த்தங்கள் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை அடுத்து சின்னமனூர் சுற்று வட்டார பகுதியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக