குடியாத்தம் எல்ஐசி அலுவலகத்தில் நடைபெற்ற புதிய பாலிசி வெளியீட்டு விழா!!
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் ஆயில் காப்பீட்டுக் கழகத்தின் புதிய பாலிசி வெளியிட்டு விழா ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 70 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிதாக ஜீவன் ரக்க்ஷா,பீமா பிளாட்டினம் ஆகிய பாலிசிகள் இன்று வெளியிடப்பட்டது.
குடியாத்தம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் பொகலூர் டி. பிரபாகரன்புதிய பாலிசிகளை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். வேலூர் கோட்ட திட்ட மேலாளர் எஸ். மணிகண்டன் தலைமை தாங்கினார். தென்மண்டல முகவர் சங்க பொதுச் செயலாளர் ஜே கே என் பழனி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி அலுவலர் அன்பழகன், அலுவலக ஊழியர்கள் சரவணன் இளங்கீரன் உதவி நிர்வாக அதிகாரிகள் எஸ் சுதாகர் சி சுந்தர் மற்றும் முகவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தாக்கம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக