ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கார் மற்றும் கனரக வாகன வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு கார் மற்றும் கனரக வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின் சார்பில். தமிழ்நாடு அரசின் (RTO ) போக்குவரத்து துறையின் புதிய சட்டத்தின் படி RC புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி RC புத்தகம் நேரில் வழங்க வலியுறுத்தியும்.
போக்குவரத்து துறையில் ( RTO ) பணியாளர்களை நியமிக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், மாதவன், சபாபதி, ஆகியோர் தலைமை வகித்தனர்.மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர், கலில்லு லா,
பாலாஜி, ராதாகிருஷ்ணன், மோகன்ராஜ் , ஏழுமலை, குமார், ஆறுமுகம், மகேஷ் ராணிப்பேட்டை மாவட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் அனைவரும் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்



கருத்துகள்
கருத்துரையிடுக