பண்ருட்டியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு!


கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது.பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தலைமையில் இதற்காக பயிற்சியளிக்கப்பட்டது. இதை வேளாண்மை அலுவலா் அனிதா, துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் காா்முகிலன் ஆகியோா் முன்னின்று நடத்தினா். தொடா்ந்து, செட்டிபாளையத்தில் நெல் வயல்களில் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு தொடா்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 39 வருவாய் கிராமங்களிலும் இந்தப் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!