கொட்டும் மழையிலும் அரோகரா கோஷத்துடன் அரங்கேறிய அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் நூதன ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!
கடலூர் மாவட்டம், வடலூர் மாருதி நகரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ தட்ஷணாமூர்த்தி ஆலய ஜீரணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலதாளங்களுடன் மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடைபெற்று விமானதினை அடைந்தது.அதனை தொடர்ந்து ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கோயிலில் சுற்றி இருந்த முருக பக்தர்கள் கொட்டும்ஙமழையில் அரோகரா அரோகரா என பக்தி பரசவசத்துடன் மகா கும்பாபிஷேகத்தினை கண்டு களித்தனர்.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர்.. சிவக்குமார் வடலூர் நகர மன்ற தலைவர். சிவக்குமார் கவுன்சிலர். கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.





கருத்துகள்
கருத்துரையிடுக