உசிலம்பட்டி செக்கானூரணி பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாசன நீர் திறப்பு!!
செக்கானூரணி பள்ளியான் கொக்குளம் சுற்றுவட்டார விரிவாக்க கால்வாயில் இருந்து இன்று சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் திறக்கப்பட்டது இதன் மூலம் 350 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெற உள்ளன.
செக்கானூரணி, ஊர்குளம் ,புளியங்குளம் கோரைக்கண்மாய் ,
கின்னிமங்கலம் கீழ்கண்மாய் உள்ளிட்ட முக்கிய கண்மாய் களுக்கு நீர் சென்று சேரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீர் திறந்து விடப்பட்டது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நீரை திருமங்கலம் பாசன கூட்டத் தலைவர் எம் பி ராமன் திறந்து வைத்தார் நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக