கடலூரில் இன்று பணி ஓய்வு பெறும் காவல்துறையினருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!



கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.05.2025 தேதி பணிஓய்வு பெறும்  ஆய்வாளர். R. தணிகாச்சலம்,  உதவி ஆய்வாளர்கள். P .K. முருகன்,T.  வெங்கடேசன், C.  கிருஷ்ணமூர்த்தி, G.  மணிவண்ணன், B.சாமிநாதன் மற்றும் P. ஜான்பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள். A. ரகுமாறன், K. குமார், C.  நாகராஜன்,M.  நடராஜன், N. மணிவேலன்  ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர். 

S. ஜெயக்குமார் IPS அவர்கள் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!